புதன், 13 பிப்ரவரி, 2013

எந்தவொரு செயலையும் குழுவாக செய்யும் குழுமனப்பான்மை நமக்கு வரவேண்டும்


ஒரு ஓட்டபந்தய மைதானத்தில் எட்டு சிறுவர்கள் ஓடுவதற்கு தயாராக இருந்தனர்

நடுவரும் * Ready! * Steady! * Bang!!!என க்கூறி பொம்மை துப்பாக்கியால் சுட்டவுடன் அந்த எட்டு சிறார்களும் தங்களுக்கு ஒதுக்கபட்ட ஓடுதளதடத்தில் சிட்டாக பறந்தனர்

சிறிதுதூரம் ஓடியவுடன் அவர்களுள் ஒருசிறுமி ஓடுபாதையில் இருந்த ஏதோவொரு பொருளால் கால்தடுக்கி கீழேவிழந்து அய்யோ அம்மா என வலியால் துடித்து அழ ஆரம்பித்தாள்

மிகுதி எழுவரும் இந்த அழுகுரலை கேட்டவுடன் ஓட்டபந்தய போட்டியில் ஓடுவதை அப்படியே நிறுத்தி மிகவிரைவாக அனைவரும் திரும்பி ஒடிவந்து கூட்டாக கீழேவிழுந்த சிறுமியை அலுங்காமல் குலங்காமல் சேர்ந்து தூக்கி கொண்டு பழையபடி தொடர்ந்து ஓடி தாம் தூக்கிவந்த சிறுமியை வெற்றிக்கோட்டில் கைநீட்டி வைத்துவிட்டு அனைவரும் பின்தங்கி நின்றனர்

உடன் நடுவரும் இந்த செயலை கண்ணுற்று தயங்கி மயங்கி பின்னர் தெளிவுபெற்று அந்த கீழேவிழுந்த சிறுமியே முதலில் வந்ததாக அறிவித்தார்

பார்வையாளர்கள் இதனை கண்ணுற்றதும் அதிக ஆச்சியரியம் அடைந்தனர்

இவர்கள் நமக்கு உணர்த்திய கருத்து யாது என ஆய்ந்தால் எந்தவொரு செயலையும் குழுவாக செய்யும் குழுமனப்பான்மை நமக்கு வரவேண்டும் மனிதாபிமானம் அனைவருக்கும் இருக்கவேண்டும் எந்தவொருவாய்ப்பும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதேயாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...