சனி, 18 ஜூலை, 2015

நாம் என்ன செய்கின்றோமே அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும்


ஒருஊரில் நடுவயது பெண்ஒருவள் வாழ்ந்தவந்தாள் அவள் தன்னுடைய உணவுக்கு தேவையான கோதுமை ரொட்டியை செய்து உண்ணுவாள் மிகுதியாக ஒன்று தேவைப்படாது மிகுந்துவிடும் அப்போது அவருடைய மகன்வெளியூருக்கு பணிசெய்வதற்காக சென்றவன் நல்லபடியாக திரும்பிவரவேண்டுமென பிரார்த்தனை செய்துகொண்டு அந்தமிகுதியான ரொட்டியை அந்தவழியே செல்லும் பிச்சைகாரர்களுக்கு உதவட்டும் என அருகிலிருந்த தின்னையில் வைத்துசென்றிடுவார்

அதனை தொடர்ந்து அங்கு உலவி கொண்டிருந்த பிச்சைகாரனைபோன்ற தோற்றமுடைய பெரியவர் ஒருவர் " நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கு நன்மையே திரும்பகிடைக்கும் தீமை செய்தால் நமக்கு தீமையே திரும்ப கிடைக்கும்" என கூறிக்கொண்டு அந்த ரொட்டியை எடுத்துகொண்டு சென்றார்

இவ்வாறே தினமும் ஒரு ரொட்டி மிகுதியாவதும் அந்தபெண் தன்னுடைய மகனுக்காக பிரார்த்தனை செய்துகொண்டு அந்த மிகுதியான ரொட்டியை தின்னையில்வைத்திடுவதும் பிச்சைகாரனைபோன்ற தோற்றமுடைய பெரியவர் " நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கு நன்மையே திரும்பகிடைக்கும் தீமை செய்தால் நமக்கு தீமையே திரும்ப கிடைக்கும்"என கூறிக்கொண்டு அந்த ரொட்டியை எடுத்துகொண்டு செல்வதும் வழக்கமான நடைமுறையாகிவிட்டது

.இந்நிலையில் தினமும் நாம் வைத்திடும் ஒருரொட்டியை அந்த பெரியவர் எடுத்துசென்று சாப்பிடுகின்றார் அதனால் அதில் ஆட்களைகொல்லும் நஞ்சை ஏன் சேர்த்து செய்துவைக்ககூடாது என தவறான என்னம் அந்த பெண்ணின் மனதில் தோன்றியது அதனை தொடர்ந்து அன்று ஒருநாள் பிச்சைக்காக வைத்திடும்ரொட்டியில் மட்டும் ஆட்களைகொல்லும் நஞ்சை சேர்த்து உருவாக்கி தின்னையில் வைத்துசென்றாள்

.வழக்கம்போல பிச்சைகாரனைபோன்ற தோற்றமுடைய பெரியவர்" நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கு நன்மையே திரும்பகிடைக்கும் தீமை செய்தால் நமக்கு தீமையே திரும்ப கிடைக்கும்" என கூறிக்கொண்டு அந்த ரொட்டியை எடுத்துகொண்டு சென்றார்

அன்று சாயுங்காலம் அவளுடைய மகன் திரும்பி வந்தான் ஆளைபார்த்தால் உணவு கிடைக்காத பஞ்சத்தில் இருப்பவன் போன்று மிகஒல்லியாக நடக்கவே தெம்பில்லாதவனை போன்றிருந்தான் அவளுடைய மகன் அம்மா நான் இங்கு வந்து சேருவதே மிகசிரமமாகிவிட்டது உண்பது உணவே கிடைக்கவில்லை கையில் பணமெதுவுமில்லை அந்நிலையில் நம்முடைய ஊருக்கு அருகில் நடக்கமுடியாமல் தவித்து கொண்டிருந்தபோது பெரியவர் ஒருவர் ஒரு ரொட்டியை தனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை நீசாப்பிடு தம்பி " நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கு நன்மையே திரும்பகிடைக்கும் தீமை செய்தால் நமக்கு தீமையே திரும்ப கிடைக்கும்" என கூறிக்கொண்டு கொடுத்தார்

அதனை சாப்பிட்டபின் கிடைத்த தெம்பில் நம்முடைய வீடுவந்தசேர்ந்தேன் என கூறியதை தொடர்ந்தஅந்த பெண் வீட்டு தின்னையை பார்த்தாள் அன்று அவள் நஞ்சு வைத்து செய்திருந்த ரொட்டி காணவில்லை " ஐயையோ என்னுடைய மகனுக்கு நானே நஞ்சு வைத்து ரொட்டிசெய்துகொடுத்து சாகடித்து விட்டேனே" என ஒப்பாரியிட ஆரம்பித்தாள் உடன் அவளுடைய மகனும் உடல் நீலமாக மாறி இறந்துவிட்டிருந்தான் .

ஆம் தினை விதைத்தவன் தினையை அறுவடை செய்வான். வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்வான் .அதபோன்று நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்தால் நன்மையே நமக்கு திரும்ப கிடைக்கும் அவ்வாறே மற்றவர்களுக்கு தீமை செய்தால் நமக்கு தீமையே திரும்பகிடைக்கும் என்பதே உலகநியதி ஆகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...