ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

எந்தவொரு உயிரும் தன்னுடைய உயிரை காத்துகொள்ளும் நிர்பந்தத்தில் தன்னுடைய இயல்பான செயலை செய்யமுற்படுவது இயற்கையான செயலாகும்


ஒரு அரசனுக்கு பக்கத்து நாட்டு அரசனொருவன் சிறந்த இரு புறாக்களை பரிசாக அளித்தான் அவைகளுள் ஒன்று மிகநன்றாக பறந்து சென்று திரும்பி அரசனின் மடியை வந்ததடைந்தது மற்றொரு புறாவோ பறக்காமல் சன்டித்தனம் செய்துவந்தது

அதனால் அந்த அரசனின் ஆளுமையின் கீழுள்ள நாடுமுழுவதும் இருந்த சிறந்த பறவை வல்லுனர்கள் அனைவரையும் அழைத்துவந்த அந்தபறக்காத புறாவை பறக்கவைப்பதற்கு எல்லாவகையிலும் எவ்வளவுமுயன்றும் அந்தபுறாவை பறக்கவைக்கமுடியவில்லை

இந்நிலையில் ஒருகிராமத்து விவசாயி இதுபோன்ற பறாக்காத பறவைகளை பறக்கவைப்பதாக செய்திஅறிந்த அரசன் அந்த விவசாயியை அழைத்து அந்த பறக்காத புறாவை மறுநாளைக்குள் எப்படியாவது பறக்கவைத்திடுமாறு கோரினார் உடன் மறுநாள் கண்டிப்பாக அந்த அந்தபறக்காத புறாவை பறக்க வைத்திடுவதாக அந்த விவசாயி உறுதிஅளித்து சென்றார்

மறுநாள் அந்த விவசாயி உறுதியளித்தவாறு அந்தபுறாவும் பறந்துசென்று திரும்பி அரசனின் மடியை வந்ததடைந்தது கண்டு அந்த அரசனுக்கு அதிகஆச்சரியமாகிவிட்டது

" எவ்வாறு சிறந்த பறவை வல்லுனர்களாலேயே பறக்கவைத்திடமுடியாத ஒருபுறாவை அந்தவிவசாயியால் பறக்கவைக்கமுடிந்தது" என வினவியபோது

"அதுஒன்றும் பெரியதொழில்நுனுக்கமான செயல் இல்லை ஐயா எந்தவொருஉயிரும் இக்கட்டான நிலையில் மாட்டிகொண்டால் தானாகவே தன்னுடைய இயல்பான செயலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும் அதனடிப்படையில் அந்தபுறாவை மரத்தின் நுனி கிளையில் அமர்ந்திடுமாறு செய்துவிட்டு அந்த கிளையின் அடிப்பாகத்தை வெட்டி கீழே சாய்த்தேன் கிளைஒடிந்துவிழுந்ததால் அந்தபுறாவானது கீழேவிழுவதிலிருந்து தப்பித்து தன்னுடைய உயிரை காத்து கொள்வதற்காக பறந்து சென்றது" என பதிலிறுத்தார்

ஆம் எந்தவொரு உயிரும் தன்னுடைய உயிரை காத்துகொள்ளும் நிர்பந்தத்தில் தன்னுடைய இயல்பான செயலை செய்யமுற்படுவது இயற்கையான செயலாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...