ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

நாம் வாழும் இந்த இயற்கையை வீணாக்காமல் பாதுகாத்தால் நாம் எதிர்பார்த்திடும் நன்மை நமக்கு கிடைத்திடும்


ஒரு பெற்றோருக்கு ஒரேயொரு குழந்தை பிறந்து அதுவும் பெண்பிள்ளையாக பிறந்ததால் அதனை அந்த பெற்றோர்கள் சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ச்சியுடனும் மிகசெல்லம் கொடுத்து சீராட்டி வளர்த்துவந்தனர் அவர்களுடைய மகள் எதுகேட்டாளும் உடன்வாங்கி வழங்கிவந்தனர் இந்நிலையில் அவர்களுடைய மகளுக்கு பிறந்தநாள் வந்தது அவர்களுடைய மகள் தனக்கு கையில் அணிவதற்கு தங்க மோதிரம் வேண்டும் என கோரியவுடன் அவ்வாறே மோதிரத்தை வாங்கி பரிசாக அளித்தனர்

தினமும் அந்த பெண்குழந்தையின் தந்தையானவர் இரவு படுக்கைக்கு செல்லும்போது தன்னுடைய பிள்ளைக்கு அறிவுரை கதைகளையும் நீதிக்கதைகளை யும்கூறி தூங்கவைப்பது வழக்கமாகும் அப்போது அந்த தந்தையானவர் அவருடைய மகளிடம் பரிசாக அளித்தசிறு மோதிரத்தை தனக்கு கழற்றி கொடுக்குமாறு வேண்டுவார் உடன் அவருடைய மகளும் ஐயோ அப்பா அதைமட்டும் நான் கழற்றிதர மாட்டேன் என மறுத்துவிடுவது வழக்கமான செயலாகும்

இந்நிலையில் ஒருநாள் அந்த பெண்ணின் தாய் கழுத்தில் நல்ல ஒளிவீசக்கூடிய முத்துகளால் செய்யபட்ட மாலை அணிந்ததை பார்த்து அதேபோன்ற நல்ல ஒளிவீசக்கூடிய முத்துகளால் செய்யபட்ட மாலை தனக்கும் வேண்டும் என மனவருத்ததுடன் முழங்காலை மடக்கி கட்டி கொண்டு படுக்கையில் உட்கார்ந்து இருந்தது .

அப்போது அந்த பெண்ணின்தந்தை வந்ததும் இந்தாருங்கள் அப்பா நீங்கள்கேட்ட மோதிரம் எனக்கு அம்மா அணிந்துள்ளவாறு நல்ல ஒளிவீசக்கூடிய முத்துகளால் செய்யபட்ட மாலை வேண்டும் என கோரினாள் உடன் அந்த தந்தையும் பெட்டியை திறந்து அவர்களுடைய மகள் கோரிய பரிசுபொருளை அவளுடைய கழுத்தில் அணியசெய்தார் உடன் அவர்களுடைய மகள் மிகமகழ்ச்சியுற்று பெற்றோர்களை கட்டிபிடித்து மகிழ்ச்சிகூச்சலிட்டால்

வா ஆம் நாமனைவரும் வாழும் இந்த இயற்கையை வீணாக்காமல் பாதுகாத்துவந்தால் நாம் எதிர்பார்த்திடும் நன்மையை நமக்கு இயற்கையானது தானாகவே கிடைத்திடச்செய்திடும் என்பதே உண்மைநிலவரமாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...