ஞாயிறு, 21 ஜூன், 2015

பொருட்களை கட்டிடும் கட்டுகளின் மீது உள்ள பார்கோடு எவ்வாறு உருவாக்கபட்டது?


தற்போது பெரும்பாலான கடைகளில் பொருட்களை வாங்க சென்றால் இறுதியில் அந்த பொருட்களை கட்டபட்ட கட்டின்மீது கோடுகள் நிரைந்த பகுதியை வருடி இயந்திரத்தால் வருடபட்டு உடன் அந்த பொருளின் பெயர் விலைஆகியவை பட்டியலாக இடுமாறு செய்யபடுகின்றன பொருட்களை கட்டபட்ட கட்டின்மீது உள்ள கோடுகளை பார்கோடு என அழைக்கின்றனர் இந்த பார்கோடு எவ்வாறு உருவானது என உங்களுக்கு தெரியுமா?

பெரிய நிறுவனம் ஒன்று தங்களின் கடைகளில் விற்கப்படும் ஆயிரக்கணக்கான பொருட்களை வாங்கி செல்ல வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் பட்டியல் எழுதி பணத்தை பெற்றுகொண்டு அவர்கள் எடுத்துசெல்லும் பொருட்கள் சரியாக உள்ளதாவென சரிபார்ப்பது மிகசிரமமான பணியாக இருந்ததை தீர்வுசெய்வதற்கான கருவியொன்று கண்டுபிடித்திடுமாறு பொறியியலார்களை கேட்டுகொண்டனர்

பொறியியலார்களும் குழுவாக ஆற்றின் மனலில் உட்கார்ந்து இதுகுறித்து விவாதித்து கொண்டிருந்தபோது ஒருவர் தன்னுடைய கையை மணலில் ஊண்றி எழ ஆரம்பித்தார் அப்போது அவருடைய கைவிரல்கள் ஐந்தும் வெவ்வேறு அளவான கோடுகளாக உருவானதை தொடர்ந்து அவர் மற்ற நண்பர்களிடம் பார்த்தீர்களா நண்பர்களே நம்முடைய கையில் உள்ள ஐந்துவிரல்களும் ஒவ்வொரு அளவான கோடுகளை உருவாக்குகின்றன ஒவ்வொரு கோடும் ஒவ்வொன்றை குறிப்பிடுமாறு செய்து நாம் விற்பணைசெய்திடும் பொருட்களைில் ஒரு கோடு பொருளின் பெயரையும் மற்றொரு கோடு பொருளிற்கான விலையையும் பிரிதொருகோடு பொருளின் வேறு விவரங்களையும் அறிந்துகொள்ளுமாறு செய்திடலாம் என கூறியதை தொடர்ந்து அனைவரும் விவாதித்து அவ்வாறே செய்வது எனவும் அந்த கோடுகளை உருவாக்குவதற்கான இயந்திரத்தையும் அந்தகோடுகளை படித்தறிவதற்கான இயந்திரத்தையும் கண்டுபிடித்தனர் இவ்வாறே பொருட்களை கட்டபட்ட கட்டின்மீது பார்கோடு உருவாக்கபட்டது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...