திங்கள், 21 நவம்பர், 2022

வங்கி மேலாளருடன் புத்திசாலி மூதாட்டியின் பந்தயம்!

 

ஒருமுறை ஒரு வயதான பெண்மணி நகரத்தின் மிகப்பெரிய வங்கிக்கு வந்து, தான் வங்கியில் கொஞ்சம் பணம் வைப்பீடு செய்ய விரும்புவதாகக் கூறினார். அவ்வங்கியின் ஊழியர்கள் எவ்வளவு தொகை என்று கேட்டபோது, வயதான பெண்மணி சுமார் 10 இலட்சம் ரூபாயைவைப்பீடு செய்ய விரும்புவதாக பதிலளித்தார், ஆனால் தனது பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் வங்கி மேலாளரைச் சந்திக்க விரும்புவதாக கூறினார். உடன் அந்த வங்கியின் மேலாளர் அந்த வயதான பெண்மணியின் அருகில் வந்து அவரை தன்னுடைய அறைக்கு அழைத்து சென்று உட்காரவைத்து அவது சந்தேகத்தினை தீர்வு செய்ய தான் தயாராகஇருப்பதாக கூறினார். பிறகு பேசிக் கொண்டிருக்கும் போது. "ரூபாய்10 இலட்சம் என்பது மிகப்பெரிய தொகை ஆயிற்றே . நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என வங்கி மேலாளர் வினவினார் உடன் வயதான பெண்மணி , "தனிப்பட்ட வகையில் சிறப்பான தொழில் எதுவும் இல்லை, நான்ஒரு பந்தயம் கட்டினேன் அந்த பந்தயத்தில் வெற்றிபெற்றுவிட்டேன் அதற்கானத் வெற்றித்தொகைதான் இந்த பத்து இலட்ச ரூபாயகும்." என விளக்கமளித்தவுடன் .வியந்து போன வங்கி மேலாளர், "பந்தயம் கட்டி இவ்வளவு தொகை சம்பாதித்தீர்களா!! மிகவும் ஆச்சரியம" என வியந்து கூறினார். அதற்கு அந்த மூதாட்டி, "அதெல்லாம் பெரிய செயல் ன்றுமில்ல.. இப்போதக் கூட, ந்த வங்கியின் மேலாளரான ங்களின் தலையில் விக் வைத்திருக்கின்ீர்கள என்று நான் ஐந்து இலட்ச ரூபாய்க்கு பந்தயம் கட்டுவேன்" என்றாள். மேலாளர் சிரித்துக்கொண்டே, "இல்லை.அம்மா. நான் இன்னும் இளமையாக இருக்கிறேன், விக் எதுவம் அணியவில்லை." என பதில் கூறினார் தொடர்ந்து மேலாளர் மூதாட்டியிடம், "நேற்று வழக்குரைஞருடன் எதற்கு பந்தயம் கட்டினீர்கள்?" என வினவினார் அதற்கு அந்த மூதாட்டி, "ஒன்றுமில்லை. அவர் பந்தயத்தில் தோற்றார். நேற்று, நான் நாளை காலை 10 மணிக்கு நம்முடைய நகரத்தின் மிகப்பெரிய வங்கியின் மேலாளரின் தலைமுடியைப் பிடித்து இழுத்துவிடுவேன். என அவருடன் 5 லட்சம் ரூபாய் பந்தயம் கட்டினேன், அவ்வாறு இழுத்துவிட்டால் எனக்கு அந்த பந்தய தொகை 5 லட்சம் ரூபாய அவர் தந்துவிடவேண்டும் இல்லையெனில் நான் அவருக்கு 5 லட்சம் ரூபாய் தந்துவிடவேண்டும் என பந்தயம் கட்டினேன் எனஅந்த மூதாட்டி கூறினார் தொடர்ந்து அந்தமூதாட்டி, "வ்வாறு ஏன் பந்தயம் கட்டக்கூடாது? இப்போது கூட உங்களிடம் நான் ஒரு பந்தயம் கட்டுகின்றேன் உங்களுடைய தலைமுடி விக்தான் அதை நான் என்னுடைய கையால்பிடித்தி இழுப்பேன் கையோடு வந்துவிட்டால் அது விக்ஆகும் நான் ரூபாய்ஐந்து இலட்சம் கொடுத்துவிடுகின்றேன் கையோடு வராவிட்டால் நீஙகள் எனக்கு ரூபாய் ஐந்து இலட்சம் கொடுத்துவிடவேண்டும் " எனக்கூறினாள் .