ஞாயிறு, 13 நவம்பர், 2022

ஒரு பணக்காரர் வழங்கும் இலவச உணவு சேவை

 

வடஇந்தியாவில் பணக்காரர் ஒருவர் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கினார்.அவரிடத்தில் ஏழைகளுக்கு தொண்டு செய்யும் உணர்வு மிகவும் குறைவாக இருந்தது, ஆனாலும் தன்னை தாராள மனப்பான்மை கொண்டவர் எனவும் இரக்க குணம் கொண்டவர என்றும் சமூகம் பாராட்ட வேண்டும் என்பதற்காக அவர் ஏழைகளுக்கு உதவுவதற்கு முன்வந்தார். அவர்ணவு பொருட்களின் மொத்த வியாபாரம் செய்து வந்தார். தனால் தன்னுடைய வியாபார நடவடிக்கையின் போது மாதக் கடைசியில், விற்காமல் வீணாக போன தரமற்ற உணவுப்பொருட்களை, தரமம் செய்வது என்ற பெயரில், கோதுமையை கோதுமை மாவாக தயாரித்து சப்பாத்தி செய்ய, இலவச உணவு வழங்கிடும் இடத்திற்கு அனுப்பி விடுவார். அந்த பணக்காரர் வழங்கும் உணவு சேவையில் பெரும்பாலும் வீணாக போன தரமற்ற கோதுமையிலிருந்து தயார்செய்த மாவினால் செய்யப்பட்ட சப்பாத்திகள் பசியுடன் இருக்கின்ற ஏழைமக்களுக்குக் கிடைத்தன. இவ்வாறான சூழலில் பணக்காரருடைய மகனுக்கு திருமணம் நடந்தது.பணக்காரரின் புதிய மருமகள் பணக்காரரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தா். அவள் மிகவும் கண்ணியமாகவும், அக்கறையுடனும் அனைவரையும் அரவணைத்து செல்லும் குணத்துடனும் இருந்தாள் .பணக்காரரின் வீட்டிற்கு வந்தவுடன் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குகின்ற இடத்திற்கு வீணாக போகும் தரமற்ற கோதுமை அனுப்பப்படுவதை பற்றி அறிந்ததும், ஏழைகளுககு தரமம் என்ற பெயரில் தரமற்ற கோதுமையைக் கொடுப்பது தவறு என்று அவள் மிகவும் வருந்தினாள். அதனால் ஏழைகளின் பசியை போக்குவதற்கு தரமான கோதுமை அனுப்புவதை உறுதிசெய்திட விரும்பினாள் .பணக்காரனின் வீட்டில் பல்வேறு பணிகளையும் செய்வதற்கு நிறைய வேலைக்காரர்கள் இருந்தார்கள், ஆனால் புதிய மருமகள் தங்களுடைய வீட்டில் உணவு தயாரிக்கும் பொறுப்பை தானே ஏற்க முடிவு செய்தார். அதனால் முதல் நாளே, ஏழைகளுக்கும் இலவச உணவு வழங்கும் இடத்தில் பயன்படுத்தப்பட்ட அதே கோதுமை மாவைப் பயன்படுத்தி சப்பாத்தி செய்தார் பணக்காரரின் மருமகள். காலை உணவினை சாப்பிட அந்த பணக்காரர் அமர்ந்ததும், அவது தட்டில் ஏழைகளுக்கு வழங்கும் தரமற்ற கோதுமை மாவினால் தயார செய்த அதேபோன்ற சப்பாத்தியை பரிமாறினாள். தரமற்ற கோதுமை மாவினால் தயார்செய்த சப்பாத்தியைப் உண்பதற்காக வாயில் வைத்து தின்றபோது நன்றாக இல்லாததை கண்டு அதனை கீழேதுப்பிவிட்டு , ‘நம்முடைய வீட்டில் சப்பாத்தி செய்ய நல்ல கோதுமை மாவுதானே இருக்கும்.. அப்புறம் எதுக்கு இப்படி தரமற்ற மாவில் சப்பாத்தி செய்தீர்கள. என வினவினார் அதற்கு மருமகள், “மாமா, இது நீங்கள் ஏழைகளுக்கு இலவச உணவுவழங்குவதற்காக அனுப்பு கின்ற கோதுமை மாவில் செய்தது .” எனக்கூறினார் உடன் பணக்காரர் குழப்பமடைந்து, “எனக்கு ஒன்றும் புரியவில்லையே..” என்றாள். அதற்கு மருமகள், “மாமா! முற்காலத்தில் நாம் என்ன செய்தோமோ, அதையே இப்போது அடைவோம் அல்லவா, அதேபோன்று நாம் இப்போது எதைச் செய்கிறோமோ, அதுவே நம்முடைய வருங்காலத்திலும் கிடைக்கும். அதனால் நம்முடைய இலவச உணவு வழங்கும் இடத்தில், இந்த தரமற்ற கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் இவ்விடத்தை விட்டுச் செல்லும் போது இந்த மாவில் செய்த சப்பாத்தியை மட்டுமே உண்டு வாழ வேண்டும். அதனால்தான், இனிமேல் இதை நீங்கள உண்ணும் பழக்கம் ஏற்பட்டால், பிற்காலத்தில் துன்பம் குறையும் என்று நினைத்தேன்.“ என சமாதானம் கூறினாள். உடன்வடஇந்திய பணக்காரர் தன் தவறை உணர்ந்தார். மருமகளிடம் மன்னிப்பு கேட்டு தரமற்ற கோதுமை மாவை அன்றே தூக்கி எறிந்தார். அப்போதிருந்து, ஏழைக்கும் பசியுடன் வருகின்ற பொதுமக்களுக்கும் தரமுடைய புதிய கோதுமைமாவில் செய்யப்பட்ட சப்பாத்தியைப் பெறத் தொடங்கினர்.

