ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

இவ்வுலகில் முயன்றால் முடியாததில்லை


முன்னொரு காலத்தில் அரசனுக்கு ஒரேயொருமகள்மட்டும் பிறந்ததால் அந்தமகளை நன்கு கல்விகற்கவைத்து அறிவிற்சிறந்த இளவரசியாக உருவாக்கினார் அதன்பின் அந்த இளவரசியானவள் கல்விகற்ற அறிஞர்கள் அனைவரையும் அறிவுபூர்வ விவாததிறமையால் தோற்கடித்தாள் அதனாள் தன்னை யாரேனும் இந்த அறிவுபூர்வ விவாதபோட்டியில் வெல்பவர்களே தான் திருமணம் செய்துகொள்ளமுடியும் என நாடுமுழுவதும் அறிவிப்பை அந்த அரசனால் செய்யபட்டது அதனை தொடர்ந்து பலநாட்டு இளவரசர்களும் அந்த இளவரசியுடன் போட்டியிட்டு தோற்று சென்றனர்

தொடர்ந்த அந்த நாட்டின் இளவரசியுடன் போட்டியிட்டு தோல்வியுற்ற அறிஞர் ஒருவர் அந்த இளவரசியை எப்படியாவது தோற்கடிக்கத்திடவேண்டும் எனதிட்டமிட்டார் அதற்காக ஊரின் ஒதுக்குபுறமாக இருந்த மரத்தில் ஒருவன் நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டிகொண்டிருந்தான்

இவனை கொண்டு அந்த நாட்டின் இளவரசிநடத்தும் போட்டியில் அந்த இளவரசியை தோற்கடித்து இளவரசியை இவனுக்கு திருமணம் செய்து வைத்திட வேண்டும் என முடிசெய்து அவனை மரத்தை விட்டு கீழேஇறங்க செய்து தம்பி என்னோடு வா என அழைத்து சென்று அவனை நன்கு குளிப்பாட்டி புதுஆடைகள் அணியசெய்து தம்பி நீஇந்த நாட்டின் இளவரசி நடத்தும் அறிவுபோட்டியில் கலந்து கொள் அவள் கேட்கும் கேள்விக்கு வாய்திறந்து பதில் எதுவும் கூறாதே அதற்குபதில் உன்னுடைய கைகளைமட்டும் அசைத்து காட்டு போதும் பின்னர் நீவென்றதாக உனக்கும் இந்த நாட்டின் இளவரசிக்கும் திருமணம் நடக்கும் என கூறி தயார் படுத்தி மறுநாள் அந்த இளைஞனை அரசவைக்கு அழைத்து சென்றார்

அரசவையில் அனைவரும் கூடி இருந்தனர் இந்தஅறிஞர் அனைவரிடமும் இந்த இளைஞன் இளவரசியுடன் நடக்கும் அறிவுபோட்டியில் வாய்திறந்து பேசமாட்டான் அதற்குபதிலாக தன்னுடைய கைகளைமட்டும் அசைத்து காண்பிப்பான் அதற்கு ஒத்து கொண்டால் போட்டி நடத்தலாம் என அந்த இளைஞன் சார்பாக வேண்டினார் இளவரசியும் சரி என ஏற்றுகொண்டாள்

முதலில் இளவரசியானவள் தன்னுடைய ஆள்காட்டிவிரலை மட்டும் உயர்த்தி காண்பித்தாள் உடன் அந்த இளவரசி தன்னுடைய ஒரு கண்ணை குருடாக்கபோவதாக எண்ணிக்கொண்டு அந்த இளைஞனானவன் இளவரசியின் இருகண்களையும் குருடாக்கிவிடுவதாக இருவிரலை உயர்த்தி காண்பித்தான்

அதாவதுஇளவரசியானவள் இந்த உலகமுழுவதற்கும் ஒரேஒரு இறைவன்மட்டுமே என தன்னுடைய கையின் சைகைக்கு அர்த்தமாகும் என விவரித்தாள் இந்த உலகம் முழுவதும் இறைவன்மட்டுமல்லாது மக்களும்உள்ளனர் என்ற அர்த்தமாகும் என அந்த இளைஞனின் செய்கைக்கு அறிஞர் விளக்கமளித்தார்

அடுத்ததாக இளவரசியானவள் தன்னுடைய ஒரு கையிலுள்ள ஐந்துவிரலையும் உயர்த்தி காண்பித்தாள் உடன் இளைஞன் தன்னை தரைமட்டத்தில் தள்ள முயற்சிக்கின்றாள் என எண்ணி கைவிரல்களை அனைத்தையும் மடக்கி முஷ்டி போன்றுஉயர்த்தி உன்னை குத்திவிடுவேண் என காண்பித்தான்

அதாவது இளவரசியானவள் மனிதனுக்கு ஐந்து வகையான குணநலன்கள் உள்ளன என அர்த்தமாகும் என விவரி்த்தாள் அறிஞன் அந்த ஐந்து குணநலன்களையும் கட்டுபடுத்தி நடந்தால் மட்டுமே அறிஞனாக உயரமுடியும் என அர்த்தமாகும் என விவரித்தார்

இவ்வாறு இளவரசியின் பல்வேறுவகையான கைசைகைகளுக்கு ஏற்ப இளைஞனின் பதில் கைசைகைகளை காண்பிப்பதையும் அதற்கான அர்த்தமும் விவரிக்கபட்டன முடிவில் அந்த இளைஞன் தன்னை போட்டியில் வென்றுவிட்டதாகவும் போட்டியில் தான் ஒத்துக்கொண்டவாறு அந்த இளைஞனை திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதாகவும் இளவரசி உறுதிகூறினாள் அதனை தொடர்ந்து அந்த முட்டாள் இளைஞனுக்கும் அந்த நாட்டு இளவரசிக்கும் திருமணம் நடைபெற்றது

திருமணத்திற்கு பின்னரே அந்த இளைஞன் முட்டாள் என அறிந்து மனவருத்ததுடன் அந்த இளைஞனை ஒதுக்கிவைத்துவாழ்ந்து வந்தாள்

இதனால் விரக்தியுற்ற அந்த இளைஞன் நல்ல ஆசிரியரை தேடிபிடித்து அவரிடம் கல்விகற்று சிறந்த கவிஞனாக தன்னை வளர்த்து கொண்டார் அதன்பின்னர் சாகுந்தளம் மேகதூதம் ஆகிய காவியங்களை படைத்து வெளியிட்டார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...