ஞாயிறு, 24 அக்டோபர், 2021

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாழ்க்கையின் யதார்த்தத்தை உணருமாறு செய்திடுக

 


நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு கிராமத்தில் ஒரு புகழ்பெற்ற வணிகர் வசித்து வந்தார், திருமணமான பல வருடங்களுக்குப் பிறகுதான் அவருக்கு ஒரு மகனிறந்தான். அதனால் அவருடைய மகன் வீட்டிலுள்ள அனைவராலும் செல்லமாக வளர்ந்துவந்தான். அதாவது அவருடைய மகனின் ஒவ்வொரு விருப்பமும் அவரது பெற்றோர்களாலும் மற்ற குடும்ப உறுப்பினர்களாலும் உடனுக்குடன் நிறைவேற்றப் பட்டது. அவருடைய மகன் ஒரு இளைஞனாக வளர்ந்துவிட்டபிறகும், அவருடைய மகனுடைய வாழ்க்கையில் எதற்கும் பற்றாக்குறை என்பதே இல்லை, எனவே வாழ்க்கையைப் பற்றிய அவருடைய மகனின் பார்வை மிகவும் வித்தியாசமானதாக இருந்துவந்தது, அதே நேரத்தில் அவரது தந்தை கடின உழைப்பால் தனது தொழிலை மேம்படுத்தி நிருவகித்துவந்தார். தன்னுடைய மகனின் செயல்பாடுகளிலிருந்து கடின உழைப்பின் முக்கியத்துவம் தன்னுடைய மகனுக்கு தெரியாது என்பது அந்த வணிகருக்கு தெளிவாகத் தெரியவந்தது. மேலும் ணிகர் தன் மகனைத் தன்னுடன் சேர்ந்து பழகி அவ்வியாபார பணியை கற்றுகொளளுமாறு பலமுறை கூறியபிறகும், அவருடைய மகன் ியாபாரத்தில் தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து செயல்படாமல் இருந்துவந்தான். ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, தன்னுடைய மகனுக்கு தனது கடின உழைப்பின் முக்கியத்துவத்தை கற்பித்திடவேண்டும் என்று முடிவு செய்தார். வ்வாறு செய்வது கடினமானதாக இருந்தாலும் செயற்படுததிடுவது என தீர்மாணித்து . ஒரு நாள் அவ்வணிகர் தனது மகனம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரம் ஒன்றாக இருக்கும்போது தன்னுடைய மகனிடம் மிகக்கோபமான குரலில், "நான் உன்னிடம் பலமுறை கோரியும் நீ என்னுடன் நம்முடைய வியாபாரத்திற்கு பங்களிப்பு செய்யவில்லை, அதனால் இனிமேல் நீ பணம் கொடுத்தால் மட்டுமே இந்த வீட்டில் நீ சாப்பிடுவதற்காக உனக்கு உணவு வழங்கப்படும்" என்றார். வணிகரின் இந்த முடிவை குடும்ப உறுப்பினர்கள்யாரும் விரும்பவில்லை. வணிகர் தனது ஒரே மகனிம் மிகவும் கண்டிப்பாக இருப்பதற்காக வருத்தப்பட்டர், . முதல் நாள் வணிகரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் வணிகருக்கு தெரியாமல் அவருடைய மகனிடம் அன்றைய உணவிற்கான பணம் கொடுத்தர் அவருடைய மகனும் அந்த பணத்தை தன்னுடைய தந்தையிடம் தனக்கு அன்றைய உணவு பெறுவதற்காக கொடுத்தார் அவருடைய வீட்டின் பின்புறம் ஒரு கிணறு இருந்தது. அதில் தன்னுடைய மகன் அன்றைய உணவிற்காக கொடுப்பதற்காக கொண்டுவந்த பணத்தை அந்த கிற்றில் வீசிஎறியும்படி கூறினார். உடன் அந்த வணிகரின் மகனும் தன்னுடையதந்தை கூறியவாறு அந்த பணத்தை தயக்கமின்றி கிற்றில் மகிழ்ச்சியுடன் வீசிஎறிந்துவிட்டு தனது தந்தையுடன் அன்றைய உணவை சாப்பிட்டான் .சில நாட்கள் சென்றன. அவ்வணிகர் தனது குடும்ப உறுப்பினர்கள் தன்னுடைய மகனுக்கு தனக்கு தெரியாமல் உதவிவருவதை புரிந்து கொண்டார். எனவே அவர் தனது குடும்ப உறுப்பினர் அனைவரிடம் தனக்கு தெரியாமல் உணவிற்கான பணத்தினை கண்டிப்பாக கொடுக்கக்கூடாது என தன்னிடம் உறுதியளிக்குமாறு கோரியதை தொடர்ந்து . குடும்ப உறுப்பினர்களும் ணிகரின் மகனுக்கு உதவ மாட்டோம் என்று உறுதியளித்தர் அதன்பின்னர் அவ்வணிகரின் மகன் அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் அன்றைய உணவிற்காக பணத்தினை கொடுத்து உதவிடுமாறு கோரியபோது யாரும் உதவிக்கு