திங்கள், 5 அக்டோபர், 2015

நாம் எந்தவழியை பின்பற்றுகின்றோமோ அதற்கற்ப நம்முடைய வாழ்வு அமையும்


இருவேறு கிராமங்கள் அருகருகே இருந்துவந்தன அவற்றுள் கோபம்,பொறாமை , மற்றவர்களின் முதுகில் குத்துவது தந்திரமாக மற்றவர்களின் காலை வாரிவிடுவது , ஏதாவது சண்டை சச்சரவு அடிதடி நடத்துவது என எப்போதும் போர்க்களம் போன்றே முதலில் உள்ள கிராமத்து மக்களின் வாழ்க்கை சூழல் இருந்துவந்தது

அதற்குமாறாக இரண்டாவது கிராமத்தில் உண்மை,நேர்மை,அமைதி, மகிழ்ச்சி மற்றவர்களுக்கு உதவுவது ஒற்றுமையாக இருப்பது ஒருவருக்கொருவர்விட்டுகொடுத்து வாழ்வது என்றவாறான சூழலில் மக்கள் வாழ்ந்துவந்தனர் கால ஓட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகுமுதலில் குறிப்பி்ட்ட கிராமமானது முழுவதும் அழிந்து மக்கள் இருந்ததற்கான அடிச்சுவடே இல்லாமல் போய்விட்டது ஆனால் இரண்டாவது கிராமமானது எப்போதும் போன்று வழக்கமாக சகோதர உணர்வுடன் நீண்டநாட்கள் இருந்து வந்தது

இந்த இருவேறு கிராம மக்களின் வாழ்க்கையின் தன்மைகளில் தனிமனிதனாகிய நாம் எந்தவகையான வாழ்வை தெரிவுசெய்து வாழுகின்றோமோ அதைபொருத்தே நம்முடைய வாழ்வின் இயக்கமும் முடிவும் அமையும் என்பதை மனதில் கொள்க.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...