திங்கள், 2 மே, 2016

பால் பண்ணை விவசாயிக்கும் ரொட்டி கடைகாரருக்கும் இடையே எழுந்த தகராறு


ஒருகிராமத்தில் வாழ்ந்துவந்த விவசாயி ஒருவர் தன்னுடைய பண்ணையில் இருந்து தினமும் அருகிலிருந்த நகரத்து ரொட்டி கடைகாரர் ஒருவருக்கு பசும்பாலினை விற்று வந்தார்

ஒருசமயம் அவர் அளந்து கொடுத்த பால் குறைந்து விட்டது என நகரத்தில் இருந்த நீதி மன்றத்தில் அந்த விவசாயிக்கு எதிராக வழக்கு ஒன்றினை தொடுத்தார்

அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் அந்த விவசாயியை அழைத்து ஏன்குறைவாக பசும் பாலினை ரொட்டிகடைக்காரருக்கு அளந்து கொடுத்தீர்கள் என நீதிபதி வினவியபோது

ஐயா நான் தனியாக பால் அளப்பதற்கு என பாத்திரம் எதுவும் வைத்துகொள்வதில்லை அதனால் நான் தினமும் இந்த ரொட்டிகடைக்காரர் ரொட்டிகளை எடுத்துவருவார் அந்த ரொட்டிகளை ஒருஎடைதட்டிலும் எங்களுடைய பண்ணையில் கறந்த பாலினை மற்றொரு எடைதட்டிலும் வைத்து எடையிட்டு வழங்குவதுதான் வழக்கம்

அதேபோன்று அன்றும் ரொட்டிகடைக்காரர் கொண்டுவந்த ரொட்டிகளை எடைத்தட்டில் வைத்து எங்களுடைய பண்ணையில் கறந்த பாலினை மற்றொரு எடைதட்டிலும் வைத்து எடையிட்டு வழங்கினேன் இதில் என்னுடை தவறு எதுவுமில்லை ஐயா தவறு ரொட்டிக் கடைக்காரருடையதாகும் ஐயா அவர் கொண்டுவந்த ரொட்டி எடையின் அளவிற்கே படும் பாலினை வழங்கினேன் எனக்கூறியதை தொடர்ந்து நீதிபதி அந்த வழக்கினை தள்ளுபடிசெய்தார்

நாம் என்ன செய்கின்றோமோ அதற்கேற்ற பலன்தான் நமக்கு கிடைக்கும் என்ற செய்தியை அறிந்துகொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...