ஞாயிறு, 31 மே, 2015

நாம் நம்முடைய மனதில் என்ன எண்ணுகின்றோமோ அவ்வாறு அவ்வாறே நம்மைசுற்றியும் உள்ள காட்சிகளும் தோன்றியமையும்


மகிழ்ச்சியான மனிதன் ஒருவன் அவ்வூரில் இருந்த கண்ணாடியாலான பெரிய மாளிகை ஒன்றை அடைந்தான் அங்கு அவன் என்ன செய்தானோ அதேபோன்று கண்ணாடியில் தெரிந்த ஆயிரகணக்கான உருவமும் செய்தது ஆஹா என்னவொரு அருமையான இடம் இதனை இவ்வளவு நாட்களாக பார்க்கமால் விட்டுவிட்டோமே இனிமேல் தினமும் இந்த மளிகையை வந்தபார்த்தபிறகுதான் நம்முடைய மற்ற பணிகளை செய்திடவேண்டும் என உறுதிமொழிஎடுத்து கொண்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்பினான்

அதே கண்ணாடியாலான பெரிய மாளிகைக்கு அவ்வூரில் வசித்து வந்தவாழ்வில் அடிபட்டு துயருற்ற மனிதன் வந்துசேர்ந்தான் அங்கு அவனைபோன்று ஆயிரகணக்கான உருவங்கள் துயரத்துடன் இருப்பதை கண்ணுற்றதும் அவனுடைய மனம் மேலும் வருத்தமுற்றது உடன் அந்த மாளிகையை விட்டு வெளியில் வந்தான் அப்போது அந்த மாளிகைக்கு எப்போதும் செல்வதே இல்லை என முடிவுசெய்தான்

ஆம் நாம் நம்முடைய மனதில் என்ன எண்ணுகின்றோமோ அவ்வாறு அவ்வாறே நம்மைசுற்றியும் உள்ள காட்சிகளும் தோன்றியமையும் அதனால் எப்போதும் நாம் நல்லதையே நினைத்து நல்ல மனநிலையை பராமரிப்போம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...