ஞாயிறு, 5 ஜூலை, 2015

எந்தவொரு நல்ல செயலையும் முதலில் நாம் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்திடுக


கடற்கரையோரம் ஒரு மனிதன் காலாற நடந்துசென்று உடல்பயிற்சியையும் மனதிற்கு புத்துணர்ச்சியையும் அளித்திட செய்துகொண்டிருந்தான் அவ்வாறு காலாற நடந்து செல்லும்போது வேறுஒரு மனிதன் குனிந்து தரையிலிருந்து அவனுடைய கைகளால் எதையோ எடுத்து கடலுக்குள் வீசியெறிவதை பார்த்தான் அந்த மனிதனின் அருகில் சென்று வணக்கம் நன்பா குனிந்து தரையிலிருந்து எதையோ எடுத்து கடலுக்குள் வீசிஎறிகின்றாயே அது என்ன வென முதலாவது மனிதன் வினவியபோது இரண்டாவது மனிதன் பார்த்தால் தெரியவில்லை கடற்கரையில் ஒதுங்கிடும் மீன் ஆனாது கரையிலேயே இருந்தால் தண்ணீர் இல்லாமல் காய்ந்து இறந்துவிடும் தற்போதைய பருவத்தில் அதிகசூரை காற்று வீசுவதால் கடலலைகளானது கடலில் இருந்து மீன்கள் அனைத்தையும் கரைகளில் தூக்கிவீசி ஒதுக்கி சென்றுவிடும் அவ்வாறு ஒதுக்கி சென்று மீன்கள் காய்ந்து இறந்துவிட்டால் அடுத்தபருவத்திற்கு நாம் கடலிற்கு சென்று நம்முடைய பிழைப்பிற்காக பிடிப்பதற்கான மீன் அதிகமாக கிடைக்காது அதனால் நாம் வயிற்றுக்கு உணவில்லாமல் பட்டினி கிடக்கநேரிடும் என பதிலிறுத்தான் .அப்போது தனியொருவன் சிறிதளவு மீன்களை மட்டும் பிடித்து மீண்டும் கடலில் விட்டுவிட்டால் மிகுதி மீன்கள்என்ன ஆவது என முதலாவது மனிதன் வினவியபோது அனைவருக்கும் நாம் வித்தியாசமாக முன்மாதிரியாக இருந்து செயல்பட்டால் நம்முடைய செயலை பார்ப்பவர்கள் நம்மை பின்தொடர்ந்து செயல்படஏதுவாகும் யாராவது ஒருவர் நல்லதொரு பணியை செய்யதொடங்கினால்தானே அனைவரும் அவரை பின்பற்றுவார்கள் யாருமே தொடங்கவில்லையெனில் அந்த பணிசெய்யபடாமலேய போய்விடும் ஐயா அதனால் நான் என்னுடைய கடமையை செய்ய தொடங்கி செய்துவருகின்றேன் என கூறியதை தொடர்ந்த முதலாமவது மனிதனும் அந்த பணியை செய்யதொடங்கினான் அவர்கள் செய்திடும் பணியை பார்த்த அந்த கிராமத்து மக்கள் அனைவரும் அந்த பணியை செய்யதொடங்கினார்கள் ஆம் சிறிய தீக்குச்சியிலிருக்கும் நெருப்புதான் நமக்கு தேவையான சமையல் பணியை செய்ய காரணமாக அமைகின்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...