வியாழன், 4 டிசம்பர், 2014

எது நடந்தாலும் நல்லதே நடக்கும் என நம்முடைய மனதில் கொண்டு செயல்படுவோம்


புதியதாக திருமணம் ஆன ஒரு மனிதன் தன்னுடைய இளம் மனைவியுடன் படகு ஒன்றில் ஒரு ஏரி வழியே தங்களுடைய வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தான். , அந்த மனிதன் ஒரு போர்வீரன் ஆவான் திடீரென ஒரு பெரிய புயல் உருவாகி உக்கிரமாக வீச ஆரம்பித்தது தொடர்ந்து அவர்கள் பயனம் செய்த படகு மிகச்சிறியதாக இருந்தது மேலும் அந்த படகு எந்த நேரத்திலும் மூழ்கிவிடுவதை போன்று தத்தளித்துகொண்டும் மேலும் கீழும் மிகவேகமாக அசைந்து கொண்டிருந்தது., அதனால் அந்த இளம் பெண் நம்பிக்கையற்ற நிலையில் மிகவும் பயந்து இப்போது நாம் சாகப்போகின்றோம் என உயிர் பயத்தில் கத்திகொண்டிருந்தால். ஆனால் அந்த மனிதன் மட்டும் மெளனமாக எதுவுமே நிகழாதவாறு மிக அமைதியாக இருந்தான்

அதனை கண்ணுற்ற அந்த பெண் மேலும் பயந்து நடுங்கி கொண்டு, "உங்களுக்கு பயமேயில்லையா?". இதுவே நம்முடைய வாழ்வின் கடைசி நிமிடமாக இருக்கலாம் அல்லவா! எதாவதொரு அதிசயம் நடந்தால் மட்டுமே நாம் இந்த இயற்கை பேரழிவிலிருந்து தப்பிக்க முடியும்; இல்லையெனில் நமக்கு மரணம் நிச்சயம் உண்டு” என பயத்துடன் நடுங்கி கொண்டு கீரீச்சிட்டு கத்தினாள்

அதற்கு அம்மனிதன் மிக மென்மையாக சிரித்தான் தொடர்ந்து தன்னிடமிருந்த வாள்ஒன்றை அதன் உறையிலிருந்து வெளியே எடுத்தார். அதனை கண்ணுற்ற அவருடைய மனைவி நம்முடைய கணவர் இப்போது எதற்கு வாளை போரிடபோவது போன்று வெளியிலெடுக்கவேண்டும் என அந்த செயலை மிக அதிசயமாக விளையாட்டாக பார்த்தார் தொடர்ந்து அம்மனிதன் அந்த வாளினை அப்பெண்ணின் கழுத்தை வெட்டுவதை போன்று மிக நெருக்கமாக தொடும்படி வைத்தகொண்டு

" நான் இந்த கத்தியால் உன்னுடைய கழுத்தினை வெட்டபோகின்றேன் அதனால் நீ இப்போது பயப்பட வில்லையா கிறாயா? ', என வினவினார்

உடன் அவ்விளம் மனைவி சிரிக்க தொடங்கினாள் தொடர்ந்து நான் ஏன் பயப்பட வேண்டும் ", என்று வினவியதுடன் இந்த வாள் உங்கள் கைகளில் தான் இருக்கிறது, ஆயினும் நீங்கள் உயிருக்குயிராக என்மீது அன்பு செலுத்திடும் நிலையில் என்னை எவ்வாறு கொல்ல துணிவீர்கள் . அதனால் , நான் ஏன் பயப்பட வேண்டும்? " என பதிலிறுத்தாள் உடன் அந்தமனிதன் தன்னுடைய வாளை மீண்டும் உறைக்குள் வைத்துவிட்டு, பார்த்தாயா உன்னுடைய சொல்லிலேயே நீகேட்ட கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது அதாவது கடவுள் நம்மிடம் அன்பு செலுத்துகின்றார் என்பது நமக்கு தெரியும் மேலும் இந்த புயலின் செயல் அதன் விளைவு ஆகிய அனைத்து நிகழ்வுகளும் அந்த கடவுளின் கைகளில்தான் உள்ளது

. அதனால் தற்போது எதுநடந்தாலும் நன்றாகத்தான் நடக்கும் மேலும் நாம் உயிருடன் வாழ்கின்றோம் எனில் அதுவும் நல்லதுதான் அல்லது நம்மால் வாழமுடியவில்லை நாம் இறக்கபோகின்றோம் என்றாலும் அதுவும் நல்லதுதான் ஏனெனில் எந்தவொரு நிகழ்வும் அந்த கடவுளின் கையில் மட்டுமே உள்ளது அதனால் அவர் நமக்கு எதிராக எதையும் அவரால் தவறாக செய்யமுடியாது

நீதி நம்முடைய முழு வாழ்வையும் மாற்றியமைத்திடும் திறன் கடவுள் ஒருவரிடம் மட்டுமேஉள்ளது ஆயினும் எந்தவொரு நிகழ்விற்கும் ஏதோவோரு காரணம் இருக்கும் அதனால் எது நடந்தாலும் நல்லதே நடக்கும் என நம்முடைய மனதில் கொண்டு செயல்படுவோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...