புதன், 20 பிப்ரவரி, 2013

நம்மை பற்றிய நல்ல நம்பிக்கையை மற்றவர்களிடம் எவ்வாறு வளர்த்து கொள்வது?


1.நம்மை சார்ந்திருப்பவர்களின் நீண்டகால, குறுகியகால எதிர் பார்ப்புகளை பூர்த்தி செய்து அவர்களின் தேவையை நிறைவு செய்திடும் பொறுப்பு எப்போதும் நம்மிடம் இருக்குமாறு பார்த்து கொள்க

2. இயற்கையானது நமக்கு இரண்டு கண்கள் உலக நிகழ்வுகளை காணவும் இரண்டு காதுகள் செய்துகளை கேட்கவும் ஒரே ஒரு வாய் சிறிதளவு மட்டும் அதாவது கொஞ்சமாக பேசவும் அனுமதித்துள்ளது அதனை மதித்து அதிகஅளவிற்கு செய்திகளை காதுகளால் கேட்டும் அதிக காட்சிகளை கண்களால் கண்டும் அதன் மூலம் சுற்றுபுறத்தை நம்மிடம் கவணித்தல் செயல் அதிகமாக இருக்குமாறு பார்த்து கொள்க ஆனால் பேசுவதை மட்டும் கொஞ்சமாக வைத்து கொள்க

3.எப்போது உண்மையாக இருக்க பழகு உண்மையாக செயல்படு பொதுவாக மற்றவர்களிடம் நம்மை பற்றிய நல்ல அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு மிக நீண்ட நாட்களாகும் ஆனால் நம்மை பற்றிய தவறான எண்ணம் ஒருசிலநொடிகளில் கண்ணாடி பாத்திரம் உடைவதை போன்று உருவாகிவிடும் என்ற செய்தியை மனதில் கொள்க

4.வாக்குறுதியளித்து ஏற்றுகொண்ட செயலை அவ்வாறே முடிப்பதற்காக கூடுதலாக என்ன செலவானாலும் அதனை நிறைவேற்றி முடித்திட முயற்சி செய்க

5.சொல்வதை போன்று செயல்படுக அதாவது நம்முடைய சொல்லும் செயலும் ஒன்று போல் இருந்திடுமாறு பார்த்து கொள்க

6. தவறு ஏதேனு நம்மால் நிகழ்ந்துவிட்டால் அதனை மறைத்திடாமல் உடன் அத்தவற்றிற்கான வருத்தத்தை உரியவருக்கு தெரியபடுத்துக.

7. அவ்வாறே நமக்கு தேவையானபோது உதவிசெய்தவரகளுக்கு உடனுக்குடன் நன்றி தெரிவித்திடுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...