செவ்வாய், 24 ஜனவரி, 2017

ஒரு கிராமத்து விவசாயியும் அவருடைய மனைவியும்


விவசாயி ஒருவர் எப்போதும் தன்னுடைய மனைவியை பார்த்து நீ சோம்பேறி காலகாலத்தில் அந்தந்த வேலையைய விரைவாக முடிப்போம் என்றில்லாமல் வீட்டிலேயே சாப்பிடவேண்டியது அதன்பின்னர் தூங்க வேண்டியது என்றுதான் பொழுதை போக்குகின்றாயே தவிர உருப்படியாக எதையும் செய்வதே இல்லை சோம்பேறி என திட்டிகொண்டே இருப்பார் இதனால் கோபமுற்ற அவருடைய மனைவி நீங்கள் தவறாக எண்ணிவிட்டீர்கள் நாளை ஒரு நாள் மட்டும் நீங்கள் வீட்டிலிருந்து எனக்கு பதிலாக என்னுடைய பணியையும் உங்களுடைய பணியை உங்களுக்கு பதிலாக நானும் மாற்றி பார்த்திடுவோம் அதன்பின்னர் யார் சோம்பேறி என முடிவுசெய்திடுக என சவாலுக்கு தன்னுடைய கணவனை அழைத்தார் அதனை தொடர்ந்து அந்த விவசாயியும் மிகமகிழ்ச்சியாக அந்த சவாலை ஏற்றுகொண்டு மறுநாள் அதன்படி அவர் வீட்டிலும் அவருடைய மனைவி வயல்வெளியிலும் மாறி பணிபுரிய சென்றனர் அந்த விவசாயி முதலில் பசுமாட்டிலிருந்து பாத்திரத்தில் பால்கறப்பதற்கு முயன்றபோது அந்தபசுவானது அவரை எட்டி உதைத்து தள்ளியது சரிதான் என வீட்டிற்கு தேவையான தண்ணீரை கிணற்றிலிருந்து இறைத்திடலாம் என முயன்ற போது ராட்டினத்தில் கயிறு மாட்டிகொண்டு தண்ணீர் இறைக்கவே முடியவில்லை சமைக்கலாம் என அடுப்பை பற்றவைத்திட முயன்றபோது அடுப்பானது புகையால் நிரம்பியதே தவிர எறியவேஇல்லை இவ்வாறு அவருடைய மனைவி செய்த பணியை அவரால் முழுமையாக செய்து முடிக்கமுடியாமல் அல்லாடிகொண்டிருந்தார் சாயுங்காலம் அவருடைய மனைவி வீடுதிரும்பியபின் தன்னுடைய கணவர் வீட்டுபணியை செய்து முடிக்கமுடியாமல் அல்லாடுவதை கண்ணுற்று அவரை விலகச்செய்து ஒவ்வொரு பணியாக செய்து முடித்தார் இதனால் அந்த விவசாயி மிகவும் வெட்கத்துடன் அவருடைய மனைவியை நோக்கி நான் உன்னுடைய அருமைதெரியாமல் உன்னை தவறாக தீட்டிவிட்டேன் என்னை மன்னித்துவிடு என சமதான தூதுவிட்டார் அதன்பின்னர் இரண்டுபேரும் அமைதியாக சமாதானமாக வாழ முடிவுசெய்தனர்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...