திங்கள், 16 நவம்பர், 2015

நாம் அனைவரும் மற்றவர்களின் உண்மையான நிலையை அறிந்துகொள்ளாமல் அவர்களுக்கு மனதளவில் துன்பம் கொடுப்பதில் வல்லவர்களாக இருக்கின்றோம்


தொடர் வண்டி ஒன்று பெரிய நகரத்திலிருந்து தன்னுடைய பயனத்தை துவங்கியது அதில் ஏராளமான பயனிகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகமுக்கியமாக தத்தமது பணிக்கு சென்று பணிமுடிந்து வீடுதிரும்புவோர்கள் அதிகஅளவு இருந்தனர் இளம் கணவன் மனைவிமார்களும் கல்லூரியில் பயிலும் இளைஞர்களும் அந்த பெட்டியில் கூட்டமாக பயனம் செய்தனர் அந்த பெட்டியில் ஒருவயதான மனிதனும் 30 வயதுடைய இளைஞனும் சாளரத்திற்கு அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்திருந்தனர் .

அந்த இளைஞன் அங்கே பாருங்கள் அப்பா அனைத்து மரங்களும் செடிகொடிகளும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன என்று தன்னுடைய தந்தையிடம் மிகவும் மகிழ்ச்சியோடு சத்தமிட்டு கூறிக்கொண்டிருந்தான் அதனை கண்ணுற்ற அருகிலிருந்தோர் அனைவரும் என்ன இந்த இளைஞன் பித்துபிடித்தவன் போலும் அதனால்தான் கூக்குரலிடுகின்றான் என தங்களுக்குள் முனுமுனுத்தனர் சிறிதுநேரம் கழித்து சாரல்மழை துவங்கியது அதனை கண்ணுற்ற அந்த இளைஞன் மேலும் அதிக மகிழ்ச்சியுடனும் சத்தத்துடனும் அப்பா அப்பா இப்போது பாருங்களேன் என்ன அருமையாக மழை பொழிகின்றது என மகிழ்ச்சி கூச்சிலிட்டான்

இதனை கண்ணுற்ற மற்ற பயனிகள் அந்த பெரியவரிடம் தே பெரிசு உங்களுடைய பித்தாங்குளி பையனை அடக்கிவையுங்கள் இந்த சாளரத்தை முதலில் மூடிவிடுங்கள் எங்களுக்கு எல்லாம் ஒரே தொந்தரவாக இருக்கின்றது வாயை மூடிக்கொண்டு இருக்கசொல்லுங்கள் என சன்டைபிடிக்க ஆரம்பித்தனர்

உடன் பெரியவரும் ஐயாமார்களே அம்மாமார்களே சிறிது மன்னித்துகொள்ளுங்கள் எனக்கூறினார் தொடர்ந்து அந்த இளைஞனுக்கு சிறுவயதிலிருந்து கண்பார்வை இல்லாமல் இருந்துவந்தது கடந்தவாரந்தான் அவர்களுடைய தாய் இறந்தபோது அவருடைய கண்களை அறுவைசிகிச்சை வாயிலாக இந்த இளைஞனுக்கு பொருத்தப்பட்ட பார்வை திரும்பியது தற்போதுதான்முதன்முதல் மருத்துவமனையிலிருந்து தங்களுடைய வீட்டிற்கு திரும்பி வருகின்றோம் எனக்கூறி தங்களுடைய இருக்கையிலிருந்து எழுந்து அடுத்த பெட்டிக்கு தன்னுடைய மகனை அழைத்துசென்றார்

நாம் அனைவரும் மற்றவர்களின் உண்மையான நிலையை அறிந்துகொள்ளாமல் அவர்களுக்கு மனதளவில் துன்பம் கொடுப்பதில் வல்லவர்களாக இருக்கின்றோம் என்பதே எதார்த்தமான உண்மைநிலவரமாகும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...