ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

எந்த நிலையிலும் எந்தவொரு நிகழ்விலும் மற்றநபர்களை கோபமூட்டுவதுபோன்றோ எரிச்சலூட்டுவதுபோன்று செய்திடாதீர்கள்


தமிழ்நாட்டின் கிராமத்தில் விவாசாயி ஒருவர்வாழ்ந்து வந்தார் அவருக்கு சொந்தமாக சிறிதளவு நிலம் இருந்துவந்தது அதனைகொண்டு அவர் வாய்க்கும் கைக்குமாக வாழ்ந்துவந்தார் அவருடைய நிலத்திற்கு அருகிலிருந்த நிலத்தை அருகிலிருந்த நகரத்தில் வாழும் வழக்குரைஞர் ஒருவர் விலைக்குவாங்கி பயன்படுத்தி வந்தார் அந்த வழக்குரைஞரும் வாரவிடுமுறை அன்று தன்னுடைய நிலத்திற்கு வந்து நாள்முழுவதும் இருப்பது வழக்கமாகும்

இந்நிலையில் வழக்கமாக வாரவிடுமுறையில் வந்தபோது அவருடைய நிலத்தின்மீது பறந்து சென்ற புறா ஒன்றினை வேட்டையாடினார் உடன் பறந்துகொண்டிருந்த அந்த புறாவானது அருகிலிருந்த கிராமத்து விவசாயியின் நிலத்தில் விழுந்தது அதனை தொடர்ந்து வழக்குரைஞர் ஆனவர் பக்கத்து நிலத்திற்குள் உள்நுழைவு செய்து தான் வேட்டையாடிய புறாவை எடுத்திட முனைந்தார்

உடன் அருகிலிருந்த நிலத்தின் சொந்தககார விவசாயியானவர் ஐயா என்னுடைய நிலத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் அத்துமீறி உள்நுழைவு செய்துள்ளீர்கள் அதுமட்டுமல்லாது என்னுடைய நிலத்தின்மீது உள்ள பொருட்கள் அனைத்தும் எனக்குமட்டுமே சொந்தமாகும் அதனால்அந்த புறாவை நீங்கள் எடுத்து செல்லமுடியாது என தடுத்தார் அவ்வாறு அந்த விவசாயியானவர் தடுத்ததும் வழக்குரைஞருக்கு அளவிற்கு அதிகமான கோபம் உருவாகி நான் தெரியுமா அருகிலுள்ள நகரத்தில் பெரிய வழக்குரைஞராக நான் இருக்கின்றேன் உன்னை என்னசெய்கின்றேன் பார் நீதிமன்றத்திற்கு முன் மன்டியிட்டு மன்னிப்பு கேட்க வைக்கின்றேன் உன்னுடைய நிலம்முழுவதையும் விற்று அபராதமாக கட்டவைக்கின்றேன் பார் என கத்தினார்

எல்லாம் சரிஐயா உங்களுடைய சட்டம் நீதி எல்லாம் உங்களுடைய நீதிமன்றத்திலேயே வைத்துகொள்ளுங்கள் இங்கு கிராமத்தில் வழிவழியாக பின்பற்றிவரும் பழக்கவழக்கங்களை மட்டும் நீதிமன்றம் தலையிட்டு மாற்றிடமுடியாது எனவிவசாயிக்கூறியதை தொடர்ந்து ரொம்ப சரி இந்த நிகழ்விற்கான பழக்கவழக்கந்தான் என்ன என வழக்குரைஞர் வினவினார்

அதற்கு அந்த விவசாயி இங்கு கிராமத்தில் இவ்வாறான நிகழ்விற்கு மூன்றுஉதை எனும் விதியை பின்பற்றிவருகின்றோம் அதனை பின்பற்றி நீங்கள் கோரும் புறாவை எடுத்துசெல்லலாம் என அந்தவிவசாயி கூறியதை தொடர்ந்து அதுஎன்ன மூன்று உதை விதி விவரித்தால் நானும் அதனை பின்பற்றுவேன் என வழக்குறைஞர் கோபம் தனிந்து விவசாயியிடம் கேட்டார் முதலில் நான் உங்களுக்கு மூன்று உதைகொடுப்பேன் பதிலுக்கு நீங்கள் மூன்று உதை எனக்கு கொடுங்கள் அதன்பின்னர் நீங்கள் கோரியபடி அந்த புறாவை எடுத்து செல்லலாம் என பதிலிறுத்ததை வழக்குரைஞர் அமோதித்தார்

உடன் விவசாயி தன்னுடைய காலால் முதலில் வழக்குரைஞரின் மூக்கு உடைபடுமாறு எட்டிஉதைத்தார் ஐயோ என வழக்குரைஞர் கைகளால் முகத்தை தடவிகொடுத்தார்

இரண்டாவதாக வழக்குரைஞரின் இடுப்பில் உதைவிட்டார் ஐயோஅம்மா என கத்திக்கொண்டு தரையில் உட்கார் ஆரம்பித்தார்

மூன்றாவதாக வழக்குரைஞரின் தொடைபகுதியில் எட்டிஉதைத்தர் ஐயய்யோ என கூவிக்கொண்டு விவசாயி கொடுத்த மூன்று உதையும் தாங்கமுடியாமல் அப்படியே தரையில் படுத்துவிட்டார்

சரி ஐயா வழக்குரைஞரே இப்போது உங்களுடைய முறை நீங்கள் மூன்று உதை எனக்கு கொடுத்துவிட்டு இந்தாருங்கள் நீங்கள் கோரிய இந்த புறாவை எடுத்து செல்லுங்கள் என புறாவை அந்த வழக்குரைஞரை நோக்கி வீசிஎறிந்தார்

அந்த வழக்குரைஞரும் எழுந்து நடமுடியாத நிலையில் இருந்ததால் பதில் செயலை செய்யாமல் படுத்தபடுக்கையாகிவிட்டார் அடடா அருகிலிருந்த விவசாயியின் நிலத்திற்குள் அத்துமீறி நுழைசெய்தது மட்டுமல்லாது அவரை நீதிமன்றத்தில்அபராதம் கட்டவைப்பேன் என மிரட்டியது தவறு என உணர்ந்து மெதுவாக நகரத்திற்கு வந்துசேர்ந்தார்

எந்த நிலையிலும் எந்தவொரு நிகழ்விலும் மற்றநபர்களை கோபமூட்டுவதுபோன்றோ எரிச்சலூட்டுவதுபோன்று செய்திடாதீர்கள்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...