திங்கள், 2 நவம்பர், 2015

தற்போதைய சமூதாய நிலை


பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் நீதி ஒழுக்கம் ஆகியவற்றை பின்பற்றுவதற்காக கண்டிப்பாக வாரம் ஒருநாள் நீதிபோதனை வகுப்பு நடைபெறும். அதில் பல்வேறு நீதிக்கதைகளை கூறி மாணவர்கள் அனைவரும் நல்லொழுக்கங்களை பின்பற்றிடுமாறு அறிவுறுத்தபடுவார்கள்.

அவ்வாறானதொரு நீதிபோதனை வகுப்பில் ஒருமாணவன் தன்னுடைய தகப்பனாரானவர் தன்னிடம் தன்னுடைய தாய் பற்றிய கதையொன்றை கூறியதாக கதைகூறஆரம்பித்தான்.

அவர்களுடைய தாய் கடற்படையில் சிறந்த விமானியாக இருந்தார் ஒருசமயம் அவர் பயனித்த கப்பற்படையின் போர்விமானம் போதுமான எரிபொருள் இல்லாததால் கடற்கரையோர மணலில் சென்று தரையிரங்கியது. அப்போது கைவசம் ஒருபாட்டில் விஸ்கி, கைத்துப்பாக்கி ,கூர்மையான கத்தி ஆகிய மூன்றுமட்டுமே இருந்தன. உடன் அவர் பாட்டில் விஸ்கி முழுவதும் குடித்துமுடித்தார். பின்னர் அருகில் இருந்த கிராமமக்களை தன்னுடைய கைத்துப்பாக்கியிலிருந்த குண்டுகள் முழுவதும் தீரும்வரை சூட்டுவீழ்த்தினார். அதற்கடுத்ததாக தன்னுடைய கையிலிருந்த கூர்மையான கத்தியின் இருமுனையும் மழுங்குமளவிற்கு அருகிலிருந்த கிராமமக்களை வெட்டி வீழ்த்தினார் இறுதியாக பசிமயக்கத்தில் கடற்கரையோரம் சாய்ந்துவிட்டார்

அந்நிலையில் அவர்பணிபுரிந்துவந்த கப்பற்படையின் சகவீரர்கள் உடன் பணிபுரிந்த படைவீரரையும் விமானத்தையும் நீண்டநேரமாகியும் கானோமே என அவரை தேடிபிடித்து அழைத்து சென்று அவருடைய உயிரை காத்தனர். அதனால் உங்களுடைய தாய் விஸ்கி குடித்திருக்கும்போது மட்டும் அவருடைய அருகே செல்லாதே என என்னுடைய தந்தை அடிக்கடி என்னிடம் கூறுவர் என அந்த மாணவன் கூறினான்.

நம்முடைய தமிழ்நாட்டு நிலைகூட அவ்வாறு தான் உள்ளது அனைவருக்கும் சாராயம் மட்டும் எளிதாக கிடைத்திடுகின்றது அதன்மூலம் தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் தத்தமது சம்பாதிப்பயையும் உடல்நலத்தையும் ஒருங்கே இழப்பதற்கானசூழலும் வளமாக உள்ளன.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...