ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

அருஞ்சொற்பொருள் விளக்க கதைகள்


கடந்த வருடம் மழைசரியாக பொழியாததால் கிராமத்தின் வாழ்க்கை மிகசிரமமாக இருந்தது அதனால் அந்த கிராமக்கள் அனைவரும் கூடி அந்த கிராமத்தின் பிரபலமான கோவிலிற்கு மழைவேண்டி ஊருனிபொங்கல் வைக்கசென்றனர் அந்த விழாவிற்கு ஒரேயொருநபர் மட்டும் மழைவந்தால் நனையாமல் இருப்பதற்காக குடை ஒன்று எடுத்து சென்றார் அதுவே மழை கண்டிப்பாக வரும் என்ற உண்மையான நம்பிக்கை(FAITH )யாகும்

பெற்றோர்களில் சிலர் தங்களுடைய பிள்ளைகளை உயரேதூக்கி வீசி எறிந்து பிடித்திடுவார்கள் அந்த குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் சிரி்த்துகொண்டிருக்கும் அந்த பிள்ளைகளும் நாம் தவறி தரையில் விழமாட்டோம் அவ்வாறு விழாமல் நம்மை பெற்றோர்கள் பிடித்துகொள்வார்கள் என சிரித்தபடி இருக்கும் அதுவே பொறுப்புறுதி நம்பிக்கை(TRUST)யாகும்

ஒவ்வொருநாளும் மறுநாள்காலை நாம் எழுவது சந்தேகமே இருந்தாலும் நாமனைவரும் ஐந்துமணிக்கு எழுவதற்காக அலாரம் அடிக்குமாறு அமைத்துவிட்டு படுக்கசெல்வோம் அதுவே நம்முடைய வாழ்விற்கான நம்பிக்கை(HOPE)யாகும்

எதிர்காலத்தை பற்றி ஒன்றும் தெரியாமலேயே எதிர்காலத்தில் இந்திந்த செயலை சாதிக்கபோவதாக திட்டமிடுகின்றோம் இதுவே தன்னம்பிக்கை(CONFIDENCE )யாகும்

இவ்வுலகில் பலரும் நோய்நொடியால் அவதியுறுவதை பார்த்தபின்னரும் நாம் அனைவரும் திருமணம் செய்துகொண்டு மனைவி மக்கள் என வாழ எண்ணுகின்றோம் அதுவே மனித நேயம் அல்லதுஅன்பு (LOVE )ஆகும்

எண்பது வயது கிழவன் ஒருவன் அறுபத்திநான்கு வருடஅனுபவமுள்ள பதினாறு வயது வாலிபன் இவன் எனும் வாசகத்துடன் கூடிய ஒரு பதினாறு வயது வாலிபனினுடைய உடையை அணிந்துகொண்டு இருந்தான் அதுவே மனப்பாங்கு (ATTITUDE)ஆகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...