ஞாயிறு, 8 மே, 2022

இன்று நாம் எதைக்கொடுக்கின்றோமாஅதுவே நாளை நமக்கு கிடைக்கும்


கோடை விடுமுறை என்பதால்,  ஒருவர் தன்னுடைய, மகனுடன்  ஊருக்கு அருகிலிருந்த மலைக்கு சுற்றுலாபோன்று சென்று அன்றைய பொழுதினை கழிககலாம் என முடிவுசெய்தார். அவ்வாறான மலையேறுகின்ற சுற்றுலா செல்வதற்கு தேவையான பொருட்களை சேகரித்த பின் இருவரும் மலையேறுவதற்கு புறப்பட்டனர்.
அவர்கள் இருவரும் மலை ஏறி சென்றுகொண்டிருநத போது, மகன் திடீரென்று கால் இடறி  கீழேவிழுந்தான்,அவ்வாறு கீழேவிழும்போது அவனுடைய வாயிலிருந்து  "ஆஹா" என்றவாரு ஒரு உரத்த குரல் வந்தது
உடன், மலைகளில் இருந்துஅதே "ஆஹா"  எனும் குரல்  மீண்டும் மீண்டும் கேட்டது -.
 தொடர்ந்து அவன் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, “யார் அங்கே?” என்ற கேள்வியை கேட்டான்.
என்ன ஆச்சரியம் , "யார் அங்கே?", என அதே குரல்திரும்பவும் ஒன்றுக்கு மேற்பட்டமுறைக் கேட்டது
அந்த சிறுவன் மிகஆர்வத்துடன், “யார் அது?” என்று கூவினான்.
உடன் அந்த குரலும், “யார் அது?” பதிலுக்கு பலமுறைவினவியது
யாரோஒருவர் தான் பேசுவதை திருதிரும்பு  பேசுகின்றனரே என இப்போது, சிறுவன் கோபமடைந்து, "கோழையே நீ யார் என பதிலளி" என்று கத்தினான்.
உடன் "கோழையே நீ யார் என பதிலளி.." என்று மீண்டும் அதேகுரல்  திரும்பவும் ஒன்றுக்குமேற்பட்டமுறை கூறுவதை கேட்டான்.
அதனால் மிகவும் கோபமடைந்த அந்த சிறுவன் , "கோழையே வெளியேவா.." என்று கத்தினான்.
அதனை தொடர்ந்து,“கோழையே வெளியேவா.."அந்த சிறுவனின் அதே கூப்பாடு  திரும்பவும் ஒன்றுக்குமேற்பட்டமுறைஒலிப்பதை கேட்டான்
அந்த நேரத்தில் தான் அவனுடைைய தந்தை அவனுடையஅருகில் வந்தார். மகன் தன் தந்தையிடம் இது பற்றி கேட்டான். அவனது தந்தை சிரித்து கொண்டே, "நீ ஒரு வெற்றியாளன்" என்று சத்தமாககூறினார்.
உடன்   "நீ ஒரு வெற்றியாளன்." என மீண்டும் ஒன்று்க்குமேற்பட்டமுறை கூறியதை கேட்டனர்
ஏன் இவ்வாறு  நடக்கின்றது என்று அந்த சிறுவனுக்கு இன்னும் புரியவில்லை. நம்முடைய சொந்தக் குரல் மலைகளின் முகடுகளை அடைந்து  எவ்வாறுத் திரும்புகிறது என்பதை  தந்தைதன்னுடையமகனுக்கு , 'இது ஒரு எதிரொலி' .என்றும் நீ எதைச் சொன்னாலும் இவ்வாறான மலைமுகடுகள் உள்ள பகுதியில்ஒன்றிற்கு மேற்பட்டமுறை அதே குரலில் திரும்பத் திரும்ப கூறுவதை கேட்கலாம்." என்றும்  விளக்கமளித்தார்
தொடர்ந்து தந்தை தன் மகனிடம், “அதபோன்று . நாம் எதைப் பெற்றாலும் அது நமது செயலின் பிரதிபலிப்பே நம்முடைய வாழ்க்கை ஆகும. நாம் என்ன பேசுகிறோம், என்ன நினைக்கிறோம், என்ன செய்கின்றோமோ அதையே நாம் திரும்பப் பெறுகிறோம். நமது எதிர்காலம் இந்தக் எதிரொலிக்கின்ற குரல் போன்றது, நாம் என்ன செய்கின்றோமோ அதுதான்  நாளை நமக்குத் திரும்பவும் கிடைக்கும்.என்ற வாழ்க்கையின் அடிப்படையை தெரிந்துகொண்டால் நாமனைவரும் ஒன்றாக நன்றாக உயர்வாக வாழமுடியும்
மற்றவர்களை மதிக்கின்றோம் எனில்,  அதையே திரும்பப் பெறுவோம்.அதாவது நம்மை மற்றவர்கள் மதிப்பார்கள் நாம் கோழை என்று மனதிற்குள் நினைத்தால் அவ்வாறே நாம் கோழையாகிவிடுவோம்.  வெற்றியாளர் என்று நினைத்தால்,  அவ்வாறே வெற்றியாளராகிவிடுவோம்." என்று ஒரு நீண்ட விளக்கமளித்தார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...