சனி, 6 டிசம்பர், 2014

யாரும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமலும் அவர்களை தீயவழியில்செல்ல தூண்டாமலும் இருந்தால் இவ்வுலகில் வாழும் அனைவரும் மிக நல்லவர்களாகவே இருப்பார்கள்


புத்தர் இவ்வுலக வாழ்க்கையை வெறுத்துதம்முடைய இளவரசர் எனும் பட்டத்தை துறுந்து துறவறம் பூண்டு வொகுதூர நாடுகளுக்கெல்லாம் பயனம் செய்து இவ்வுலக மாந்தர்கள் துன்பங்கள் எதவுமில்லாமல் இன்பமயமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வழி ஏதேனும் உள்ளதா என தேடிக்கொண்டிருந்தார் இந்நிலையில் அவரது புத்திசாலித்தனத்திலும், இளமையான அழகான உருவத்திலும் அவருடைய உடலைசுற்றி இருந்த ஒளிவட்டத்திலும் மயங்கி அவரை ஏராளமான மக்கள் பின்தொடர்ந்து சென்றனர். அவர்களுள் அம்பாசாலி எனும் பெண் ஒருத்தியும் இவருடைய அறிவுத்திறனில் மயங்கி பின்தொடர துவங்குவதற்காக புத்தரை அணுகி, "ஓ! அரசே, நீங்கள். இந்த உலக வாழ்வை துறந்து காவி அங்கியை அனிந்திருந்தாலும் ஒரு இளவரசர் போலவே இருக்கின்றீர் அதனால் இந்த இளம் வயதில் ஏன் நீங்கள் துறவறம் பூண்டு காவி உடையை அணிந்துகொண்டீர் என நான் அறிந்துகொள்ளலாமா?" என வினவினார் அதற்கு புத்தர் அவர் மூன்று பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அடைய தான் துறவறப் பாதையை தேர்வுசெய்த்தாக பதிலளித்தார்

. அதாவது "இந்த உடலானது தற்போது இளமையாகவும் அழகானதாகவும் உள்ளது ஆனால் காலபோக்கில் முதுமையுற்றும், நோயுற்றும், இறுதியில் அழிந்து மரணமுறவும் செய்வதற்கு காரணம் என்னவென்றும் அதன் உண்மைநிலையாது என்றும் தெரிந்துகொள்ளவே நான் துறவறம் பூண்டேன் ." என கூறினார் .இவருடைய உண்மை தேடலால் ஈர்க்கப்பட்ட அப்பெண் புத்தரை தன்னுடைய இல்லத்திற்கு மதியஉணவு அருந்த வருமாறு அழைத்தார். இந்த செய்தி அந்த கிராமம்முழுவதும் பரவியது. உடன் அந்த கிராமத்து மக்கள் அனைவரும் ஒவ்வொருவராக வந்து ‘’ஐயா! தாங்கள் இளந்துறவியாக உள்ளீர்கள்! ஆனால், அந்தபெண்ணோ மிகமோசமான நடத்தையுள்ளவள், அவளுடைய அழைப்பை ஏற்று அவளுடைய இல்லத்திற்கு செல்லாதீர்கள்! அந்த அழைப்பையும் ஏற்கவேண்டாம்!’’, எனக் கேட்டுக் கொண்டனர்.

அவர்களுடைய புகார்களை புத்தரும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்தார் பின்னர் புத்தர் புன்முறுவலுடன் அந்த கிராமத்தின் தலைவரிடம் , "நீங்களும் கூட அந்த பெண் மோசமானவள் என கூறுகிறீர்களா?" என கேட்டார்

உடன் அந்த கிராம்த்தின் தலைவர் "ஒருமுறை இல்லை, ஆயிரம் மடங்கு அந்த பெண் அம்பாசாலி தீய நடத்தை கொண்டவள் என நான் கூறுவேன் அதனால். அவளுடைய வீட்டிற்கு மட்டும் நீங்கள் செல்லவேண்டாம்" என்று பதிலளித்தார்.

