ஞாயிறு, 6 நவம்பர், 2022

விழிப்(புடன்)பாய் இரு-- வங்கி பயன்பாட்டின் போதான.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 2.முறைகேடான(Vishing) அழைப்புகள்

செயல் முறை

வஞ்சகர்கள் தொலைபேசி அழைப்பு / சமூக ஊடகங்கள் மூலம் வங்கியாளர்கள் / நிறுவன நிர்வாகிகள் / காப்பீட்டு முகவர்கள் / அரசு அதிகாரிகள் போன்ற தோற்றத்தில் வாடிக்கையாளர்களை அழைக்கி றார்கள் அல்லது அணுகுகிறார்கள். நம்பிக்கையைப் பெற, ஏமாற்றுக் காரர்கள் வாடிக்கையாளரின் சரியானபெயர் அல்லது பிறந்த தேதி போன்ற சில வாடிக்கையாளர் விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சில சந்தர்ப்பங்களில், அனுமதியில்லாத நிதி நடவடிக்கைகளை தடுத்துநிறத்திடவேண்டி ,அவைகளுக்கு அபராதங்களை நிறுத்தி வைத்தல், கவர்ச்சிகரமான தள்ளுபடிகிடைத்தல் போன்றவற்றை அவசரமாக/ உடனடியாக செய்யவேண்டியுள்ளதால் கடவுச்சொற்கள் / OTP / PIN / அட்டை சரிபார்ப்பு மதிப்பு (Card Verification Value (CVV)) போன்ற ரகசிய விவரங்களைப் உடனடியாக பகிர்ந்திடுமாறு ஏமாற்றுபவர்கள் வாடிக்கையாளர்களை நெருக்குதல்ந்து / ஏமாற்றி.. வைகளை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற பின்னர்மோசடியாகப் பயன்படுத்தி கொள்கின்றனர்.


தற்காப்பு நடவடிக்கைகள்

வங்கி அதிகாரிகள் / நிதி நிறுவனங்கள் / இந்திய சேமநல வங்கி / எந்தவொரு உண்மையான நிறுவனமும் பயனர் பெயர் / கடவுச்சொல் / அட்டை விவரங்கள் / CVV / OTP போன்ற ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு வாடிக்கையாளர்களிடம் எப்போதும் கோருவதில்லை.

இந்த ரகசிய விவரங்களை யாருடனும், உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.




கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...