திங்கள், 7 நவம்பர், 2022

ஏன் மீண்டும் முயற்சிக்க வேண்டும்?

 

  தோல்வி பற்றிய ஆசிரியர்அறிவுரைராமு என்பவர் மிகுந்த ஆர்வத்துடன் புதியதாக ஒரு தொழிலைத் துவங்கினார், ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, அவரது வணிகம் வீழ்ச்சியடைந்தது. அதன் பின் சிறிது நாட்கள் கடந்தும் ராமு வேறு தொழில் எதுவும் துவங்கவில்லை.  

 அவரது நிலைமையை அறிந்த அவரது ஆசிரியர் அவரை தங்களுடைய வீட்டிற்கு அழைத்தார். ஆசிரியர் ராமுவை வரவேற்று, இருரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தபின் தற்போதைய நிலவரம் கூறித்து விவாதித்தனர். அப்போது ஆசிரியர், “நீ ஏன் வேறு தொழில் எதாவது செய்யக் கூடாது?” என்று கேட்டார். அதற்கு ராமு, “யா நான் ஏற்கனவே புதியதாக ஒரு தொழில் தொடங்கினேன். நான் அந்த தொழிலிறகாக மிகவும் கடினமாக உழைத்தேன், அந்த தொழிலிற்ாக எனது உடமைகளை அனைத்தையும் இழந்தேன். நான் நாள்முழுக்க ஓய்வெடுக்காமல் 24மணிநேரமும் வாரம் முழுவதும் வாரவிடுப்பெதுவும் எடுக்காமல் 7 நாட்களும் என்னுடைய புதிய தொழிலிற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டேன், ஆனால் அந்த வணிகம் தோல்வியடைந்து விட்டது", எனக்கூறினார்.  

  உடன் ஆசிரியர், "ஆனால் அதுதான் வாழ்க்கையின் உண்மையான களநிலவரமாகும், சில நேரங்களில் நாம் செய்திடும் தொழிலில் வெற்றி கிடைக்கும், வேறு சில நேரங்களில் தோல்விதான் கிடைக்கும் , தொழிலில் வெற்றியும் தோல்வியும் இயற்கையாக நடப்பதுதான் அதனால் நாம் துவங்கிடும் தொழிலை நிறுத்திவிடவேண்டும் என்று அர்த்தமல்ல" என்று ஆறுதல் கூற முயன்றார்.

   உடன் இராமு "வெற்றியை உறுதி செய்ய முடியாத போது, அந்த தொழிலை செய்து என்ன பயன்.", சற்று எரிச்சலுடன் பதில் கேள்வி கேட்டார்

   தொடர்ந்து ஆசிரியர் ராமுவை தன்னுடைய வீட்டுதோட்டத்தின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று, செத்துபோன தக்காளிச் செடியை காண்பித், “இதைப் பார்..” என்றார்

    ராமு குழம்பிப்போய், “தக்காளிசெடிகளெல்லாம் செத்து போய்விட்ட, வைகளினால் பயனேதுமில்லை. வற்றை ஏன் என்னிடம் காண்பிக்கின்றீ்ர்கள்?” என மிகவும் எரிச்சலுடன் கூறினார் 

   அதற்கு ஆசிரியர், “நான் வைகளுக்கான விதையை விதைத்தேன், போதுமான தண்ணீர் பாய்ச்சினேன், உரமிட்டேன், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தேன். நான் மிகவும் கவனமுடன் பார்த்து வந்தேன் ஆனாலும்வை இறந்துவிட்ட.” ஆசிரியர் சற்றுநேரம் நிறுத்தியபின், "நம்முடைய கடமை பணி செய்வது ஒன்றே.. நீ எவ்வளவு முயற்சி செய்து அயராது பாடுபட்டாலும், இறுதியில் என்ன நடக்கும் என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது, ன்னுடைய கையில் உள்ள நீசெய்திடும் பணியை மட்டுமே உன்னால் கட்டுப்படுத்த முடியும், மீதமுள்ளசெயல்கள் மற்றவர்களால் நடக்கும் என விட்டுவிடுக " எனக்கூறினார்

  .உடன் ராமு, “ஆனால் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்றால், எதையும் முயற்சி செய்து என்ன பயன்?” என சந்தேகம் எழுப்பினார். தொடர்ந்து ஆசிரியர் , “அவ்வாறு நினைத்துக்கொண்டு பலர் வாழ்க்கையில் பெரிதாக எதையும் செய்ய முயல்வதில்லை..”எனக்கூறினார்.

