சனி, 9 ஏப்ரல், 2022

இரு சகோதரர்களின் கதை

 ஒரு சிறிய கிராமத்தில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தையும் அவரோடு அவருடைய இரண்டுமகன்களும்  வாழ்ந்து வந்தனர். அந்த குடிகார தந்தைதினமும் அதிகமாக குடித்துவிட்டு தங்களுடைய இரு மகன்களையும் அடித்து உதைத்து கொடுமை படுத்திகொண்டேஇருப்பார். அந்த குடிகார தந்தையுடைய இருமகன்களும் இவ்வாறே வளர்ந்தது வந்தனர்  ஆனால் அவ்விருவரில் பெரியவன் தன்னுடைய தந்தையைப் போலவே ஒரு குடிகாரனாக மாறிவிட்டான், இளையவன் வெற்றிகரமான ஒரு தொழிலதிபரானாக உயர்ந்தான், அதே குடிகார  தந்தையுடன் வாழ்ந்த இருவரில் , ஒருவன் வாழ்க்கையில்  வெற்றி பெற்று இவ்வளவு பெரிய தொழிலதிபராகவும், மற்றொருவன் தந்தையை போலவே குடிகாரனாகவும் எவ்வாறு மாறி வளரமுடியும் என்ற சந்தேகம் அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரி்ன் மனதிலும் எழுந்தது.

அதனால், ஒரு நாள் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் சகோதரர்கள் இருவரிடமும் இதனை குறித்து பேச நினைத்தனர். முதலில் அவர்கள் மூத்த சகோதரனிடம் சென்றனர். ஆனால்  அவன் தன்னுடைய தந்தையை போன்று வழக்கம் போல் அதிகமாக குடித்துவிட்டு தரையில் படுத்திருப்பதை கண்டு அருவறுப்பு அடைந்தனர்.

அவர்களில் சிலர் அந்த பெரியசகோதரனை  எழுப்பி நாற்காலியில் உட்கார உதவினார்கள், அவன் சற்று நிதானமானபோது, “ஏன் இவ்வாறு குடித்து வாழ்க்கையை வீணாக்கி கொள்கிறாய்?” என வினவினார்கள்.

உடன் அநந்த மூத்த சகோதன், "எங்களுடைைய தந்தை ஒரு குடிகாரர். அவர் தினமும் மிக அதிகமாக குடித்துவிட்டு  எங்கள் இருவரையும் அத்துக்கொண்டேயிருப்பார்.இவ்வளவு காலம் தொடர்ந்து அவரோடு வாழ்ந்துவந்ததால் நானும் என் தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவரைப் போலவே ஆனேன்”, என பதிலளித்தார்.

பின்னர் அவர்கள் இளைய சகோதரனை சந்தித்து அவரிடம், "நீங்கள் ஒரு மரியாதைக்குரிய தொழிலதிபர்,என எல்லோரும் உங்களைப் போற்றுகிறார்கள், உங்களுக்கு எவ்வாறு மிகப்பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும் எனும் உத்வேகம் கிடை்ததது?" என சந்தேகம் எழுப்பினார் 

உடன் இளைய சகோதரன், "என் தந்தைதான்" என பதிலளித்தார். எல்லோரும்மிகவும் ஆச்சரியமாக, “அது எவ்வாறு?” என மீண்டும் சந்தோகம் எழுப்பினார்கள்.

அதற்கு அவர், “எனது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர், குடிபோதையில் எங்களை தினமும் அடி்ததுகொண்டேஇருப்பார்.  இவ்வாறான நிகழ்வை தினமும்  பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போதுதான் நான் அவரைப் போல இருக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். கண்ணியமாக இருக்க வேண்டும், மதிக்கப்பட வேண்டும்  வெற்றி பெற வேண்டும். என முடிவுசெய்தேன் அதனால்தான் நான்கடுமையாக உழைத்து  சிறந்த தொழில் அதிபராக முன்னேறினேன்." என பதிலளித்தார்


கற்றல்: நாம் என்னவாக இருக்கிறோம் என்பது நமது சிந்தனையைப் பொறுத்தது. நமது நேர்மறையான நல்ல சிந்தனையே நம்மை நல்ல மனிதனாக மாற்றுகிறது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...