வெள்ளி, 14 நவம்பர், 2014

நமக்கு கிடைத்த இந்த வாழ்வை ஏற்று மிகமகிழ்ச்சியாக இருந்துவருவோம்


ஓருகாட்டில் காகம் ஒன்று அமைதியாகவும் மிகமகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்தது இந்நிலையில் அன்னப்பறவை ஒன்று அந்த வழியாக பறந்து சென்றதை பார்த்ததும் அந்த காகமானது 'அடடா! நாம் எவ்வளவு கருமையாக இருக்கின்றோம் ! இந்த அன்னப்பறவை எவ்வளவு வெண்மையாக இருக்கின்றது! மிக மகிழ்ச்சியாகவும் இருக்கின்றதே !' என வருத்தபட்டது.

அதனை தொடர்ந்து இந்த காகமானது அன்னப்பறவை வசிக்குமிடம் சென்று ''அன்னப்பறவையே ! நீ எவ்வளவு வெண்மையாகவும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றாய் அதற்கான இரகசியசம் யாது?'' என வினவியது .உடன் ''அடபோ காகமே! நானும் என்னுடைய இரட்டை வண்ணத்தை கண்டு மிக கர்வமாக கொஞ்சகாலம் ஒரு பலவண்ண மயிலை பார்க்கும்வரை இருந்தேன்.

அதன்பின்னர் அடடா! நமக்கு அந்த மயிலை போன்று பல வண்ணங்கள் இல்லையே ? என வருத்தத்தில் இருந்துவருகின்றேன்' ,'' என மன வருத்தத்துடன் கூறியது. அதனை தொடர்ந்து காகமும் அடுத்ததாக அந்த மயிலை சென்றுபார்த்து ''மயிலே! நீ பலவண்ணங்களுடன் மிகஅழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றாய் அதற்கான இரகசியசம்தான் யாது ?'' என வினவியது

உடன் ,'' அடபோ காகமே ! நானும் என்னுடைய பலவண்ணத்தை கண்டு மிக கர்வமாக கொஞ்சகாலம் இந்த விலங்குகளின் பூங்காவிற்குள் என்னை கொண்டுவந்து அடைக்கும்வரை இருந்தேன் இப்போது என்னை பலர் பார்த்துதான் செல்கின்றனர் ஆனால் உன்னை போன்று சுதந்திரமாக பறந்து சென்று இரைதேடவும் ஆடிபாடவும் முடியவில்லையே என வருத்தத்தில் இருந்துவருகின்றேன் என மன வருத்தத்துடன் கூறியது

உடன் காகமானது அடடா நாம் எவ்வளவு சுதந்திரமாக எங்குவேண்டுமானாலும் பறந்துசென்று இரைதேடி உண்டு மகிழ்வுடன் இருந்துவருகின்றோம் என மகிழ்வுடன் தன்னுடைய கூட்டிற்கு திரும்பி வந்தது

ஆம் நன்பர்களே நாம் அனைவரும் நம்மைவிட மற்றவர்கள் மிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக தவறாக எண்ணி நம்முடைய வாழ்வை நாமே கெடுத்துகொண்டு வருகின்றோம் அதனை தவிரத்து நமக்கு கிடைத்த இந்த வாழ்வை ஏற்று மிகமகிழ்ச்சியாக இருந்துவருவோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...