திங்கள், 9 நவம்பர், 2015

நாம் எதையும் கொண்டுவரவில்லை அதனால் நாம் எதையும் கொண்டுசெல்லமுடியாது


உலகில் ஏராளமான நாடுகளை வெற்றிகொண்டு தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த மாபெரும் பேரரசன் அலெக்ஸான்டர் உடல்நிலைசரியில்லாமல் படுத்தபடுக்கையாகிவிட்டார் தன்னுடைய நாட்டிற்கே திரும்புவோமா என்ற சந்தேகம் அவருக்கு வந்து விட்டது . அந்தளவிற்கு அவருடைய உடல்நிலை மோசமாகவிட்டது

ஒருவழியாக அவருடைய நாட்டிற்கு வந்துசேர்ந்தவுடன் தன்னுடையஅமைச்சரை அருகில் அழைத்து தான் இனிஉயிருடன் இருக்கபோவதில்லை அதனால் தான் இறந்தவுடன் தன்னுடைய இருவிருப்பங்களைமட்டும் செயல்படுத்திடுமாறு வேண்டிக்கொண்டார் அவருடைய அமைச்சரும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார்.

"முதல் விருப்பமாக தான் இறந்தபின் தன்னுடைய உடலை சுடுகாடுநோக்கி எடுத்துசென்றிடும் வழிமுடிவுவரை தான் வெற்றிகொண்ட நாடுகளில் இருந்துகொண்டுவந்த அனைத்து பொன் வெள்ளி நாணயங்கள் ஒன்றைகூட கையிருப்பில் வைத்திடாமல் அனைத்தையும் கீழே கொட்டிகாலிசெய்துவிடவேண்டும் ஏனெனில் ஒரு ரூபாய்கூட என்னோடு நான் எடுத்து செல்லமுடியாது"

"இரண்டாவதாக என்னுடைய புதைகுழியில் என்னுடைய கைகளை திறந்துவைத்தவாறு வைத்திடவேண்டும் ஏனெனில் நான் பிறக்கும்போது கைகளில் எதையும் எடுத்துவரவில்லை அவ்வாறே நான் இறந்தபின்னரும எந்தவொருபொருளையும் கைகளில் எடுத்தசெல்லவில்லை என அனைவருக்கும் தெரியவேண்டும் " என்றவாறு அவருடைய விருப்பத்தினை கூறிமுடித்தவுடன் அவருடைய உயிரும் அவருடைய உடலைவிட்டு பிரிந்தது.

நீதி நாம் என்ன சம்பாதித்தாலும் வெற்றிகொண்டாலும் நம்மோடு ஒன்றுகூட கொண்டுசெல்லமுடியாது என்பதே உண்மைநிலையாகும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...