வெள்ளி, 28 நவம்பர், 2014

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு குழந்தையும் தத்தமது தாயின் முடிவில்லாத அன்பை எப்போதும் நினைவில் கொண்டுதத்தமது தாய்க்கு நன்றி செலுத்துவது நல்லது


ஜப்பானில் பூகம்பம் நிகழ்வு முடிந்து தணிந்த பிறகு இடிபாடுகளுக்கிடையே யாரேனும் உயிருக்கு போராடி கொண்டிருந்தால் அவர்களை மீட்பதற்கான பணிசெய்து கொண்டிருந்த ஒரு மீட்புகுழுவினர் இடிந்த வீடொன்றில், இடிபாட்டின் பிளவுகள் மூலம் ஒரு உயிரற்றநிலையில் இருந்த இளம் பெண்ணினுடைய உடலை பார்த்தனர்.

ஆனால் உயிரற்ற அந்த பெண்ணினுடைய உடலின் நிலையானது ஒரு நபர் குனிந்து வனங்குவதை போன்று உடல் மண்டியிட்டவாறு விசித்திரமாக இருந்தது; அதாவது அவருடைய உடல் முன்னோக்கி சாய்ந்தும் அவரது இரண்டு கைகளும் ஒரு பொருளை வளைந்து பாதுகாப்பதை போன்றும் இருந்தது மேலும் இடிபாடுகளுடைய அந்த வீடானது அவருடைய உடலையும் தலையையும் அழுத்தியபடி இருந்தது.

அதனால் அந்த பெண் உயிருடன் இருக்க முடியும் என்று நினைத்து, மீட்புகுழுவின் அணித் தலைவர் அந்த பெண்ணின் உடலை வெளியிலெடுப்பதற்காக இடிந்த சுவரின் ஒரு குறுகிய இடைவெளி வழியாக மிகசிரமபட்டு கையைஉள்நுழைத்து பார்த்தபோது குளிர்ந்தும் கடினமாகவும் அவ்வுடல் இருந்தை உணர்ந்து அவர் உறுதியாக காலமாகிவிட்டதாக முடிவுசெய்து அவரும் அவருடைய மீட்பு குழுவும் இடிந்த அந்த வீட்டை விட்டு அடுத்தடுத்துள்ள சரிந்துவிட்ட கட்டிடங்களில் வேறுயாரேனும் உயிரோடு இருக்கின்றனரா என தேடசென்றனர்.

ஆயினும் அந்த அணித்தலைவருக்கு முந்தை இடிபாடுகளுக்கிடையே இருந்த பெண்ணின் உடலின் நிலையை கண்டு சந்தேகம் கொண்டு அந்தஇளம் பெண்ணி இருந்த இடிந்த வீட்டிற்கு மீண்டும் வந்தார், குறுகிய பிளவுகள் மூலம் அவர் தன்னுடைய கையை மீண்டும் உள்ளே விட்டு தலைகுனிந்தநிலையில் உள்ள அப்பெண்ணினுடைய உடலின் கீழிருந்த சிறிய இடைவெளி வழியாக வேறு ஏதனும் உள்ளதாவென தேடிடமுனைந்தார்.

அந்நிலையில் திடீரென்று, அவர் மிக ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் "குழந்தையொன்று உயிருடன் இங்குள்ளது!" என கத்தினார்

உடன் மீட்பு குழுவினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மிககவனமாக இறந்த அப்பெண்ணினி சுற்றியுள்ள சிதைந்த பொருட்களின் குவியலை அகற்றினர். குனிந்து வளைந்து மண்டியிட்ட நிலையிலிருந்த அந்த தாயின் உடலுக்கு கீழ் பூக்களை பாதுகாப்பது போன்று பழைய போர்வையால் மூடப்பட்டிருக்கும் ஒரு மூன்று மாதங்களே நிறைவடைந்த சிறுவன் அமைதியாக உறங்கி கொண்டிருந்ததை கண்டு வெளியில் பத்திரமாகமீட்டெடுத்தனர்.

அதாவது அந்த பெண் தன்னுடைய உயிரை தியாகம் செய்து தன்னுடைய மகனை காப்பாற்றியிருப்பது தெரியவந்தது

உடன் மருத்துவக்குழு அங்கு வந்து அந்த சிறுவனின் உடலில் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி பார்த்த போது அப்போதும் அந்த சிறுவன் உறங்கி கொண்டிருப்பதை கண்டனர்

அதனுடன் போர்வையின் உள்ளே ஒரு செல்லிடத்து பேசி இருப்பதை கண்டனர் அதன் திரையில் ஒரு உரை செய்தி "மகனே , வருங்காலத்தில் நீ உயிருடன் இருந்தால் அப்போது எப்போதும் உன்னிடம் நான் அன்புடன் இருப்பதை நினைவில் கொள்வாயாக ." என்றிருந்தது

இந்த செல்லிடத்து பேசியின் செய்தியை அனைவரும் படித்தறிந்தனர் " ஆம் இத்தகைய தியாக குணமுள்ள ஒரு தாயின் அன்புதான் அக்குழந்தையின் உயிரை காத்துள்ளது !! "

அதனால் இந்த உலகில் வாழும் ஒவ்வொரு குழந்தையும் தத்தமது தாயின் முடிவில்லாத அன்பை எப்போதும் நினைவில் கொண்டுதத்தமது தாய்க்கு நன்றி செலுத்துவது நல்லது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...