ஞாயிறு, 25 அக்டோபர், 2015

இந்திய குடும்ப வாழ்க்கையின் நடைமுறை


இந்திய விமானப்படைத்தளத்திற்குள் விமானம் ஒன்று தவறுதலாக தரையிறங்கிவிட்டது உடன்அந்த தளத்தின் உயர்அதிகாரியிடம் அந்த விமானஓட்டியை அழைத்து சென்றனர்

அவரும் விமானப்படைத்தளத்திற்குள் அத்துமீறி அந்த விமானஓட்டி தான் ஒட்டிவந்த விமானத்தை தரையிறங்க செய்ததால் அவரை ஒருநாள்முழுக்க 24 மணிநேரத்திற்கு வேறுஎங்கும் தப்பிச்செல்லாமல் காவலில் வைத்திடுமாறு உத்திரவிட்டார் அவ்வாறு அவரை வீட்டுக்காவல் போன்று அவரை வைத்திருந்து 24 மணிநேரம் முடிந்ததும் அவரை மீண்டும் அந்த விமானப்படைத்தளத்திற்குள் அத்துமீறி விமானத்தை ஓட்டவேண்டாம் என எச்சரித்து அனுப்பினர்

.மறுநாள் அதே விமானம் அந்த விமான படைதளத்திற்குள் முன்பு போன்றே தரையிறங்கியது அதனை தொடர்ந்து அந்த விமான ஒட்டியுடன் ஒருபெண்ணும் இருந்ததை கண்டு இருவரையும் கைதுசெய்து தங்களுடைய தளத்தின் உயர்அதிகாரியிடம் அவ்விருவரையும் அழைத்து சென்றனர். அந்த விமானபடைதளத்தின் முதன்மை அதிகாரி மிகக்கோபமாக ஏற்கனவே எச்சரித்திருந்தும் மீண்டும் ஏன் அத்துமீறி விமானபடைதளத்தில் தரையிறங்க செய்தீர் என வினவியபோது

மன்னிக்கவேண்டும்ஐயா நான் நேற்று நாள்முழுக்க 24மணிநேரமும் இங்குதான் இருந்தேன் வேறு எங்கும் செல்லவில்லை வேறெஎந்த தவறும்செய்யவில்லை என என்னுடைய மனைவியிடம் என்னை பற்றிய உண்மைநிலையை நிரூபிப்பதற்காகவே இந்தமுறை விமான படைதளத்திற்குள் தரையிறங்கியதாகவும் அதனை என்னுடைய மனைவி நேரில் வந்து உறுதிபடுத்தவும் இவ்வாறு செய்ததாகவும் தன்னை இந்த ஒருமுறைமட்டும் போனமுறை செய்தவாறு கைதுசெய்து 24மணிநேரம் கழித்து விடுவித்தால் போதும் என்றும்அந்த விமானி கூறினார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...