ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

வாழ்க்கையை நேர்மறையாக சிந்தித்து நல்லதே நடக்கும் என செயல்படுக


நம்முடைய நாட்டில் தற்போது சுதந்திரமான பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவதை தொடர்ந்து நன்பர் ஒருவர் அவர் பணிபுரிந்து வந்த நிறுவனமானது அந்நிறுவனத்திலிருந்து அவரை பணிநீக்கம் செய்துவிட்டது. அதனால் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்முதல்செய்து வாழ்வதற்கே மிககசிரமமான நிலைக்கு அவருடை குடும்பம் தள்ளபபட்டது. மேலும் அவருடைய பிள்ளைகளை தரமான பள்ளிகளில் கல்விகற்பதற்காக சேர்க்கமுடியாமல் அல்லாடும் நிலைக்கு அவர் ஆளாக்கபட்டார் அதுமட்டுமல்லாது அவர்குடியிருந்த வாடகை வீட்டின் சொந்தக்காரரர் உடன் அவரை வீட்டினை காலிசெய்திடுமாறு நிர்பந்த படுத்தினார் இந்நிலையில் அவருடைய மாமனார் இறந்துவிட்டதால் மனைவி மிக துக்கத்தில் அழுதுகொண்டிருந்தாள் மேலும் நன்பர் சாலைவழியேநடந்து செல்லும்போது அந்தவழியே சென்றுகொண்டிருந்த சுமையுந்துவண்டி ஒன்று அவர்மீது மோதி அவருடைய உடலில் ஏராளமான காயங்களை ஏற்படுத்திவிட்டு சென்றதால் உடன் அந்நன்பரை அரசுமருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்திருந்தனர் ஆம் துன்பம் வரும்போது நமக்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் துன்பம் தருபவையாகவே வந்து சேருகின்றன என்னசெய்வது என திகைத்து அல்லாடும் நிலைக்கு தள்ளபடுவதே இயற்கையாக உள்ளது

இந்நிலையில் பொதுவாக நம்முன் இருவேறு மாற்று வழிகளே நாம் தெரிவுசெய்து பின்பற்றுவதற்காக தயாராக இருக்கின்றன ஒன்று இவ்வாறான துன்ப சூழலில் சிக்கிமூழ்கி தன்னுடைய வாழ்க்கையை முடிந்துபோனதாக முடிவுசெய்து குடும்பத்துடன் அல்லது தான்மட்டும் வாழ்வை முடித்துகொள்வது இரண்டாவது வழியாக வாழ்வில் எத்தனை துன்பம் வந்தாலும் அவைகளை வெற்றிகொள்வோம் என இந்த துன்பநிகழ்வுகளுக்கு சரியான தீர்வினை கண்டு வெற்றிகொள்வது

நன்பர் இரண்டாவது வழிமுறையை பின்பற்றினார் அதாவது அவர்மிகவும் பொறுமையாக இந்த துன்பநிகழ்வுகளை எதிர்கொண்டு சரியான காலம்வரும்வரை காத்திருந்தார் தொடர்ந்து விபத்தினால் ஏற்பட்ட காயங்களும் ஆறிவிட்டதால் உடல்நிலையும் சரியாகிவிட்டது அதன்பின்னர் நல்லநிறுவனம் ஒன்று இவருடைய பணிஅனுபவத்தையும் கல்வித்தகுதியை கருத்தில்கொண்டு மிகப்பெரிய பதவியை போதுமான சம்பளத்தில் குடியிருப்பதற்கென ஒருகுடியிருப்புவீட்டுடன் வழங்கியது மேலும் தங்களுடையபிள்ளைகளையும் நல்ல தரமான பள்ளியில் சேர்த்தார் அவருடைய குடும்ப வாழ்க்கையும் பொருளாதார சிக்கலில்இருந்து மீண்டுநல்லைநிலைக்கு வந்தேசேர்ந்தது ஆம் துன்பத்தில் மூழ்கிடாமல் நல்லதை நினைத்து நல்லதையே செய்தால் நல்லநிகழ்வுகளை தொடர்ந்து வருவது இயற்கையாகும்

பெரும்பாலானவர்கள் முதல்முடிவையே தெரிவுசெய்வார்கள் அவ்வாறான நிகழ்வுகளின் செய்திகளையே நாம் நாளிதழ்களில் தினமும் ஏராளமான அளவில் பார்த்து வருகின்றோம் அவ்வாறான வழிமுறையை தெரிவுசெய்வது தவறாகும் எப்போதும் வாழ்க்கையை நேர்மறையாக சிந்தித்து நல்லதே நடக்கும் என நன்பரை போன்று இரண்டாவது வழிமுறையை தெரிவுசெய்வதே சரியான முடிவாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...