சனி, 28 மே, 2022

தந்தையின் கடிதம்


ஒரு நகரத்தில், ஒரு சிறுவன் தனது பெற்றோருடன் வாழ்ந்தான், அவனது தாத்தா பாட்டி வெகுதூரத்தில் வேறொரு நகரத்தில் வசித்து வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின் போது பெற்றோர்கள் தங்களுடைய மகனை அவனது தாத்தா பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். 15-20 நாட்கள் அங்கேயே தங்கிவிட்டு திரும்புவார்கள். அந்த சிறுவன் தொடர்ந்து அங்கு தங்குவதையே விரும்பினான்.இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்தது.

காலப்போக்கில், அந்த சிறுவன் வளர்ந்து பெரியவனாகி வந்தான். ஒரு நாள் சிறுவன் தன் பெற்றோரிடம், “இப்போது, நான் பெரியவனாகிவிட்டேன், அதனால் நான் தாத்தா பாட்டி வீட்டிற்கு தனியாக செல்ல முடியும். எனவே என்னைத் தனியாகப் போக விடுங்கள்.”என்கூறினானஅ

 பெற்றோர்கள் முதலில் சம்மதிக்கவில்லை ஆனால் சிறுவன் வற்புறுத்தியபோது அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் பெற்றோர்கள் அந்த சிறுவனது பாதுகாப்பு பற்றி. கவலைப்பட்டனர் அதனால், சிறுவன் தனியாகப் பயணம் செய்யத் தேவையானவாறு அனைத்தையும் அந்த சிறுவனுக்கு பயிற்சி அளித்தனர்.

சிறுவன் தன் தாத்தா பாட்டி வீட்டிற்கு தனியாக செல்ல வேண்டிய நாள் வந்தது.

சிறுவனை வழிகூட்டி அனுப்பவதற்காக பெற்றோர்கள் சிறுவனுடன் வந்தனர். சிறுவன் தொடர்வண்டியின் படுக்கைவசதியுடன்  கூடியஉட்காருமிடத்தில் வசதியாகஉட்கார்ந்த பின்னர், அவனது பெற்றோர் தொடர்வண்டியை விட்டு வெளியே வந்தனர், தொடர்வண்டி புறப்படும் வரை காத்திருந்து வழிகூட்டி அனுப்பினர்

அவ்வாறு தொடர்வண்டிக்கு அருகில் காத்திருந்தபோது, அந்தசிறுவனுடைய தந்தை ஜன்னல் அருகில் நின்று கொண்டு மகனுடன் பேசிக் கொண்டே இருந்தார். அவ்வாறு தந்தை பேசிக்கொண்டிருக்கும் போது  ஜன்னல் வழியாக ஒரு உறையை அவனிடம் கொடுத்து, “மகனே, வழியில் பயனத்தின்போது தனிமையாக இருப்பதால் பயம் உருவானால்,இதை திறந்து படித்திடுக. இது உன் பயத்தினை போக்கி உனக்கு அமைதிப்படுத்த உதவும்.” எனக்கூறினார் 

அவருடைய மகன் அந்த உறையைவாங்கி  கவனமாக தன்சட்டைபையில் வைத்துக் கொண்டு அவனது பெற்றோரிடமிருந்து விடைபெற்றான்.

மேலும் சிறுவன் சிரித்துக்கொண்டே தன் தந்தையிடம், “அப்பா எனக்கு எல்லாம் நினைவிருக்கிறது. கவலைப்படாதீர்கள்” எனக்கூறினான் தொடர்வண்டி புறப்படுவதற்கான சமிக்ஞை கிடைத்ததால் உடன் அந்த சிறுவன் பயனம் செய்த தொடர்வண்டி தன்னுடைய பயனத்தினை துவங்கியது

தொடர்வண்டி நிற்கும் ஒவ்வொரு  தொடர்வண்டி நிலையத்திலும் பொதுமக்கள் அந்த தொடர்வண்டியில் ஏறுவதும் இறங்கி செல்வதுமாகதங்களுடைய பயனத்தினை தொடர்ந்தார்கள். சிறுவன் இதையெல்லாம் வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்தான். எல்லோரும் யாரோ ஒருவரின் துனையுடன் பயனம் செய்வதைக் கண்ட அந்த சிறுவன், விரைவில் தனிமையாக இருப்பதாக உணர ஆரம்பித்தான்.

ஒரு தொடர்வண்டி நிலையத்தில், வாட்டசாட்டமான பெரிய மனிதர் ஒருவர் அந்த சிறுவனின் பெட்டிக்குள் நுழைந்து உட்கார்ந்தார். முதல்முறையாக தனியாக பயணம் செய்த சிறுவன் அந்த மனிதனை பார்த்து பயந்தான். இரவு தூங்க முயன்றான்,  அந்த மனிதனைப் பற்றி நினைத்ததால் அந்த சிறுவனுக்கு தூக்கம் வரவில்லை

அதிகம் பயந்து நடுங்கினான் அப்போதுதான் தன்னுடைய தந்தையின் கடிதம் நினைவுக்கு வந்தது. தன்னுடைய சட்டை பையிலிரு்நது அந்த உறையை திறந்து அதிலுள்ள கடிதத்தினை  படித்தான்

அந்த சிறுவனின் தந்தை  - “ அன்பு மகனே பயப்படாதே.  நானும் இந்த தொடர்வண்டியின், பக்கத்து பெட்டியில் உன்னுடன் பயனம் செய்து கொண்டுஇருக்கிறேன்..” என எழுதியிருந்த அந்தக் கடிதத்தைப் படித்தவுடன், சிறுவன் முகம் பிரகாசமாகி, பயம் மறைந்தது மகிழ்ச்சியுடன்பயம் எதுவுமில்லாமல் தூங்க ஆரம்பித்தான் 

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...