ஞாயிறு, 24 மே, 2015

நம்முடன் சண்டையிடுமாறு வருபவரிடம் அதனை தவிர்த்து சற்று ஒரு புன்னகையுடன் அவருடன் தோழமையாக இருப்பதுநல்லது


மிகஅவசரமாக அருகிலிருந்த பெருநகரத்திற்கு செல்லவேண்டியிருந்ததால் வாடகை மகிழ்வுந்து ஒன்றை அமர்த்திஅதில் பயனம் செய்தேன். பயனம் செய்த வாடகை வண்டியானது சாலையின் இடதுபுறம் சென்றுகொண்டிருந்த்து அப்போது வேகமாக வந்தசரக்கு வண்டி யொன்று எங்களுடைய வாடகைவண்டிமீது மோதுவதை போன்று அசுரவேகத்தில் வந்துகொணடிருந்தது

உடன் வாடகை வண்டியின் ஓட்டுநர் வண்டியை மிகசாமர்த்தியமாக ஒடித்து திருப்பி யாருக்கும் பாதிப்பெதுவும் இல்லாமல் நூலிழையில் தப்பி சென்றிடுமாறு செய்தார் அப்போதுபோது எதிரில் வந்த மற்றொரு வண்டி ஓட்டுநர் “என்ன ஐயா! சாலையில் கண்மன் தெரியாமல் ஓட்டுகின்றீர்! இப்படி வளைத்து வளைத்து ஓட்டினால் ஒழுங்காக வீடுபோய்சேரமாட்டீர்!” என திட்டியபோது வாடகைவண்டி ஓட்டுனர் “அதெல்லாம் ஒன்றுமில்லை அண்ணே சற்றே கைதவறிவிட்டது பொறுத்துகொள்ளுங்கள்” என புன்னகையுடன் கூறி அமைதியாக வண்டியை ஓட்டிவந்தார்

சிறிதுநேரம் கழித்து “எதிரில் வந்த ஓட்டுனர் திட்டியபோதும், ஏன்அமைதியாக புன்னகைத்து வந்தீர் ?” என வினவியபோது “அதெல்லாம் ஒன்றுமில்லை ஐயா! உங்களை விரைவில் கொண்டு போய்ச்சேர்க்கவேண்டும். இந்நிலையில் அவருடன் மல்லுகட்டிகொண்டிருந்தால், கால விரையுமும் வீண்சண்டையும் தான் உருவாகும். அதனை தவிர்த்து சற்று ஒரு புன்னகையுடன் அவருடன் தோழமையாக வந்ததால் பிரச்சினை இல்லாமல் நம்முடைய பணியும் நடைபெறுகின்றதல்லவா? அதுதான் ஐயா!” என பதிலிறுத்தார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...