  உடன் இராமுஅப்படி நினைப்பதில் என்ன தவறு. இவ்வளவு கடின உழைப்பு, இவ்வளவு பணம், இவ்வளவு நேரம் செலவழித்த பிறகும், வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை எனில், இவ்வளவு செய்து என்ன பயன்..” என்று சொல்லிவிட்டு ராமு தங்களுடைய வீட்டிற்கு கிளம்பதயாராக இருந்தார்.

  உடன ஆசிரியர் இராமு புறப்படுவதை தடுத்து நிறுத்தி, “நீ கிளம்புமுன், உனக்கு இன்னொரு செயலை காண்பிக்க விழைகின்றேன்..” என்று கூறியவாறு . ராமுவை அருகிலிருந்த வேறொரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று காண்பித்தார்

  அங்கே பெரிய சிவப்பு தக்காளி பழங்கள் கொத்தாக காய்த்து கிடந்தன. உடன் இராமு, " வற்றை ஏன் என்னிடம் காண்பிக்கின்றீர்கள்?" என மீண்டும் எரிச்சலுடன் வினவியபோது ஆசிரியர், "நீ பார்க்கும் இந்த தோட்டத்தில் முந்தைய தோட்டத்தில் நன்கு பாடுபட்டும் இறந்துபோய்விட்டதே எனவேறு செடிகளை வளர்க்காமல் . நான் நிறுத்தவில்லை, அந்த தோட்டத்தில் இறந்த செடிகளைப் பார்த்தேன், பின்னர் வேறு புதியவிதைகளை வாங்கி நான் மீண்டும் இந்த தோட்டத்தில் புதிய விதைகளை விதைத்து அவற்றைப் பராமரித்தேன். அவை இந்த தோட்டத்தில் வளர்ந்த. ப்போது இந்த தோட்டத்தில் நன்கு காய்த்து தொங்குகின்றன

   தேபோன்று, நீ தோல்வி ஏற்பட்டது என துவண்டுவிடாமல் தொடர்ந்து வேறு சரியான செயல்களைச் செய்தால், ன்னுடைய வெற்றிக்கான வாய்ப்புகள் பெரிதும் அதிகரிக்கும். ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான ஒரு படி என முடிவுசெய்து தொடர்ந்து முயன்றால் தொழிலில் வெற்றி பெறமுடியும் .ஆனால் ஒன்று அல்லது இரண்டு தோல்விகளால் துவண்டு தொழில் எதையும் செய்வதில்லை என முடிவெடுத்தால், வாழ்க்கை பயனத்தில் க்கு எந்த வெற்றியும் கிடைக்காது."என மிகநீண்ட விளக்கமளித்தார் 

  ராம இப்போது வெற்றிக்கான இரகசியத்தை தன்னுடைய ஆசிரியரிடமிருந்து தெரிந்து கொணடார், அவர் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டார், மேலும் அவர் வேறொரு புதிய தொழிலை துவங்கிடும் உத்வேகத்துடன் வெளியேறினார்.

கற்றல். ராமுவைப் போன்றே, பலரும் தாங்கள் முயற்சி செய்யாமல் இருப்பதற்கு தங்கள் தோல்வியை ஒரு காரணமாகக் காண்பிக்கிறார்கள். நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மைதான். ஆனால், தொடர்ந்து வெற்றி பெற முயற்சிப்பவர்களுக்கு இன்று இல்லாவிட்டாலும் நாளை வெற்றி கிடைக்கும் என்பதுதான் உண்மையான களநிலவரமாகும்..அவ்வாசிரியர் அறிவுரை கூறுவது போன்று - ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான ஒரு படி என்பதை நினைவில் கொள்க.


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...