செவ்வாய், 13 அக்டோபர், 2015

இந்தியாவில் இதுபோன்ற நீதிமன்றம் ஏழைக்கு உதவிடும் நிகழ்வு நடைபெறுமா


மார்சுகி எனும் பெயர் கொண்ட இந்தோனேசிய நீதிபதி ஒருவர் இருந்தார். அவர்பணிபுரிந்துவந்த நகரத்திலிருந்த ஒரு தோட்டத்திலிருந்து சில மரவள்ளிக்கிழங்குகளை வயதானகிழவி ஒருவர் திருடிவிட்டார் என்ற வழக்கு அவரிடம் வந்தது. அந்த வயதான கிழவியும் அந்த செயலை தன்னுடைய வறுமையான குடும்பு சூழலால் அதாவது அவருடைய பேத்தி பசியோடு இருந்ததாகவும் அவருடைய மகன் சுகவீனமுற்றிருந்த காரணத்தால் அவருடைய பேத்தியின் பசியினை போக்க அவ்வாறு திருடியாதாக ஒப்புக்கொண்டார்.

ஆனால் , தோட்ட மேலாளர் அந்த வயதான கிழவியினை போன்று மற்ற யாரும் அவருடைய தோட்டத்தில் திருடாமல் தடுப்பதற்காக அந்த வயதான கிழவியை மன்னித்தலுக்கு பதிலாக கண்டிப்பாக தண்டிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வாதாடினார்.

நீதிபதியானவர் அந்த வயதான கிழவியை பார்த்து ஆவணங்கள் அனைத்தும் மிகச்சரியாக அந்த வயதான கிழவிக்கு ஏதிராகவே இருப்பதாகவும் தான் அந்த வயதான கிழவிக்காக இரக்கபடுவதை தவிர சட்டபடியும் ஆவணத்தின் படியும் தண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என கூறி அந்த வயதான கிழவியானவள் ஒரு மில்லியன் அமெரிக்கடாலர் அபராதம் செலுத்தவேண்டும் அல்லது 2 1/2 ஆண்டுகள் சிறையில் இருக்கவேண்டும் என சட்டம் கூறுவதால் ஒரு மில்லியன் அமெரிக்கடாலர் அபராதம் விதிப்பதாக தீர்பு கூறினார் .

உடன்அந்த வயதான கிழவி நான் எங்குசென்று அந்த பணத்தை கொண்டுவருவேன் அவ்வளவு தொகை இருந்தால் நான் ஏன் அந்த மரவள்ளிகிழங்கு தோட்டத்திற்கு திருடவந்தேன் என்னுடைய மகனை மருத்துவசிகிச்சை செய்து நன்றாக செயல்படும்படி செய்வேனே என அழுது புலம்பினாள்.

இதனை கண்ணுற்ற நீதிபதி உடன்தன்னுடைய தலையில்அணிந்திருந்த தொப்பியை கழற்றி தன்னுடைய பையிலிருந்து 1000 அமெரிக்க டாலரைஅதில் வைத்து தன்னுடைய உதவியாளரை அழைத்து அந்த நீதிமன்றத்திற்கு வந்துள்ள அனைவரிடமும் அந்த வயதானகிழவிநீதிமன்றத்திற்கு செலுத்தவேண்டிய அபராத தொகைக்கான நன்கொடையை வசூலிக்குமாறு கூறினார்.

உடன் அந்த நீதிபதியின் உதவியாளர் அந்த நீதிமன்றத்திற்கு வந்திருந்த அந்த தோட்டமேலாளரையும் சேர்த்து அனைவரிடமும் நன்கொடை வசூலித்தார். முடிவாக, அவர் அந்த வயதான கிழவி செலுத்தவேண்டிய அபராத தொகையான ஒருமில்லியன் அமெரிக்கடாலரை செலுத்தியபின் மிகுதி இரண்டரை மில்லியன் தொகை இருந்ததை அந்தவயதான கிழவியும் வழங்கி அவருடைய மகனின் மருத்துவசெலவிற்காக அதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அந்த நீதிபதி அறிவுரைகூறி அனுப்பிவைத்தார்.

நம்முடைய இந்தியாவில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுமா என யோசித்துபாருங்கள் .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...