திங்கள், 9 நவம்பர், 2015

இவ்வுலகில் வாழும் நாம் அனைவரும் சமம்


முன்னொரு காலத்தில் முதிய துறவிஒருவர் பாலைவணத்தில் அமர்ந்து தவம்புரிந்து கொண்டிருந்தார். அந்நிலையில் அவர் சுற்றுசூழலையே மறந்திருப்பார் அதனால் எதுநடந்தாலும் அதில் அவருடைய கவணம் செல்லாது .

அப்போது அந்த நாட்டினுடைய அரசன் அந்த வழியே தன்னுடைய படையுடன் சென்றுகொண்டிருந்தார் . பொதுவாக அரசனை பார்த்தவுடன் நாட்டுமக்கள் அனைவரும் தாம் எந்த பணியை செய்து கொண்டிருந்தாலும் அதனை அப்படியே நிறுத்தம்செய்துவிட்டு எழுந்துநின்று தலைகுனிந்து அரசனுக்கு மரியாதை செய்வது வழக்கமான செயலாகும் .

ஆனால்அவ்வாறு எதுவும் செய்திடாமல் இந்த முதிய துறவி அமர்ந்திருந்ததை கண்ணுற்ற அரசன் தன்னுடைய மந்திரியை அழைத்து "இந்த துறவி ஏன் அவ்வாறு மரியாதை செய்யாமல் அமர்ந்துள்ளார் " என விசாரித்து வருமாறு உத்திரவிட்டார் .உடன் மந்திரியும் அரசன் உத்திர விட்டவாறு அந்ததுறவியிடம் சென்று "நம்முடைய நாட்டு அரசன் இந்த வழியே செல்லும்போது நம்முடையஅரசருக்கு எழுந்துநின்று ஏன் குனிந்து வணங்கவில்லை " என வினவினார்

அந்த துறவியானவர் "ஒருநாட்டின் அரசனுக்கு குடிமக்கள் அனைவரும் அடிமையன்று. அந்நாட்டின் குடிமக்களை சரியாக பாதுகாத்து அவர்களின் குறைநிரைகளை சரிசெய்வதே அரசனுடைய பணியாகும். இவ்வுலகில் அரசனும் சாதாரணகுடிமகனும் சரிசமமானவர்களே எவ்வாறு எனில் இறந்தபின்னர் அனைவரையும் மண்ணில் குழிதோண்டி புதைத்தபின் சிறிதுகாலம் கழித்து தோண்டிபார்த்தால் அனைவருடைய எலும்புகளும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும் அதனால் அரசன் உயிருடன் இருக்கும்வரை அவருக்கு கிடைத்த அரசபதவியை கொண்டு மற்றவர்களுக்கு தொந்திரவு கொடுத்திடாமல்பொதுமக்கள் அனைவருக்கும் நல்லசெயலைசெய்து வாழச்சொல்லுங்கள் !" என அந்த துறவி அறிவுரை கூறினார்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...