ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

நாமனைவரும் ஒருகாலத்தில் முதியோர் இல்லம் நோக்கி செல்ல இருப்பவர்களே


நகரத்தில் வாழ்ந்து வந்த மனிதன் ஒருவனுடைய வயதான தந்தையும் தாயும் கிராமத்தில் வாழ்ந்துவந்தனர் குறிப்பிட்ட காலமுடிவில் அவனுடைய தந்தை இறந்துவிட்டதால் தாயை தனியாக கிராமத்தில் விட்டுவிட விருப்பம் இல்லாமலும் தன்னுடன் அழைத்து சென்று வைத்துகொள்ளவழியில்லாமலும் தவித்தபோது முதியோர் இல்லம் ஒன்று கிராமத்திற்கு அருகிலிருந்த நகரத்தில் இருந்ததை அறிந்து அங்கு தன்னுடைய தாயை மட்டும் கொண்டு சென்று சேர்த்தான்

பின்னர் அவ்வப்போது அந்த முதியோர் இல்லத்திற்கு சென்று தன்னுடைய தாயை பார்த்து நலம் விசாரித்து வந்தான் இந்நிலையில் திடீரென அவனுடைய தாயினுடைய உடல்நிலை சரியாக இல்லாததால் உடன்வருமாறு அவனுக்கு அழைப்பு வந்தது அவனும் பதறியடித்துகொண்டு அந்த முதியோர் இல்லத்திற்கு சென்று தாயின் அருகே அமர்ந்து அவருடைய உடல்நலனை பற்றி பேசிக்கொண்டிருந்தான்

அப்போது அந்ததாய் தன்னுடைய மகனிடம் தம்பி உடனே இந்த முதியோர் இல்லத்திற்கு காற்றோட்டமாக இருப்பதற்கு போதுமான எண்ணிக்கையில் காற்றாடிகள் வாங்கி வழங்கு அதன்பின்னர் பச்சை காய்கறிகள் உணவுபொருட்கள் போன்றவை காய்ந்து கெட்டுபோகாமல் இருப்பதற்கான குளிர்பதனபெட்டி ஒன்று வாங்கி கொடுத்திடு என படுக்கையில் இருந்தவாறு கட்டளையிட்டதை தொடர்ந்து இவ்வளவு நாள் இருந்தபோது குறையேதும் கூறாமல் இருந்துவிட்டு இப்போதுமட்டும் இந்தகுறைகளெல்லாம் உள்ளன உடன் தீர்வுசெய்திடுமாறு கூறுகின்றாயே என வினவியபோது

நான் அந்த கால மனஷி தம்பி எப்படியோ நான் இதுவரையில் சமாளித்துவிட்டேன் வருங்காலத்தில் உன்னுடைய பிள்ளைகள் உன்னை இங்குதானே கொண்டுவந்து சேர்ப்பார்கள் அப்போது அவை உனக்கு உதவியாக இருக்கமல்லவா என பதிலிறுத்தாள் அந்த தாய்.

ஆம் நாமனைவரும் ஒருகாலத்தில் முதியோர் இல்லம் நோக்கி செல்ல இருப்பவர்களே என்ற உண்மைய உணர்ந்து செயல்படுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...