ஞாயிறு, 18 அக்டோபர், 2015

உதவிதேவைபடுவர்களுக்குக் கண்டிப்பாக கிடைக்கச்செய்வதே இயற்கையின் செயல் அல்லது தற்செயல் நிகழ்வாகும்


பிரபலமான மருத்துவர் ஒருவர் தூரத்தில் இருந்த நகரத்திற்கு அவசரமாகப் போகவேண்டிய நிலையில் ஆகாயவிமானத்தில் பயனம் செய்யலாம் எனமுடிவுசெய்து தன்னுடைய பணியை முடித்து விமான நிலையத்திற்கு வந்தபோது அன்று கடுமையான சூறாவளியான புயல்காற்றுவீசி அதிகமழை பொழிய ஆரம்பித்ததால் விமானப் போக்குவரத்து சேவையை நிறுத்தம் செய்துவிட்டனர். அதனால் ,மிகவருத்ததுடன் எப்படி அந்த நகருக்கு சென்று சேருவது என அவர் தவித்தபோது வரவேற்பு பணியாளர் “வாடகை மகிழ்வுந்து ஒன்றினை மாற்று ஏற்பாடாக அமர்த்தியுள்ளதாகவும்,அந்த வண்டி நான்கு அல்லது ஐந்துமணிநேரத்தில் அந்த நகரத்திற்குச் சென்று சேரலாம்”, என்றும் கூறினார் . div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அதனை ஏற்று அவரும் வாடகை மகிழ்வுந்தில் பயனத்தைத் தொடர்ந்தார். இரவுநேரமாக இருந்ததாலும் கடுமையான சூறாவளி,புயல்காற்றுவீசி அதிகமழை பொழிவாக இருந்ததாலும், ஒரே இருட்டாகச் செல்லும் பாதையே தெரியாத அளவிற்கு ஆகியதால் வழியில் மனிதர்கள் வாழும் வீடுகள் ஏதேனும் இருக்கின்றதா அங்குச் சிறிது ஒய்வெடுத்து செல்லலாம் எனத் தேடியபோது, தனியான வீடு ஒன்று தூரத்தில் தெரிந்தது. div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அந்தவீட்டிற்குச் சென்று கதவைதட்டியபோது நடுவயது பெண் கதவைதிறந்து இந்த மருத்துவரை உள்ளே அழைத்து க்குடிப்பதற்கு தேவையான சூடான பாணமும்,பசியைபோக்குவதற்கு த்தேவையான அளவு உணவும் அளி்த்தார். பின்னர் வீட்டின் மையத்தில் அமர்ந்து துதிப்பாடல்களை மனமுருக பாடி வேண்டிகொண்டிருந்தார். div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அந்த பிரார்த்தனை முடிந்தபின்னர் மருத்துவர் அந்தப் பெண்ணிடம் “எதற்காகத் துதிபாடல் பாடி வேண்டுதல் செய்கின்றார்”, என வினவினார் உடன் அந்தத் தாயானவள் “தன்னுடைய மகன் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதனை இந்த மருத்தவரின் பெயரை கூறி அவரால் மட்டுமே குணப்படுத்தமுடியும் என்றும் அந்தஅளவிற்குத் தனக்கு ப் பணவசதி இல்லாததால் தன்னுடைய மகனை நோயிலிருந்து மீண்டுஎழுவதற்காக பிரார்த்தனை செய்வதாகவும்”, கூறியதை கேட்டார். div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
‘இயற்கையானது அவர் செல்லும் விமானசேவையை இரத்துசெய்யவைத்து , வாடகைவண்டியில்அவரைப் பயனம்செய்வைத்து, அந்த பெண்மனியின் மகனை காப்பாற்றுவதற்கு ஏற்படுத்தியுள்ள தற்செயல் நிகழ்வுகளைகண்டு ‘ அந்த மருத்துவருக்கு மிக ஆச்சரியமாக ஆகிவிட்டது ! உடன் அந்தப் பெண்மனியின் மகன் எந்தஇடத்தில் படுக்கவைக்கபட்டுள்ளான் என அறிந்து அங்குச் சென்று அவனுக்குத் தேவையான மருத்துவசிகிச்சைசெய்து உயிரபிழைக்கசெய்தார்.

எப்போதும் இயற்கையின் செயலானது அல்லது தற்செயல் நிகழ்வானது உதவிதேவைபடுவர்களுக்குக் கண்டிப்பாக கிடைக்கச்செய்கின்றது என்பதே உண்மையான நிலையாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...