வெள்ளி, 5 டிசம்பர், 2014

நம்முடைய அன்பையும் ஆதரவான சொற்களையும் யாருமற்ற அனாதையாக இருப்பவர்களுக்கு வழங்கிடுவோம்


ஒரு வயதான மனிதன் அவருக்கு ஏற்பட்ட தீவிர மாரடைப்பில் உருவான வலியால் தன்னுடைய இறுதி பயனத்திற்கு ஆயத்தமாக படுக்கையில் மயக்கமுற்று சோர்வாக படுத்திருந்தார் அப்போது அவரை கவணித்து கொள்ளும் செவிலியர் அவருடைய படுக்கைக்கு அருகில் துடிப்புள்ள இளைஞன் ஒருவனை அழைத்து வந்து " ஐயா! உங்களுடைய மகன் உங்களை பார்ப்பதற்காக இங்கே வந்துள்ளார் கண்திறந்து பாருங்கள் ," என அந்த வயதான மனிதனை அழைத்தார் ஆயினும் அந்த வயதான மனிதன் கண்திறக்கவில்லை அதனால் அவள் தொடர்ந்து " ஐயா! உங்களுடைய மகன் உங்களை பார்ப்பதற்காக இங்கே வந்துள்ளார் கண்திறந்து பாருங்கள் ," என மீண்டும் மீண்டும் பல முறை அந்த வயதான மனிதனை அழைத்தார்

ஏனெனில் அவருக்கு ஏற்பட்ட மிக தீவிர மாரடைப்பின் வலியால் மயக்கமுற்று படுத்திருந்தார் இருந்தபோதும் செவிலியரின் விடாமுயற்சியின் அழைப்பால், இறுதியாக அந்த வயதான மனிதன் தன்னுடைய படுக்கைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த கப்பல் படையின் சீருடையணிந்த இளைஞனை தன்னுடைய மங்கலான கண்களால் பார்த்தார். தொடர்ந்து தன்னுடைய தளர்ந்த கைகளை அந்த இளைஞனின் கைகளை பிடிப்பதற்காக நீட்டினார் உடன் அந்த இளைஞன்.தன்னுடைய கைகளால் ஆதரவாக அவருடைய கைகளை அழுத்தி பிடித்துகொண்டு அதன் வழியே தன்னுடைய அன்பையும் ஆதரவையும் வழங்கினார் இந்நிலையில் அந்த செவிலியர் அந்த படுக்கைக்கு அருகில் அந்த இளைஞன் உட்காருவதற்கு வசதியாக ஒரு நாற்காலியொன்றை கொண்டுவந்த வைத்து அந்த இளைஞனை அந்த வயதான மனிதனுக்கு அருகில் சிறிதுநேரம் உட்காரும்படி வேண்டினார் அவ்விளைஞனும் இரவு நீண்டநேரம் கண்மூடி தூங்காமல் அந்த வயதானமனிதனின் படுக்கைக்கு அருகில் வைத்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு அந்த வயதான மனிதனின் கைகளை தொடர்ந்து இறுக்கமாக பிடித்துகொண்டு அவருக்கு தன்னுடை அன்பையும் ஆதரவையும் அளித்துகொண்டிருந்தார் இதனை கண்ணுற்ற அந்த செவிலியரும் அவ்வப்போது வந்து அவ்விளைஞனிடம் சிறிதுநேரம் ஓய்வுஎடுத்து கொள்ளும்படி பரிந்தரைத்தார்

ஆயினும் அந்த இளைஞன் ஒரு வயதான மனிதன் உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது தான் ஓய்வு எடுத்துகொள்ள விரும்பவில்லை என மறுத்துவிட்டார். அந்த செவிலியரும் அவ்வப்போது இந்த படுக்கைக்கு அருகில் வந்து பார்க்கும்போதெல்லாம் அவ்விளைஞன் தன்னுடைய கைகளால் அந்த வயதான மனிதனின் கைகளை ஆதரவாக தொடர்ந்து பிடித்து கொண்டிருந்ததை கண்டார் இரவு பணியில் ஈடுபட்டவர்களின் சிரிப்பு சத்தமும் நோயாளிகளின் வலியால் ஏற்படுத்திய முனகல்களும் சத்தமும் இரவு முழுவதும் இருந்துவந்தாலும் தொடர்ந்து அவ்விளைஞன் தன்னுடைய கைகளால் அந்த வயதான மனிதனின் கைகளை ஆதரவாக பிடித்து கொண்டேயிருந்தார்

அந்த செவிலியரும் அவ்வப்போது இந்த படுக்கைக்க்கு அருகில் வந்து பார்க்கும்போதெல்லாம் அவ்விளைஞன் தன்னுடைய கைகளால் அந்த வயதான மனிதனின் கைகளை ஆதரவாக தொடர்ந்து பிடித்து கொண்டு உங்களுக்கு ஒன்றுமில்லை நீங்கள் நன்றாக இருக்கின்றீர்கள் எழுந்து நடமாட போகின்றீர்கள் என்ற ஆதரவான சொற்களை அந்த இளைஞன் அந்த வயதான மனிதனிடம் கூறிக்கொண்டிருப்பதை கண்டு சென்றார் அந்த வயதான மனிதனும் அந்த இளைஞனின் கைகளை இரவுமுழுவதும் இறுக்கமாக பிடித்துகொண்டிருந்தார்

விடியற்காலையில் ஒருவழியாக,அந்த வயதான மனிதன் இறந்ததை கண்ட அவ்விளைஞன் தான் பிடித்திருந்த அந்த உயிரற்ற கைகளை விட்டிட்டு அந்த செவிலியரிடம் இந்த தகவலை கூறுவதற்காக சென்றார்

.அந்த செவிலியரும் தன்னுடைய இதர நோயாளிகளுக்கான பணிவிடைகளை செய்துமுடித்து இந்த படுக்கைக்கு திரும்பி வந்தார் அப்போதுதான் "அந்த மனிதன் யார்?" என அந்த இளைஞன் செவிலியரிடம் வினவியபோது "அவர்தான் உங்களுடைய தந்தை ," என செவிலியர் பதிலிறுத்தார் அதன்பின்னர் ‘’வயதானவருக்கு தன்னுடைய இறுதி தருனத்தில் அவருடைய மகனை காண விரும்பினார் அதனால் உங்களை அவருக்கு ஆதரவாக அவருடைய மகனாக இருக்குமாறு ஏற்பாடு செய்தேன்’’ எனகூறியதை தொடர்ந்து அவ்விளைஞன் ‘’நானும் அதனை தெரிந்துகொண்டேன் அதனால் தான் வயதான மனிதன் தன்னுடைய இறுதிநேரத்தில் அமைதியாகவும் ஆதரவாகவும் இருக்கவேண்டும் என்று நான்கூட அவருடைய கைகளை அன்பாக பிடித்துகொண்டே படுக்கைக்கு அருகில் இரவுமுழுவதும அமர்ந்திருந்தேன்’’ என கூறினார்

ஆம் வாருங்கள் நாமும் நம்முடைய அன்பையும் ஆதரவான சொற்களையும் யாருமற்ற அனாதையாக இருப்பவர்களுக்கு வழங்கி அவர்களுடைய அமைதியான நிம்மதியான வாழ்விற்கு வழியமைத்திடுவோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...