கற்றல்: உதவி செய்யும்போது மக்கள் என்னைப் பாராட்ட வேண்டும், கைதட்ட வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது. மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடன்  செய்ய வேண்டும். ஒரு கையால் உதவிசெய்திடும்போது இன்னொரு கைக்குக்கூட தெரியாத அளவுக்கு ரகசியமாக இருக்க வேண்டும் எனக் கூறுவது உண்டு.


திங்கள், 7 நவம்பர், 2022

ஏன் மீண்டும் முயற்சிக்க வேண்டும்?

 

  தோல்வி பற்றிய ஆசிரியர்அறிவுரைராமு என்பவர் மிகுந்த ஆர்வத்துடன் புதியதாக ஒரு தொழிலைத் துவங்கினார், ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, அவரது வணிகம் வீழ்ச்சியடைந்தது. அதன் பின் சிறிது நாட்கள் கடந்தும் ராமு வேறு தொழில் எதுவும் துவங்கவில்லை.  

 அவரது நிலைமையை அறிந்த அவரது ஆசிரியர் அவரை தங்களுடைய வீட்டிற்கு அழைத்தார். ஆசிரியர் ராமுவை வரவேற்று, இருரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தபின் தற்போதைய நிலவரம் கூறித்து விவாதித்தனர். அப்போது ஆசிரியர், “நீ ஏன் வேறு தொழில் எதாவது செய்யக் கூடாது?” என்று கேட்டார். அதற்கு ராமு, “யா நான் ஏற்கனவே புதியதாக ஒரு தொழில் தொடங்கினேன். நான் அந்த தொழிலிறகாக மிகவும் கடினமாக உழைத்தேன், அந்த தொழிலிற்ாக எனது உடமைகளை அனைத்தையும் இழந்தேன். நான் நாள்முழுக்க ஓய்வெடுக்காமல் 24மணிநேரமும் வாரம் முழுவதும் வாரவிடுப்பெதுவும் எடுக்காமல் 7 நாட்களும் என்னுடைய புதிய தொழிலிற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டேன், ஆனால் அந்த வணிகம் தோல்வியடைந்து விட்டது", எனக்கூறினார்.  

  உடன் ஆசிரியர், "ஆனால் அதுதான் வாழ்க்கையின் உண்மையான களநிலவரமாகும், சில நேரங்களில் நாம் செய்திடும் தொழிலில் வெற்றி கிடைக்கும், வேறு சில நேரங்களில் தோல்விதான் கிடைக்கும் , தொழிலில் வெற்றியும் தோல்வியும் இயற்கையாக நடப்பதுதான் அதனால் நாம் துவங்கிடும் தொழிலை நிறுத்திவிடவேண்டும் என்று அர்த்தமல்ல" என்று ஆறுதல் கூற முயன்றார்.

