ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு பிரச்சினையையும் சாதுரியமாக கையாளதெரிந்திருந்தால் வாழ்வின் இயக்கம் தங்குதடையின்றி செல்லும்


ஆல்பர்ட ஐன்ஸ்டின் எனும் அறிவியல் அறிஞர் தன்னுடைய புகழ்பெற்ற சார்பியில் கொள்கை பற்றி பல்வேறு பல்கலைகழகங்களுக்கும் சென்று விளக்க சொற்பொழிவு ஆற்றிவருவது வழக்கமான செயலாகும்

அவ்வாறான சொற்பொழிவிற்கு சென்றுகொண்டிருக்கும்போது ஒருநாள் அவருடைய மகிழ்வுந்து வண்டியை ஒட்டும் செல்லும் ஓட்டுநர் ஐயா நான் உங்களுடைய புகழ்பெற்ற சார்பியில் கொள்கை பற்றிய விளக்க சொற்பொழிவை பலமுறை கண்டு கேட்டு வருவதால் எனக்கு மனப்பாடமாக ஆகிவிட்டது அதனால் நானே அதனை பற்றி விளக்க சொற்பொழிவு ஆற்றும் அளவிற்கு எனக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது என கூறியவுடன் உனக்கு ஒருவாய்ப்பு தருகின்றேன் எனக்கு பதிலாக இன்று நீஅந்த விளக்க சொற்பொழிவு ஆற்றுக என ஆல்பர்ட ஐன்ஸ்டின் பதிலளித்ததும்

உடன் இருவரும் உருவத்தை மாற்றியமைத்துகொண்டு இடமாறி அமர்ந்து பல்கலைகழகத்திற்குள் சென்று மேடையில் அன்றைய சார்பியில் கொள்கை பற்றிய விளக்க சொற்பொழிவு பார்வையாளர்களிடம் அந்த மகிழ்வுந்து ஓட்டுநராலேயே வழங்கபட்டது

கூட்டமுடிவில் பார்வையாளர்களில் ஒருவர் தன்னுடைய சார்பியில் கொள்கை பற்றிய சிற சந்தேகத்தை நிவர்த்தி செய்திடுமாறு கோரியபோது அதுஎன்ன பிரமாதம் உங்களுடைய சந்தேகத்தை என்னுடை மகிழ்வுந்து ஓட்டுநரே நிவர்த்திசெய்வார் என ஐன்ஸ்டினை அழைத்து அவரிடம் அந்த சந்தேகத்தை கூறிடுமாறு திசைதிருப்பியபின்னர் ஐன்ஸ்டினும் பார்வையாளர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்

ஆம் எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு பிரச்சினையையும் சாதுரியமாக கையாளதெரிந்திருந்தால் வாழ்வின் இயக்கம் தங்குதடையின்றி செல்லும் என அறிந்து கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...