சனி, 25 ஜூலை, 2015

நம்முடைய பிள்ளைகளை நேர்மறையான சிந்தனைகளுடனும் வளர்த்து வருவோம்


சுட்டி கிட்டி என்ற இரு சிறுவர்களும் அருகருகான வீட்டில் வாழ்ந்துவந்தனர் சுட்டியின் பெற்றோர்கள் எப்போதும் நேர்மறையான சொற்களுடனான அறிவுரைகளை கூறி நேர்மறையான சிந்தனைகளுடன் தங்களுடைய பிள்ளையான சுட்டியை வளர்த்து வந்தனர் அதாவது இந்திந்த செயலை இப்படி இப்படி செய்யவேண்டும் அப்போதுதான் சிறப்பாக இருக்கும் என அறிவுரை கூறுவதற்கேற்ப அவ்வாறே மிகச்சரியாக செய்து எந்தபிரச்சினையிலும் சிக்காமல் மட்டிகொள்ளாமல் சுட்டி இருப்பான்

ஆனால் கிட்டியின் பெற்றோர்கள் எப்போதும் எதிர்மறையான சொற்களுடனான அறிவுரைகளை கூறி எதிர்மறையான சிந்தனைகளுடன் தங்களுடைய பிள்ளையான கிட்டியை வளர்த்து வந்தனர் அதாவது எப்போதும் அதை செய்யாதே இதை செய்யாதே என்று கூறிவருவர் பொதுவாக எப்போதும் மனித மூளையானது அதிலும் சிறுவர்களின் வளர்ந்து வரும் மூளையானது புதியதாக எதையாவது கற்று தேர்ச்சி பெறவிரும்பும் அவ்வாறான நிலையில் நாம் ஒரு செயலை செய்யாதே என கூறினால் உடன் ஏன் அதனை செய்துபார்த்தால் என்னவென செய்யதுடிக்கும் அதனடிப்படையில் சுட்டியானவன் அவனுடைய பெற்றோர்கள் இந்த செயலை செய்யாதே என்றால் சுட்டியானவன் அந்த செயலை மட்டும் முயன்று செய்து இக்கட்டிலும் இன்னலிலும் மாட்டிகொள்வது வழக்கமாகும் இதேபோன்ற நடைமுறையின் போது சிறு குழந்தைகள் என்பதால் மரங்களில் ஏறி காய்கணிகளை பறிப்பது வழக்கமாகும் அவ்வாறு நடைமுறையில் சுட்டியும் கிட்டியும் அருகிலிருந்த மரத்தில் விளையாட்டாக ஏறிவிட்டனர் சுட்டியானவன் மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான்

ஆனால் கிட்டியானவன் மரத்தின் பாதிதூரம் இருந்த கிளையில் இருந்தான் இந்நிலையில் பயங்கரமான சூறைகாற்று வீசியது அப்போது சுட்டியின் பெற்றோர் சுட்டியை அழைத்து "தம்பி! மரக்கிளையை நன்கு கெட்டியாக பிடித்து கொள் காற்றுவீசுவது நின்றவுடன் கீழே பத்திரமாக இறங்கிவிடலாம்" என நேர்மறையாக கூறியதை தொடர்ந்து சுட்டி மரத்தின் கிளையை நன்கு கெட்டியாக அனைத்து பிடித்துகொண்டான்

ஆனால் கிட்டியின் பெற்றோர்கள் "டேய் தம்பி! சூறை காற்று வேகமாக வீசுகின்றது நீ கீழே விழுந்துவிடாதே!” என எதிர்மாறையாக அறிவுரைகூறினார்கள் அதனை தொடர்ந்து கிட்டியானவன் மரக்கிளையை சரியாக பிடித்து கொள்ளாததால் காற்று வீசுகின்ற வேகத்தில் தடுமாறி கீழேவிழுந்து அவனுக்கு கால்முறிவும் கைமுறிவும் ஏற்பட்டது

பொதுவாக பெற்றோர்கள் அனைவரும் தத்தமது பிள்ளைகளிடம் நேர்மறையான சொற்களுடனான அறிவுரைகளை கூறி அவர்களை நேர்மறையான சிந்தனைகளுடன் வளர்த்திடவேண்டும் மாறாக எதிர்மறையான சொற்களுடனான அறிவுரைகளை கூறி அவர்களை எதிர்மறையான சிந்தனைகளுடன் வளர்த்தால் அதனுடைய பாதிப்பை உடன் நாம் சந்திக்கவேண்டியிருக்கும் ஏனெனில் நம்முடைய மூளையானது எப்போதும் நாம் என்ன கூறுகின்றோமோ அதனை அப்படியே செயல்படுத்துகின்றது அதனால் நாமனைவரும் எப்போதும் நேர்மறையான சொற்களுடனான விவாதங்களை செய்திடுவோம் தொடர்ந்து நேர்மறையான சிந்தனைகளுடன் வாழ்ந்து வருவோம் நம்முடைய பிள்ளைகளையும் நேர்மறையான சொற்களின் அறிவுரைகளுடனும் நேர்மறையான சிந்தனைகளுடனும் வளர்த்து வருவோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...