சனி, 26 ஜூன், 2021

பூனைக்கு யார்மணிகட்டுவது

 
ஒரு ஊரில் ஒரு மளிகை கடை இருந்தது. அந்த மளிகைக் கடையில் ஏராளமான எலிகள் வசித்து வந்தன. அவைகளுக்கு தேவையானஉணவுப்பொருட்கள் ஏராளமாக அந்த கடையில்இருந்தன. அதனால் அவை அந்த கடையில் உள்ள எல்லாவற்றையும் தின்றது மட்டுமல்லாமல் அவைகளை கடித்து குதறி வீணாக்கிவிட்டன, அந்த கடையில் பொருட்களை சேமித்து வைத்திருந்த எல்லா மூட்டைகளையும் கடித்து வீணாக்கின. அதாவது கடையின் ரொட்டி, பிஸ்கட் , பழங்கள் ஆகியவற்றைகடித்து வீணடித்தன. அந்த மளிகை கடைக்காரர் எளிகளின் தொல்லையால் கடையிலுள்ள பொருட்கள் யாவும் வீனாவதை கண்டு மிகவும் கவலைப்பட்டார். எனவே, " ஒரு பூனை வாங்கி மளிகைக்கடையில் வளரத்தால்தான் என்னுடைய மளிகை பொருட்களை சேமிக்க முடியும்" என்று நினைத்தார். அவர் ஒரு நல்ல, பெரிய பூனை ஒன்றினஐ வாங்கி கடையில் வைத்து வளர்த்தார், அந்த பூனையானது எலிகளை வேட்டையாடி அவற்றைக் கொன்றது. அந்த பூனை வந்த பிறகு எலிகளால் இப்போது சுதந்திரமாக அந்த கடையில் வாழமுடியவில்லை. எந்த நேரத்திலும் அந்த பூனை அதங்களை கடித்து சாப்பிட்டுவிடக்கூடும் என்று அவை பயந்தன. எலிகள் இந்த பிரச்சினையிலிருந்து தப்பிப்பதற்கு ஏதாவது செய்ய விரும்பின. அதனால் அவை அனைத்தும் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தின, அந்த கூட்டத்தில் அவைஅனைத்தும் "நாம் இந்த பூனையின் தாக்குதலிலிருந்து விடுபட வேண்டும். யாராவது ஒரு ஆலோசனையை வழங்க முடியுமா" என்று விவாதித்தன. எலிகள் அனைத்தும் அமைதியாக இருந்தன. ஒரு புத்திசாலித்தனமான சுட்டி எலிமட்டும், "பூனை மென்மையாக நடந்தவருகிறது. அதனால்அந்த பூனை வருவது நமக்குதெரியவில்லை என்பதுதான் பிரச்சினை. அதனால் அந்த பூணையின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டினால், அந்த பூனை நம்மை பிடித்து தின்ன நடந்து வரும்போது அதனுடைய கழுத்திலுள்ள மணி அசையும் ஒலி நமக்கு கேட்கும் அந்த மணியின் ஒலியை கொண்டு நாமும் பூனௌ வருகின்றது என நாம் எச்சரிக்கையாக தப்பித்துவிடலாம் . பூனையின் அசைவுகளை நாம் அறிந்து கொள்ள முடியும்" என்றது . "ஆமாம், அதுதான் சரி" என்று எல்லா எலிகளும் ஒன்றாக கூறின. ஒரு வயதான எலி மெதுவாக எழுந்து நின்று, "ஆனால் அந்த மணியை பூனையின் கழுத்தில் யார்க் கட்டுவார்கள்?" என்று சந்தேகம் எழுப்பியிது . கொஞ்சநேரத்திற்கு இந்த கேள்விக்கான பதிலளிக்க யாரும் எழவில்லை. நீதி: வெற்றுத் தீர்வுகள் பயனில்லை.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...