சனி, 13 ஜூன், 2015

நாம் அனைவரும் மனிதாபிமானஅடிப்படையில் மற்றவர்களுக்கு உதவிசெய்திடகூட முடியாத அவசரஉலகில் நாம் வாழ்ந்துவருகின்றோம்


இளம்வயதுபுதிய தொழில் அதிபர் ஒருவர் மிகமுக்கியமான பணியை உடனடியாக முடிப்பதற்காக தன்னுடைய மகிழ்வுந்தில் மிகவேகமாக சென்றுகொண்டிருந்தார் அந்த மகிழ்வுந்தை அவருடைய நிறுவனத்தின் ஓட்டுனர் ஓட்டிகொண்டிருந்தார் இந்நிலையில் திடீரென மகிழ்வுந்தின் பக்கவாட்டில் டப் எனும் மோதிடும் சப்தம் ஏற்பட்டது உடன் மகிழ்வுந்து ஓட்டுனர் வண்டியை நிறுத்தி பார்த்தபோது சிறுகல்ஒன்று வண்டியில் சிறியஅளவிற்கு கீரல் ஒன்று விழுமாறு வந்து மோதியுள்ளது தெரியவந்தது.

அருகில் சிறுவன்ஒருவன் இருந்ததை பார்த்ததும் மகிழ்வுந்து ஓட்டுனருக்கு அளவிற்கு அதிகமான கோபம் வந்து “அடேய் எப்படியடா எங்களுடைய புதிய மகிழ்வுந்தை கல்லால் அடித்திடமுடியும் இந்த மகிழ்வுந்தின் விலையென்ன தெரியுமா அடிபட்டதை சரிசெய்வதற்கான பணத்தை உன்னால் கொடுக்கமுடியுமா?” என திட்டஆரம்பித்தார்

அப்போது அந்த சிறுவன் “ஐயா அவ்வாறு சிறுகல்லால் உங்களுடைய மகிழ்வுந்தினை அடித்ததை மன்னித்திடுங்கள் ஐயா நடமாடமுடியாத என்னுடைய சகோதரன் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியில் இருந்து வீழ்ந்துவிட்டான் அவனை என்னால் தூக்கி நிமிர்த்தி பழையபடி அந்த சக்கர நாற்காலியில் உட்காரவைக்கமுடியவில்லை துனைக்கு ஆட்கள் யாரும் இல்லை இந்த வழியே போகின்றவர்கள் அனைவரும் தலைதெறிக்கும் வேகத்தில் செல்கின்றனரேயொழிய எங்களின் நிலையை பார்த்து எங்களுக்கு உதவமுன்வரவில்லை அதனால்தான் யாருடைய கவணத்தையாவது கவரவேண்டுமென்பதற்காக அவ்வாறு சிறு கல்லை தூக்கிஎறிந்தேன்” என கெஞ்சி அழுதபோது

நான்மனமிறங்கி “ஒட்டுனரே அந்த சிறுவன் கோரும் உதவியை உடன் செய்திடுங்கள்” என கூறியதும் மகிழ்வுந்து ஓட்டுனரும் உடன் அந்த சிறுவன் கூறிய உதவியை செய்தபின எங்களுடைய பயனத்தை தொடர்ந்தோம்

ஆம் தற்போது நாம் அனைவரும் மனிதாபிமானஅடிப்படையில் மற்றவர்களுக்கு உதவிசெய்திடகூட முடியாத அவசரஉலகில் நாம் வாழ்ந்துவருகின்றோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...