செவ்வாய், 13 அக்டோபர், 2015

எப்போதும் எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு தயாராக இருந்திடுக


ஒருஇருண்ட இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் இளைஞன் ஒருவன் தன்னுடைய தந்தையின் மகிழ்வுந்து வண்டியை தனியாக ஓட்டிவந்தான். அப்போது வழியில் நடுத்தர வயது கொண்ட பெண்ஒருவள் கையசைத்து கொண்டிருந்தாள். உடன் தன்னுடைய வண்டியை நிறுத்தி அப்பெண்மனியை வண்டியில் ஏற்றிகொண்டு சென்றான். அவர்விரும்பும் இடத்தில் கொண்டுசென்று விட்டுவிட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

ஒருவாரம் கழித்து ஒருபிரபலமானநிறுவனம் ஒன்றில் அவனுக்கு பணிபுரிவதற்கான நியமன கடிதமும் அதனோடு கூடவே ஒரு நன்றிகடிமும் அந்த இளைஞனுக்கு வந்தசேர்ந்தது. அதில் இருண்ட இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிர்க்கதியாக நின்றிருந்தபோது தனக்கு உதவிசெய்து தன்னுடைய கணவனின் உயிர்போகவிருந்த ஆபத்தான நேரத்தில் அவரை காப்பாற்ற தனக்கு உதவிய அந்த இளைஞனுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அதற்கு கைமாறாக அந்த இளைஞன் தேடிடும் வேலைவாய்ப்பினை அவருடைய கணவனின் நிறுவனம் ஒன்றின் பணிசெய்வதற்கான நியமன உத்திரவை அனுப்பியுள்ளதாகவும் அதனை பெற்று உடன் பணியில் சேருமாறும் கோரியிருந்தது.

இதேபோன்று நாமும் நம்முடைய வாழ்வில் எப்போதும் எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு தயாராக இருக்கவேண்டும்.

அதனை தொடர்ந்து அவ்வாறு உதவிசெய்வதற்கான நன்றியை தெரிவிப்பதோடு கைமாறு செய்வதற்கும் தயாராக இருக்கவேண்டும்என்ற அடிப்படை நியதியை பின்பற்றிடுக.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...