   உடன் இராமு "வெற்றியை உறுதி செய்ய முடியாத போது, அந்த தொழிலை செய்து என்ன பயன்.", சற்று எரிச்சலுடன் பதில் கேள்வி கேட்டார்

   தொடர்ந்து ஆசிரியர் ராமுவை தன்னுடைய வீட்டுதோட்டத்தின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று, செத்துபோன தக்காளிச் செடியை காண்பித், “இதைப் பார்..” என்றார்

    ராமு குழம்பிப்போய், “தக்காளிசெடிகளெல்லாம் செத்து போய்விட்ட, வைகளினால் பயனேதுமில்லை. வற்றை ஏன் என்னிடம் காண்பிக்கின்றீ்ர்கள்?” என மிகவும் எரிச்சலுடன் கூறினார் 

   அதற்கு ஆசிரியர், “நான் வைகளுக்கான விதையை விதைத்தேன், போதுமான தண்ணீர் பாய்ச்சினேன், உரமிட்டேன், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தேன். நான் மிகவும் கவனமுடன் பார்த்து வந்தேன் ஆனாலும்வை இறந்துவிட்ட.” ஆசிரியர் சற்றுநேரம் நிறுத்தியபின், "நம்முடைய கடமை பணி செய்வது ஒன்றே.. நீ எவ்வளவு முயற்சி செய்து அயராது பாடுபட்டாலும், இறுதியில் என்ன நடக்கும் என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது, ன்னுடைய கையில் உள்ள நீசெய்திடும் பணியை மட்டுமே உன்னால் கட்டுப்படுத்த முடியும், மீதமுள்ளசெயல்கள் மற்றவர்களால் நடக்கும் என விட்டுவிடுக " எனக்கூறினார்

  .உடன் ராமு, “ஆனால் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்றால், எதையும் முயற்சி செய்து என்ன பயன்?” என சந்தேகம் எழுப்பினார். தொடர்ந்து ஆசிரியர் , “அவ்வாறு நினைத்துக்கொண்டு பலர் வாழ்க்கையில் பெரிதாக எதையும் செய்ய முயல்வதில்லை..”எனக்கூறினார்.

  உடன் இராமுஅப்படி நினைப்பதில் என்ன தவறு. இவ்வளவு கடின உழைப்பு, இவ்வளவு பணம், இவ்வளவு நேரம் செலவழித்த பிறகும், வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை எனில், இவ்வளவு செய்து என்ன பயன்..” என்று சொல்லிவிட்டு ராமு தங்களுடைய வீட்டிற்கு கிளம்பதயாராக இருந்தார்.

  உடன ஆசிரியர் இராமு புறப்படுவதை தடுத்து நிறுத்தி, “நீ கிளம்புமுன், உனக்கு இன்னொரு செயலை காண்பிக்க விழைகின்றேன்..” என்று கூறியவாறு . ராமுவை அருகிலிருந்த வேறொரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று காண்பித்தார்

  அங்கே பெரிய சிவப்பு தக்காளி பழங்கள் கொத்தாக காய்த்து கிடந்தன. உடன் இராமு, " வற்றை ஏன் என்னிடம் காண்பிக்கின்றீர்கள்?" என மீண்டும் எரிச்சலுடன் வினவியபோது ஆசிரியர், "நீ பார்க்கும் இந்த தோட்டத்தில் முந்தைய தோட்டத்தில் நன்கு பாடுபட்டும் இறந்துபோய்விட்டதே எனவேறு செடிகளை வளர்க்காமல் . நான் நிறுத்தவில்லை, அந்த தோட்டத்தில் இறந்த செடிகளைப் பார்த்தேன், பின்னர் வேறு புதியவிதைகளை வாங்கி நான் மீண்டும் இந்த தோட்டத்தில் புதிய விதைகளை விதைத்து அவற்றைப் பராமரித்தேன். அவை இந்த தோட்டத்தில் வளர்ந்த. ப்போது இந்த தோட்டத்தில் நன்கு காய்த்து தொங்குகின்றன

