திங்கள், 9 மே, 2016

எந்தவொரு நிகழ்வையும் தீர விசாரித்து அறிவதே நல்லது


ஆறு,ஓடை ,கினறு போன்றவைகளில் காணப்படும் தவளையை பிடித்து எடுத்துவந்து ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தினை சூடேற்றிடுக அதனை தொடர்ந்து பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் வெப்பநிலை உயர உயர அதற்கேற்றவாறு அதில் நாம் கொண்டு வந்த இட்ட தவளையும் தன்னுடைய உடல் வெப்பநிலையை சரிசெய்து கொண்டு சமாளித்து நீந்திகொண்டிருக்கும் பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் வெப்பநிலையானது கொதிநிலைய அடையும்போது அதற்குமேல் அந்த தவளையால் தன்னுடைய உடல் வெப்பநிலையை சரிசெய்து வாழமுடியாத நிலை ஏற்படும் அதனால் அந்த தவளையானது பாத்திரத்தில் சூடான தண்ணீரில் இருந்து தப்பிக்கலாம் என தாவிகுதிக்க முயற்சிசெய்திடும் ஆனால் அந்த தவளையால் தாவிகுதித்து தப்பிக்கமுடியாது ஏனெனில் தவளையானது தன்னுடைய சக்தி முழுவதையும் பாத்திரத்தில் இருந்த தண்ணீரின் வெப்பநிலைக்கு ஏற்ப தன்னுடைய உடலின் வெப்பநிலை சரிசெய்து கொள்வதற்காகவே செலவிட்டுவிட்டது அதனால் அந்த தவளையால் பாத்திரத்திலிருந்து வெளியே தாவி குதித்து செல்வதற்கான சக்தி அதனிடம் காலியாகி விட்டதால் அப்படியே அந்தவளையானது கொதிக்கும் நீரில் இறந்து மிதக்கும்

உடன் நம்மில் பெரும்பாலானோர் சூடாக கொதிக்கும் தண்ணீர்தான் அந்த தவளையை கொன்றுவிட்டது எனமுடிவுசெய்திடுவோம் உண்மை அதுவன்று அந்தவளையானது தான் இருக்கும் சூழல் மாறுகின்றதே உடனே இந்த சூழலிலிருந்து தப்பித்துவிடுவோம் என ஆரம்பத்திலேயே முயற்சிசெய்திருந்தால் தப்பித்திருக்கலாம் ஆனால் அதற்கு பதிலாக சூழலிற்கு தக்கவாறு தன்னுடைய உடல்நிலையை தகவமைத்து கொள்வதற்காகவே தன்னுடைய சக்திமுழுவதும் செலவிட்டபின் சக்தியே இல்லாதுபோது அதற்கு மேலும் உடலை தகவமைத்து கொள்ளமுடியாத நிலையில் வெளியே தப்பிசெல்லவேண்டும் எனஅதற்காக முயலும்போது அந்ததவளையால் இயலவில்லை என்பதே எதார்த்தமான உண்மைநிலையாகும்

இவ்வாறே நாம் வாழும் இந்த சமூக சூழலில் எந்தவொரு நிகழ்விற்கு ஏற்பவும் நம்மை சரிசெய்து தகவமைத்து கொண்டு வாழத்தலைப்படு-வதற்காக நம்முடைய சக்தி, அறிவாற்றல் ஆகிய அனைத்தையும் செலவிட்டு அவைமுழுவதையும இழந்துவிடுகின்றோம் குறிப்பிட்ட நிலைக்குமேல் நம்மால் தகவமைத்து வாழ இயலாத சூழலில் தப்பிக்கமுடியாமல் நாம் வாழும் இந்த சமூக சூழலை குறைகூறி நம்முடைய வாழ்வை முடித்து கொள்கின்றோம் ஆயினும் மிகச்சரியாக நன்றாக நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ நினைப்பவன் எந்தெந்த சூழலில் சரிசெய்து தகவமைத்து வாழ்வது எந்தெந்த சூழலை தவிர்த்து தப்பித்து செல்வது என முடிவுசெய்தால் நிம்மதியாக மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...