வியாழன், 28 பிப்ரவரி, 2013

நல்ல மன அமைதி பெறுவதற்காக செய்யக்கூடாத செயல்கள்


பொதுவாக நம் அனைவருக்கும் நல்ல மன அமைதி வேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புகின்றோம். ஆனால் நாம் கடுமையாக முயற்சி செய்யாமல் நம்மால் அதனை அடையமுடியாது அதனால் இந்த மன அமைதியை நாம் பெறவேண்டும் என நம்முடைய பையில் உள்ள பணத்தை செலவழித்து அல்லது வேறுவகையில் உந்துதல் கொடுத்து கொள்முதல் செய்ய முடியாது

இயல்புநிலையில் மனஅமைதியான நிலையை அடைவதற்காக நம்முடைய மனதை சமநிலைப்படுத்தி இதனை சீரான மற்றும் சமநிலையில் இருக்குமாறு செய்ய வேண்டும். இவ்வாறான நம்முடைய மனதை சமநிலை படுத்துவதற்காக நாம் தினமும் பின்பற்றி செய்ய வேண்டிய செயல்கள் எவையெவை செய்யக்கூடாதவை எவையெவை என உள்ளன பின்வரும் மூன்றும் நாம் செய்யக்கூடாதவை ஆகும்

1.விமர்சித்தல் இது நம்மிடம் இருக்கும் மிகவும் இயற்கையான திறமைகளில் ஒன்றாகும். பொதுவாக நம்முடைய மனமானது தவறு அல்லது பிழை எங்கே ஏற்படுகின்றது என கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வமாக உள்ளது பல்வேறு சமயங்களில் எந்தவொரு செயலிலும் சிக்கல் எதுவும் இல்லாதபோதும் சிக்கல் இருப்பதாக அடையாளம் காணும் விசித்திரமான சாமர்த்தியம் நமக்கு உண்டு அதேநேரத்தில் நம்முடைய நாவானது மற்றவர்களிடம் அந்த பிரச்சினைகளை பற்றிய செய்தியை புகுத்திட முடியும் என்ற நமது மேன்மையை தெரியப்படுத்த ஆர்வமாக உள்ளது நாம் மற்றவர்களை பற்றிய இவ்வாறாக விமர்சித்தல் செய்யும்போது நம்மையறியாமலேயே நமக்கெதிரான கருத்தை உருவாக்கிடவும் நம்முடைய எதிரியையும் எளிதாக உருவாக்குகின்றோம் இதனால் தேவையற்ற விதண்டாவாதமும் அடுத்தவர்களின் தவறை நிருபிப்பதற்காக முயற்சியையும் செய்கின்றோம் இதன்மூலம் நம்முடைய மனமானது சமநிலை அடைவதற்கான வழியை தடுத்து நிறுத்தும் மேகம்போன்ற போர்வையை போர்த்திவிடுகின்றது

2.புகார்அளித்தல் இது அதற்கடுத்த மிக அதிக பாதிப்பு ஏற்படுத்திடும் நாம் செய்யக்கூடாத செயலாகும் பெரும்பாலும் மேல்மட்ட நிலையிலி ருப்பவர்களிடம் விமர்சித்தலும் மற்றவர்களை கண்டனம் தெரிவித்தலும் இந்த புகார் அளித்தல் எனும் செயலாகும் பொதுவாக இயல்புநிலையில் ஆக்கப்பூர்வ மானதும் தீர்வு செய்யக்கூடியதும் திருத்திடும் உள்நோக்கத்துடனும் இது வருகின்றது ஆனால் இதனை தொடர்ந்து நாம் செய்து வந்தால் அல்லது நாம் அதனை விடுவிக்கவில்லை என்றால் நாம் போலியாக ஒரு வெற்றிக்கோட்டை அடைந்ததாக நமக்கு மனதிருப்தியை அடையச்செய்து ஒரு பெரிய எதிர்மறை நீர்ச்சுழியை நமக்கு உருவாக்குகிறது. நம்மனமானது ஆனந்தத்தை அனுபவிக்கும் நிலையில் நம்மை தடுக்கிறது நம் மனதில் சினமூட்டுதல் செய்கின்றது நாம் கஷ்டப்படும் நிலைக்கு நம்முடைய உணர்வுகளை எடுத்து செல்கின்றது .

3.ஒப்பிடுதல் பொதுவாக இந்த பிழையான செயலிலிருந்து நம்மால் தப்பிக்க முடியாத நிலை உள்ளது காற்றில் பரவும்நச்சுநிரல் போன்று இது உள்ளது எப்போதும் நாம் நம்முடைய செயலுடன் நம்மை சுற்றியுள்ள மற்றவர்களின் பணவசதி, நண்பர்கள் ,பணி, அவர்களின் செயலை ஒப்பிட்டு கொண்டே உள்ளது மற்றவர்களின் தாழ்நிலையும் நம்முடைய நல்ல நிலையும் ஒப்பிடும் அந்தவொரு சிறுதுளி நேரத்திற்கு மட்டும் நம்முடைய மனதிற்கு மகிழ்ச்சியை இந்த செயல் அளிக்கின்றது ஆனால் நம்மைவிட நல்ல நிலையில் இருப்பவர்களை பார்த்து இதே போன்று ஒப்பிடும்போது நமக்கு தூக்கமே இல்லாத நிலையை வரவழைக்கின்றது இவ்வாறான ஒப்பீடு மட்டுமே நம்முடைய வாழ்வின் முடிவன்று .நம்மை மீட்க முடியாத துன்பத்தி ற்கு கொண்டு செல்லும் இது நம்முடைய மனதிற்கு மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கவல்லதொரு வழிதவிர வேறொன்றுமில்லை

இந்த மூன்று செயல்களை கடும்முயற்சி செய்து தவிர்த்து நம்மை அழிவு பாதையிலிருந்து காத்து கொள்க இதனை தவிர்ப்பது நல்ல யோசனை என நமக்கு அவ்வப்போது நீனைவூட்டுதல் அளித்திடும் சிறந்த நன்பர்களை கைக்கொள்க அதன்பின் காலப்போக்கில் நாம் முழுமையாக அவற்றை தவிர்த்திடும்போது நம்முடைய மனதில் அமைதியானது நாம் மிகவும் விரும்பப்பட்ட நிலையில் அமைதியை நோக்கி நம்முடைய மனமானது செல்லும் என்பது திண்ணம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...