வரவில்லை அனைவரும் வியாபாரியின் மகனுக்கு பணம் கொடுக்க மறுத்தனர். அவ்ணிகக்கு கிராமத்தில் நல்ல பெயர் இருந்தது, அவருடைய மகனப் பற்றி அனைவருக்கும் தெரியும். எனவே, ணிகரின் மகன்தனது தந்தையின் நண்பர் ஒருவரிடம் சென்று பணம் கேட்டார். அந்த நண்பரும் உடன்பணம் கொடுத்தார். அந்தப் பணத்தை தனது தந்தையிடம் அன்றைய உணவிற்காக கொடுத்தார், எப்போதும்போல அந்த பணத்தை அவர்களுடைய வீட்டின் கிணற்றில் வீசிஎறியும்படி கூறினார். அவருடைய மகனும் தயங்காமல் அந்த பணத்தை கிணற்றில் வீசி எறிந்தான், ணிகர் தன்னுடைய மகனுக்கு தன்னுடைய நண்பர்கள் பணம் கொடுத்து உதவியதை அறிந்ததும், அவர் தனது நண்பர்கள் அனைவரிடமும் தனது மகனுக்கு இலவசமாக பணம் எதுவும்கொடுக்க வேண்டாம் என்று கேட்டுகொண்டார். அவர்கள் உதவ விரும்பினால், தன்னுடைய மகனை எதாவது வேலை செய்யுமாறு கூறி அந்த பணிமுடிந்தபின்னர் அதற்காக பணம் கொடுக்கலாம் என கோரினார். அடுத்த நாள் அந்த விணிரின் மகனுக்கு அவருடைய நண்பர்கள் யாரும் பணம் கொடுக்கவில்லை. அரை நாள் கழிந்தது. யாராவது அன்றைய உணவிற்கு பணம் கொடுக்கமாட்டார்களாவென ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஒவ்வொரு நபராக சந்திக்க சென்று கொண்டிருந்தான். கிராமத்தில் ஒரு முதியவர் இதைப் பார்த்து தன்னிடம் அழைத்து, ‘என்ன நடந்தது?’ என்று கேட்டார். வணிகரின் மகன், "இன்றைய சாப்பாட்டிற்கு எனக்கு பணம் வேண்டும்" என்றான். முதியவர் , "நான் பணம் கொடுக்க முடியும் ஆனால் அதற்காக நீ எனக்கு ஒரு வேலை செய்ய வேண்டும்." என்று கூறியைத தொடர்ந்து வேறு வழியில்லாமல் ணிகரின் மகன் ஒப்புக்கொண்டான். ன்றைய பொழுத சாயும் வரை ணிகரின் மகன் கடுமையாக உழைத்தான். பணி முடிந்ததும், முதியவர் அவ்வணிகரின் மகனிடம் பணம் கொடுத்தார். அன்று நாள் முழுவதும் வேலை செய்ததால் மாலை மிகவும் சோர்வாக தனது தந்தையிடம் சென்று அன்றைய உணவிற்கான பணம் கொடுத்து உணவு கேட்டார். எப்போதும்போல அவனுடைய தந்தை அந்த பணத்தை கிணற்றில் வீசிஎறியும்படி கட்டளையிட்டார், ஆனால் இந்த முறை அவருடைய மகன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை, "அப்பா, நான் இந்த பணத்தை கடினமாக உழைத்து சம்பாதித்தேன், அதை கிணற்றில் வீசிறியும்படி கட்டளை இடுகின்றீர்கள் இன்று அவ்வாறு என்னால் செய்யமுடியாது . ” மறுத்துக் கூறினான் உடன் ணிகர் தன்னுடைய மகன் இன்று கடின உழைப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டான் எனஅறிந்து கொண்டார் வணிகர் தனது மகனைத் தழுவி, "மகனே கடின உழைப்பின் முக்கியத்துவத்தை நீ அறிந்து கொள்ளவேண்டும் என்றே உணக்கு தினமும் பணம் கொடுத்தால் மட்டும் உணவு அளிக்கப்படும் எனக்கூறியிருந்தேன் .நீ இனிமேல் என்னுடைய வியாபாரத்தினை கவணித்து கொள்" எனக்கூறி தனது வியாபாரத்தை ஒப்படைத்தார்

ணிகரிடம் போதுமான பணம் இருந்தது, அவருடைய வருங்கால சந்ததியினர் எந்த கடின உழைப்பும் செய்யாமல் அந்தப் பணத்தில் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் இவ்வாறு அவ்வணிகர் தனது மகனுக்கு கடின உழைப்பின் முக்கியத்துவத்தை கற்பிக்கவில்லை என்றால், ஒருநாள் அவருடைய வியாபாரத்தின் பணம் முழுவதும் காலியாகி நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழல் உருவாகும் என சிந்தித்து இவ்வாறு செயல்படுத்தினார் அதேபோன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாழ்க்கையின் யதார்த்தத்தை அறிந்து கொள்ள வைப்பது பெற்றோர்களின் பொறுப்பாகும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...