   தேபோன்று, நீ தோல்வி ஏற்பட்டது என துவண்டுவிடாமல் தொடர்ந்து வேறு சரியான செயல்களைச் செய்தால், ன்னுடைய வெற்றிக்கான வாய்ப்புகள் பெரிதும் அதிகரிக்கும். ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான ஒரு படி என முடிவுசெய்து தொடர்ந்து முயன்றால் தொழிலில் வெற்றி பெறமுடியும் .ஆனால் ஒன்று அல்லது இரண்டு தோல்விகளால் துவண்டு தொழில் எதையும் செய்வதில்லை என முடிவெடுத்தால், வாழ்க்கை பயனத்தில் க்கு எந்த வெற்றியும் கிடைக்காது."என மிகநீண்ட விளக்கமளித்தார் 

  ராம இப்போது வெற்றிக்கான இரகசியத்தை தன்னுடைய ஆசிரியரிடமிருந்து தெரிந்து கொணடார், அவர் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டார், மேலும் அவர் வேறொரு புதிய தொழிலை துவங்கிடும் உத்வேகத்துடன் வெளியேறினார்.

கற்றல். ராமுவைப் போன்றே, பலரும் தாங்கள் முயற்சி செய்யாமல் இருப்பதற்கு தங்கள் தோல்வியை ஒரு காரணமாகக் காண்பிக்கிறார்கள். நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மைதான். ஆனால், தொடர்ந்து வெற்றி பெற முயற்சிப்பவர்களுக்கு இன்று இல்லாவிட்டாலும் நாளை வெற்றி கிடைக்கும் என்பதுதான் உண்மையான களநிலவரமாகும்..அவ்வாசிரியர் அறிவுரை கூறுவது போன்று - ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான ஒரு படி என்பதை நினைவில் கொள்க.


ஞாயிறு, 6 நவம்பர், 2022

விழிப்(புடன்)பாய் இரு-- வங்கி பயன்பாட்டின் போதான.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 2.முறைகேடான(Vishing) அழைப்புகள்

செயல் முறை

வஞ்சகர்கள் தொலைபேசி அழைப்பு / சமூக ஊடகங்கள் மூலம் வங்கியாளர்கள் / நிறுவன நிர்வாகிகள் / காப்பீட்டு முகவர்கள் / அரசு அதிகாரிகள் போன்ற தோற்றத்தில் வாடிக்கையாளர்களை அழைக்கி றார்கள் அல்லது அணுகுகிறார்கள். நம்பிக்கையைப் பெற, ஏமாற்றுக் காரர்கள் வாடிக்கையாளரின் சரியானபெயர் அல்லது பிறந்த தேதி போன்ற சில வாடிக்கையாளர் விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சில சந்தர்ப்பங்களில், அனுமதியில்லாத நிதி நடவடிக்கைகளை தடுத்துநிறத்திடவேண்டி ,அவைகளுக்கு அபராதங்களை நிறுத்தி வைத்தல், கவர்ச்சிகரமான தள்ளுபடிகிடைத்தல் போன்றவற்றை அவசரமாக/ உடனடியாக செய்யவேண்டியுள்ளதால் கடவுச்சொற்கள் / OTP / PIN / அட்டை சரிபார்ப்பு மதிப்பு (Card Verification Value (CVV)) போன்ற ரகசிய விவரங்களைப் உடனடியாக பகிர்ந்திடுமாறு ஏமாற்றுபவர்கள் வாடிக்கையாளர்களை நெருக்குதல்ந்து / ஏமாற்றி.. வைகளை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற பின்னர்மோசடியாகப் பயன்படுத்தி கொள்கின்றனர்.


தற்காப்பு நடவடிக்கைகள்

வங்கி அதிகாரிகள் / நிதி நிறுவனங்கள் / இந்திய சேமநல வங்கி / எந்தவொரு உண்மையான நிறுவனமும் பயனர் பெயர் / கடவுச்சொல் / அட்டை விவரங்கள் / CVV / OTP போன்ற ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு வாடிக்கையாளர்களிடம் எப்போதும் கோருவதில்லை.

இந்த ரகசிய விவரங்களை யாருடனும், உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.




பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...