உடன் புத்தர் கிராமத் தலைவருடைய வலது கையை தன்னுடைய கைகளால் பிடித்துகொண்டு,அந்த கிராமத்து தலைவரிடம் அவருடைய கைகளைத்தட்டி ஓசை எழுப்புமாறு கோரினார்

அதற்கு அந்த கிராமத் தலைவர் " தமது ஒரு கையை புத்தர் பிடித்திருப்பதால் மற்றொரு கையை மட்டும் தட்டி ஒலி எழுப்பமுடியாது யாரும் தன்னுடைய ஒரு கையால் மட்டும் கைத்தட்டி ஒலி எழுப்ப சாத்தியமே இல்லை", என பதிலிறுத்தார்

தொடர்ந்து புத்தரும் " ஆம் அவ்வாறுதான் இந்த கிராமத்தில் மோசமான நடத்தை கொண்ட ஆண்கள் இல்லாமல் அந்த பெண் அம்பசாலி மட்டும் எவ்வாறு மோசமான நடத்தை கொண்ட பெண்ணாக மாறமுடியும் ", என்றார். தொடர்ந்து “இந்த கிராமத்தில் உள்ள எல்லா ஆண்களும் நல்ல நடத்தை உள்ளவர்களாக இருந்தார்கள் என்றால், இந்த பெண்னும் மோசமான நடத்தைஉள்ளவளாக மாறியிருக்கமாட்டாள். எனவே, இந்த கிராமத்தில் உள்ள மோசமான நடத்தையுள்ள ஆண்களும் அவர்களுடைய பணத்திமிறுமே அந்த பெண்அம்பாசாலியை மோசமான நடத்தையுள்ளவளாக மாறிவிட்டதற்கு பொறுப்பு. ஆகும் " என கூறினார்

அதனை தொடர்ந்து "இங்கு கூடியிருக்கும் இவ்வூரின் ஆண்களில் மோசமான நடத்தைக்கான தடயமே இல்லாதவர்கள் யாராவது இருந்தால் என் முன்வாருங்கள் அவர்களுடைய வீட்டிற்கு நான் மதியஉணவுஅருந்த வரத்தயாராக இருக்கின்றேன்" என்ற கோரிக்கையை அவர்கள் அனைவரின் முன் வைத்தார்.

அவர்களுள் யாரும் அந்த கோரிக்கைக்கு முன்வரவில்லை பின்னர் புத்தர் " பார்த்தீர்களா உங்களில் யாரும் எனக்கு முன்வராத இந்த செயலினால் இந்த கிராமத்தில் மோசமான நடத்தையுள்ள ஆண்கள் பலர் உள்ளனர் என்ற உண்மை எனக்கு தற்போது தெரியவருகின்றது , அதனால் ஒரு பெண்ணை மட்டும் . அவள் மோசமான நடத்தையுள்ளவள் என சுட்டிக்காட்டுவது சரியாகாது மேலும் மோசமான நடத்தையுள்ள ஆண்கள் இந்த கிராமத்தில் இருப்பதால்தான் அந்த பெண்ணும் மோசமான நடத்தையுடைவளாக மாறியுள்ளாள் அதனால் அந்த பெண் மோசமான நடத்தை கொள்வதற்கு இந்த கிராமத்து ஆண்களும் உடந்தையாகி உள்ளீர்கள் அதுமட்டுமல்லாது நாம் நம்முடைய கைகளின் விரலை மற்றவர்களை நோக்கி நீட்டி நீ நடத்தை கெட்டவன் / கெட்டவள் என சுட்டிகாட்டிடும்போது மற்றவிரல்கள் உங்களை நோக்கியுள்ளதையும் கவணியுங்கள். "' என கூறினார் உடன் அந்த கிராமத்து மக்கள் அனைவரும் தங்களுடைய தவறை உணர்ந்து, புத்தரின் காலில் விழுந்து தங்களை மன்னிக்கும்படி கோரினர். .

அதன் பின்னர் அந்த பெண் அம்பாசாலி புத்தரின் போதனைகளை ஈர்க்கப்பட்டு, துறவறம் பூண்டு பக்தி பாதைக்குதிரும்பி பக்தி வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்தாள்.

அவ்வாறே இவ்வுலகில் வாழும் யாரும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமலும் அவர்களை தீயவழியில்செல்ல தூண்டாமலும் இருந்தால் இவ்வுலகில் வாழும் அனைவரும் மிக நல்லவர்களாகவே இருப்பார்கள் என்ற உண்மையை தெரிந்துகொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...