செவ்வாய், 30 டிசம்பர், 2014

எதிர்கொள்ளும் எந்த பிரச்சினைக்கும் சிக்கல் இல்லாத எளிய தீர்வை கண்டு செயல்படுத்தி பயன்பெறுக


ஆவின் நிறுவனத்தில் பால்கோவாஉற்பத்தி செய்திடும் பகுதியில் உற்பத்தி செய்த பால்கோவாவை சிறிய பெட்டியில் வைத்து கட்டும் பிரிவு ஒன்று இருந்தது அவ்விடத்தில் நூறு பெட்டிக்கு ஒன்று என்றவாறு அவ்வப்போது பால்கோவாவை பெட்டியில் வைத்து கட்டபடாமல் இடையிடையே காலியான பெட்டிகளும் வெளியில் வந்துகொண்டிருந்தன.

இதனை அறிந்த ஆவின் நிறுவனத்தின் மேலாண்இயக்குநர் தனக்கு கீழ் பணிபுரியும் உற்பத்தி மேலாளரையும் பால்கோவாவை பெட்டியில் வைத்து கட்டபடும்பிரிவு மேற்பார்வையாளரையும் பணியாளர்களையும் அழைத்து கண்டிப்பாக இவ்வாறானநிகழ்வு ஏற்பட்டால் சம்பந்தபட்ட அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்தார்.

அதன்பின் இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்வு செய்வது என்று தலைமை அலுவலர்களின் கூட்டத்தில் ஆய்வுசெய்தபோது உற்பத்தி பொறியாளர் அந்தஇடத்தில் எக்ஸ்-ரே கருவி ஒன்றை அமைத்து பெட்டிகளில் ஏதேனும் காலியாக சென்றுகொண்டிருந்தால் அதனை கண்டுபிடித்திடவும் அதனடிப்படையில் அந்த காலிபெட்டியில் மட்டும் மீண்டும் பால்கோவாவை வைத்து கட்டி அனுப்பிடுமாறு செய்தால் இந்த பிரச்சினை தீர்வுசெய்யபட்டுவிடும் என கூறியதை ஏற்று அந்த தலைமை அலுவலர்கள் கூட்டத்தில் அதனையே செயல்படுத்துவது என ஒருமனதாக முடிவுசெய்தனர்.

அதனைதொடர்ந்து அந்ததீர்வை நடைமுறைபடுத்தினர் இந்நிலையில் அந்நிறுவனத்தில் உற்பத்தி கணக்கருக்கு இந்த செய்தி கிடைத்தவுடன் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார் பிறகு அங்கு இந்த எக்ஸ்ரே கருவிக்கு பதிலாக ஒரு காற்றாடி ஒன்றை அமைக்கும்படி கூறி அந்த காற்றாடியின் சுழற்சியினால் ஏற்படும் வேகமான காற்றோட்டத்தின்மூலம் காலியான பெட்டி மட்டும் அந்த காற்றில் பறந்து செல்லுமாறும் அதன்பின்னர் அந்த காலியான பெட்டிகளைசேகரித்து மீண்டும் பால்கோவாவை நிரப்பும் படியும் செய்யபட்டது

இதனால் விலை அதிகமான எக்ஸ்ரே கருவிக்கு பதிலாக விலைகுறைந்த காற்றாடியாலேயே அந்த பணியை செய்யமுடிந்ததை கண்ணுற்ற மேலாண்மை இயக்குநர் உற்பத்தி கணக்கரின் இந்த பிரச்சினைக்கான எளிய தீர்வை பாரட்டினார்

ஆம் நாமும் எதிர்கொள்ளும் எந்த பிரச்சினைக்கும் சிக்கல் இல்லாத எளிய தீர்வை கண்டு செயல்படுத்தி பயன்பெறுவோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...