ஞாயிறு, 15 மே, 2016

பெற்றோர்கள் மீது பிள்ளைகளுக்கு ஏற்படும் குருட்டுத்தனமான கோபம்


ஒருநாள்என்னுடைய பெற்றோர்களான தந்தையின் மீதும் தாயின்மீதும் எனக்கு அளவற்ற கோபம் வந்தது அதனால் இந்த வீட்டில் இனிமேல் அவர்களுடன் வாழ்வது இல்லை என முடிவுசெய்து வீட்டைவிட்டு வெளியில் கிளம்பலாம் என முடிவுசெய்தேன் ஏனெனில் நான் பொறியியாளர் கல்வியை பயின்று முடித்துவிட்டேன் ஒரு பொறியாளர் எனில் பல இடங்களுக்கு சென்று பார்வையிடவேண்டாமா அவ்வாறு பலஇடங்களுக்கு செல்வதற்கு ஒரு இருசக்கர வாகணம் கோரினால் அதனை இதுவரையில் வாங்கி கொடுக்காமல் இருக்கின்றனரே தங்களுடைய மகன் கோரிய சிறு கோரிக்கையை கூட நிறைவேற்றாத பெற்றொருடன் இனி இருப்பது சரியன்று வெளியே சென்று மிகப்பெரிய பணக்காரணாக மாறி அப்போது இந்த பெற்றொரை என்னிடம் ஓடிவர செய்கின்றேன் பார் என கருவிக்கொண்டு கிளம்ப ஆயத்தமானேன் ஆடைகளை எடுத்து உடுத்தி கொண்டு தந்தையுடைய இடுப்பு பட்டையை எடுத்து மாட்டிகொண்டு அவருடைய காலணியையைும் மாட்டிகொண்டு வெகுவேகமாக அருகிலிருந்த பேருந்த நிலையத்திற்கு சென்றேன் ஆனால் அன்று அங்கு பேருந்து ஒன்று கூட இல்லை கோபம் அவனுக்கு மேலும் அதிகமானது இந்த அரசு சரியாக பேருந்தை கூட இயக்கமாட்டேன் என்கின்றது சே இந்த நாட்டில் வாழ்ந்து என்ன புன்னியம் என சட்டை பையில் கைவைத்தபோது ஏதோவொருசில சீட்டுகள் தென்பட்டன அவைகளை எடுத்து பார்த்தபோது அதில் ஒன்று என்னுடைய தந்தை பணிபுரிந்த அலுவலகத்திலிருக்கும் கூட்டறவு கடன் சங்கத்தில் அவனுக்கு மடிக்கணினி வாங்குவதற்கான கடன்பெறும் சீட்டாகும் மற்றொரு சீட்டு தந்தையின் இருவசக்கர வாகணத்தை ஒப்படைப்பு செய்து அதற்கு பதிலாக அவனுக்கென புதிய இருசக்கர வாகணத்தை வாங்குவதற்கான அத்தாட்சியாகும் அதனை கண்ணுற்றவுடன் ‘அடடா நம்முடைய தந்தை நாம் கோரியவாறு புதிய இருசக்கர வண்டியை வாங்குவதற்கு போதிய பணம் இல்லாததால் தான் அலுவலகத்திற்கு செல்ல பயன்படுத்திடும் இருவசக்கர வாகணத்தை விற்றுவிட்டு அதற்கு பதிலாக கூடுதலாக செலவிட்டு எனக்கு புதிய இருசக்கர வாகணத்தை வாங்கிதர போகின்றாரா ஐயையோ அவரை தவறாக எண்ணிவிட்டேனே’ என கண்ணீருடன் அழுதுகொண்டு இந்த செயலை தடுக்கவேண்டும்எனவேகமாக வீடுவந்து சேர்ந்தேன் அங்கு அவனுடைய தந்தையையும் காணோம் அவருடைய இருசக்கர வாகணத்தையும் காணோம் அதனால் மிகவேமாக அவனுடைய தந்தை இருசக்கர வாகணத்தை மாற்றி வாங்க சென்றிருந்த கடைக்கு சென்ற “அப்பா என்னை மன்னித்துவிடுங்கள் நான் உங்களை தவறாக என்னிவிட்டேன் எனக்காகஎவ்வளவோ தியாகம் செய்துள்ளீர்கள் உங்களுடைய இருசக்கரவாகணத்தை விற்றுவிட்டு எனக்கு புதிய இருசக்கர வாகணத்தை வாங்கவேண்டாம்” என தடுத்து அவரை மெதுவாக வீட்டிற்கு அவருடைய இருசக்கரவாகணத்தில் வீடு கொண்டு வந்த சேர்த்தான் ஆம் பிள்ளைகள் தத்தமது பெற்றோர்களின் தியாகத்தை புரிந்துகொண்டு அதனை அங்கீகரித்து அவர்களை மதிப்புடன் நடத்தவேண்டியது ஒவ்வொரு பிள்ளையின் பொறுப்பாகும் என்ற செய்தியை தெரிந்துகொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...