அந்த வயதான பெண்மணிக்கு பைத்தியம் பிடித்திருப்பதாகவும், நான் விக் அணிவதில்லை என்று தெரிந்ததால், அவள் தனக்கு ஐந்த லட்ச ரூபாய் தரவேண்டியிருக்கும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டுதான் பந்தயம் கட்டத் தயாராக இருப்பதாகவும் மேலாளர் உறுதி கூறினார். நான் விக் அணிவதில்லை என்று அந்த மூதாட்டியிடம் கூறியும், இன்னும் அவள் நம்பமால் பந்தயம் கட்ட விரும்புகிறாள், பிறகு ஏன் அவ்வாறான சூழ்நிலை நான் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது.. அது எளிதான பணமாக எனக்கு வந்து சேர்ந்துவிடுமே. ரூபாய்ஐந்து லட்சம் பந்தயத்திற்கு வங்கி மேலாளர் ஒப்புக்கொண்டார். வயதான பெண்மணி, "ரூபாய் ஐந்து லட்சம் என்பது பெரியத்தொகை என்பதால், நாளைக் காலை சரியாக 10 மணிக்கு என் வழக்குரைஞருடன் வருவேன், பந்தய முடிவு அவர் முன் முடிவு செய்யப்படும்" என்றாள். வங்கி மேலாளர், "நிச்சயம்" என்று பதிலளித்தார். வயதான பெண்மணி அந்த வங்கியின் மேலாளரின் அறையைவிட்ட வெளியேறினார். வங்கி மேலாளரால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. ஐந்த இலட்ச ரூபாயையும் அந்த மூதாட்டியையும் நினைத்துக் கொண்டே இருந்தார். அடுத்த நாள் காலை மிகச்சரியாக 10 மணிக்கு மூதாட்டி தன் வழக்கறிஞருடன் மேலாளரின் அறையை அடைந்து மேலாளரிடம், "நீங்கள் தயாரா?" என வினவினார் உடன் மேலாளர் , "கண்டிப்பாக.." என பதிலளித்தார் வயதான பெண்மணி, "ன்னுடைய வழக்கறிஞரும் இங்கு இருப்பதால், தொகை பெரியது. எனவே நீங்கள் விக் அணியவில்லை என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். உங்கள் தலை முடிகளை நானே இழுத்து பார்க்கிறேன்." எனக்கூறினார். உடன் அந்த வங்கி மேலாளர் ஒரு கணம் யோசித்துவிட்டு, “கண்டிப்பா.. ரூபாய்ஐந்தஇலட்சத்துக்கு அப்புறம்வேறு என்ன செய்வது ” என்று பதிலளித்தார். அந்த மூதாட்டி வங்கியின் மேலாளரின் அருகில் வந்து அவருடைய தலைமுடியைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள் பெண்மணி... அதே சமயம் மூதாட்டியுடன் வந்த வக்கீல் அறையின் சுவரில் தலையை இடித்துகொள்ள ஆரம்பித்தார். இதைப் பார்த்த வங்கியின் மேலாளர் மூதாட்டியிடம், “வழக்கறிஞருக்கு என்ன நடந்தது?” என்று கேட்டார். வயதான பெண்மணி , "ஒன்றுமில்லை, அவர் தனது பந்தயத்தில் தோல்வியடைந்தார், நேற்று நான் அவருடன் பந்தயம் கட்டினேன், இன்று காலை 10 மணிக்கு இந்த நகரத்தின் மிகப்பெரிய வங்கியின் மேலாளரின் முடியைப் பிடித்து இழுப்பேன் அவ்வாறு இழுத்துவிட்டால் எனக்கு 5 லட்சம் ரூபாய் தரவேண்டும் என பந்தயம் கட்டினேன் அதன்படி நான் செய்துவிட்டேன் அதனால் அவர் எனக்கு ரூபாய் ஐந்து இலட்சம் தரவேண்டும் அதேபோன்று நீங்களும் தோற்றுவிட்டீரகள் எனக்கு ரூபாய் ஐந்து இலட்சம் தரவேண்டும் ஆக மொத்தம் ரூபாய் பத்துஇலட்சம் தொகையை என்னுடைய பெயரில் உங்கள் வங்கியில் வைப்பீடாக ஆக்கிவிடுங்கள்", என்றார் அந்த மூதாட்டி .


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...