ஞாயிறு, 17 மே, 2015

நோய்நொடிஇல்லாமல் நல்ல ஆரோக்கியமாக வாழுவதற்காக கடவுள் எவ்வளவு தொகைக்கான பட்டியலை கோருவார்?


ஒரு மனிதனுக்கு 70 வயது ஆகிவிட்டது இவ்வாறு வயதாகிவிட்டதால் இதுவரையில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்த அம்மனிதனுக்கு தற்போது சீறுநீரகத்தில் மிக அதிக வலி ஏற்பட்டது

அதனால் உடன் அருகிலிருந்த ஆங்கில மருத்துவரை அம்மனிதின் அனுகியபோது அவருடைய சிறுநீரகம் முழுவதும் பழுதடைந்துவிட்டதால் அவ்வாறான வலி ஏற்பட்டுள்ளது என்றும் அவ்வாறான பழுதினை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம் என்றும் அவருக்கு ஆறுதல்கூறி அறுவை சிகிச்சைக்கான நாள்குறித்து அவருடைய சம்மதத்தை கோரினார்

அவர் சம்மதித்ததும் மருத்துவர் குறிப்பிட்ட நாளில் அவருக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்து அவரை பழையநிலைக்கு கொண்டுவந்தார் அதனோடுகூட அந்தமனிதனிடம் தன்னுடைய மருத்துவமனையில் செய்த அறுவைசிகிச்சைக்கும் மாத்திரைமருந்துகளுக்காகவும் பட்டியல் ஒன்றை அவரிடம் கொடுத்து உடனடியாக அந்த தொகையை செலுத்துமாறு மருத்துவர் கோரினார்

உடன் அந்த மனிதன் ஓவென்று அழத்தொடங்கினான் அதனை தொடர்ந்து மருத்துவர் அவரிடம் “என்ன ஐயா! தொகை அதிகமாக இருக்கின்றது என பயப்படுகின்றீர்களா!” என வினவியபோது,

அந்த மனிதன் “இந்த தொகைஅதிகமாகிவிட்டது என அழவில்லை, சிறிய அறுவை சிகிச்சைக்கே இவ்வளவு தொகையை பட்டியலாக மருத்துவர் கோருகின்றாரே, என்னுடைய உடலை நோய்நொடிஇல்லாமல் நல்ல ஆரோக்கியமாக இந்த எழுபது ஆண்டுகளாக வைத்து பராமரித்து என்னை காத்திடும் அந்த கடவுள் எவ்வளவு தொகைக்கான பட்டியலை என்னிடம் அளித்து எவ்வளவு தொகையை கோருவார் என எண்ணியபோது அதிகபயமாகிவிட்டது” என கூறினான்..

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...