ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

நல்ல நிகழ்வையும் திரும்பு திரும்ப கேட்கும்போது நம்முடைய மனமும் உடலும் அதற்கேற்ப தகவமைத்து புணரமைத்து கொள்கின்றன


ஒருமருத்துவமனையில் இருநோயாளிகள் அருகருகே இரு படுக்கைகளில் சேர்க்கபட்டு ஒருவர் சாளரத்திற்கு அருகேயும் மற்றவர் உள்பகுதியில் இருந்த படுக்கையிலும் அனுமதிக்கபட்டு மருத்துவசிகிச்சை அளிக்கபட்டுவந்தனர்

இருவரும் தங்களுடைய குடும்பவிவரங்களை தங்களுக்கு பகிர்ந்துகொண்டு சிறந்த நண்பர்களாக மாறிவிட்டனர் சாளரத்தின் ஓரம் இருந்தவர் தான் சாளரத்தின் ஓரம் உள்ள படுக்கையில் இருப்பதால் அருகே இருந்த அழகிய நீர்நிலையை பற்றியும் அதில் உள்ள நீர்வாழ் மரங்களை பற்றியும் நீந்திதிரியும் பறவைகளை பற்றியும் இயற்கைகாட்சிகளை அழகாக விவரித்துகொண்டு இருப்பார் உள்பகுதியில் உள்ள மற்றொருவர் அந்த இயற்கை காட்சிகளை பார்க்கஇயலாது ஆனாலும் தன்னுடைய கண்ணை மூடிக்கொண்டு மனக்கண்ணில் அந்த இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்வார்

இவ்வாறான நிகழ்வு தொடர்ந்து இருந்துவந்ததால் உள்பகுதியில் இருந்தவர் விரைவில் நன்கு குணமடைந்துவந்தார் ஒருநாள் சாளரத்தின் ஓரம் இருந்தவர் படுக்கையிலிருந்து எழாமல் இருப்பதை பணியிலிருந்த செவிலியர் உடன் பார்த்து மருத்துவரை அழைத்து காண்பித்தபோது அவர் இறந்துவிட்டார் என அறிவித்து உடன் அவருடைய உடல் எடுத்துசெல்லபட்டு அந்த சாளரத்தின் ஓர படுக்கைக்கு உள்பகுதியில் நன்கு தெளிவடைந்துவருபவரை மாற்றினர்

அவரும் தன்னுடயை படுக்கையிலிருந்து சாளரத்தின் வழியாக வெளியில் பார்த்தபோது தனக்கு விவரிக்கபட்டவாறு காட்சி எதுவும் தெரியாததை கண்டு ஆச்சரியம் அடைந்து பணியிலிருந்த செவிலியரை அழைத்து தனக்கு தினமும்இல்லாத இயற்கை காட்சிகளை தான் காண்பதாக எவ்வாறு விவரித்து வந்தார் என வினவியபோது

முதலில் சாளரத்தின் ஓரம் அனுமதிக்கபட்டவருக்கு இருகண்களும் விபத்தில் பறிபோய்விட்டது என்றும் உயிரோடு இருப்பது சிறிது காலம்தான் என அறிந்துகொண்டதால் அருகிலிருக்கும் உங்களுடைய உயிரையாவது சிறிதுகாலம் பிழைக்கவைக்கலாம் என தான் ஏற்கனவே கண்ட காட்சிகளை தினமும் கூறி உங்களை உற்சாக படுத்தினார் என பதிலிறுத்தார்

ஆம் எந்தவொரு நல்ல நிகழ்வையும் திரும்பு திரும்ப கேட்கும்போது நம்முடைய மனமும் உடலும் அதற்கேற்ப தகவமைத்து புணரமைத்து கொள்கின்றன என்பதே இயற்கையான நிகழ்வாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...