சனி, 26 மே, 2018

யாரையும் அலட்சியமாக எண்ணி தீங்குசெய்தால் அதற்கான பாதிப்பு கண்டிப்பாக எதிர்கொள்ளவேண்டியிருக்கும்


ஒரு நகரத்தின் கடைத்தெருவில் ஒரு கடையும் அதனருகில் குடிசையொன்றும் இருந்தன அந்த கடைமுதலாளி நம்முடைய பெரிய கடைக்கு பக்கத்தில் இந்த ஒலைக்குடிசை இருப்பதால் நம்முடைய கடையின் தோற்றமும் நன்றாக இல்லை வியாபாமும் சரியாக நடைபெறவில்லை அதனால் இந்த குடிசையை எப்படியாவது காலி செய்யவேண்டும் எனஅந்த குடிசையில் வாழும் வயதானவரை அழைத்து தான் அந்தகுடிசையை விலைக்குவாங்க விரும்புவதாகவும் அந்த வயதானவரின் விருப்பத்தை கோரினார் அவர் மறுநாள் தன்னுடைய விருப்பத்தைகூறுவதாக சென்றுவிட்டார் மறுநாள் கடைகாரரின் சூழ்ச்சியை தெரிந்து கொண்டு சரி தம்பி இந்த குடிசையை விற்றுவிடுகின்றேன் அதற்கான தொகை எவ்வளவு தருவாய் என்றார் தற்போதை இதனுடைய மதிப்பு இரண்டுரூபாய்தான் பெறும் அதனை உடனே வாங்கி கொள் என மிரட்டுவது போல் பதிலிருத்தார் கடைகாரர் சரிதம்பி அந்த தொகையை எனக்கு இப்போது தரவேண்டாம் நீயேவைத்து கொண்டு நான் நாடுபூராவும் இருக்கும் கோவில்களுக்கு கால்நடையாக சென்று திரும்பி வரும்போது அந்த தொகையை ஒவ்வொரு ஆறுமாதத்திலும் கையிலிருக்கும்தொகையின் இருமடங்காக உயர்த்தி கொண்டேவந்து நான் கோரும்போது அன்றைய நாளின் தொகை. கொடுக்க வேண்டும் அதற்காக 10ரூபாய் முத்திரைதாளில் ஒப்பந்தம் எழுதி பதிவுசெய்து தர வேண்டும் எனஅந்த வயாதனவர் கோரியதை ஏற்று உடன் 10ரூபாய் முத்திரைதாளில் ஒப்பந்தம் எழுதி பதிவுசெய்துநகலை பெரியவர்கையில் கொடுத்த விட்டார் அந்த ஏழைவயதானவரும் நாடுகளில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு நடைபயனமாக சென்றுவிட்டார் பன்னிரண்டு ஆண்டு கழித்து அந்த வயது முதிர்ந்த முதியோர்அந்த நகரத்திற்கு வந்து தன்னுடைய குடிசையை வாங்கிகொண்ட கடைகாரரிடம் வந்த தம்பி ஒப்பந்தபடி நான் கொடுத்த தொகையை ஒவ்வொரு ஆறுமாதத்திற்கும் இரண்டுமடங்காக உயர்த்தி கணக்கிட்டு வழங்கிடு என கோரியபோது கடைகாரர் மொத்தம் பன்னிரண்டு ஆண்டு ஒவ்வொரு ஆறுமாதத்திற்கும் இரண்டுரூபாய்என கணக்கிட்டால் 25 X 2 = ரூபாய் 50 தான் வருகின்றது இந்தாங்க ஐயா 500 ரூபாய்என வழங்கினார் ஆயினும் அந்த முதியவர் தம்பி சரியாக கணக்கிட்டால் ஒருகோடியே அறுபத்தேழுஇலட்சத்து ஏழுபத்தேழாயிரத்து இருநூற்று பதினாறு ரூபாய் நீதரவேண்டி வருகின்றது ஒப்பந்தபடி அந்த தொகையை நீகொடுக்கவேண்டும் என கோரினார் அவ்வளவு தொகை என்னால் தரமுடியாது என அந்த கடைகார்ர் மறுத்தார் அதனால் முதியவர் அந்த கடைகாரர் ஒப்பந்தபடி தொகை தரவில்லை என நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தார் உடன் கடைகார்ர் தன்னுடைய கடைவீடு ஆகியவற்றை விற்பணைசெய்தது மட்டுமல்லாமல் தான் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் விற்றுவந்த தொகை அனைத்தையும் நீதிமன்றத்தில் செலுத்தினார் அப்போதும் அந்த கடனை தீர்வுசெய்திடமுடியாமல் தத்தளித்தார் அதனால் யாரையும் அலட்சியமாக எண்ணி தீங்குசெய்தால் அதற்கான பாதிப்பு கண்டிப்பாக எதிர்கொள்ளவேண்டியிருக்கும்

ஞாயிறு, 13 மே, 2018

இந்திய ஆட்சி பணிக்கான நேர்முகத்தேர்வு


இந்திய ஆட்சி பணிக்கான நேர்முகத்தேர்வு நடந்தது அதில் இரு இளைஞர்கள் கலந்துகொண்டனர் தேர்வுக்குழு உறுப்பினர்கள் முதல்இளைஞனைஅழைத்து இந்தியாஎப்போது சுதந்திரம் அடைந்தது என்றகேள்வியை கேட்டனர் உடன் அந்த முதல் இளைஞன் அதற்காகமீகநீண்டநாட்களாக போராடவேண்டயிருந்து இறுதியில்அதிக சிரமத்துடன் 1947 இல் கிடைத்தது என பதிலிறுத்தார் அடுத்ததாக இந்தியசுதந்திரத்திற்காக யார்அதிகபாடுபட்டார்அந்த தலைவரின் பெயர் என்னஎன தேர்வாளர்கள் வினவினர் அந்தமுதல் இளைஞன் இந்தியசுதந்திரத்திற்காக பலர் அரும்பாடுபட்டனர் அவர்களுள் ஒருவர் பெயரைமட்டும் கூறினால் மற்றவர்கள் இந்திய சுதந்திரதிற்காக பாடுபடவில்லையாஎன்ற கேள்வி யெழும்அதனால் அனைவரும் அரும்பாடுபட்டனர் எனபதிலிறுத்தார் மூன்றாவதாக கையூட்டு பெறுவதுதான் இந்திய பொருளாதாரத்தின் மிகமுக்கிய எதிரியா எனவினவினர் தேர்வாளர்கள் உடன் முதல்இளைஞன் ஐயா இந்தகையூட்டு புகார்குறித்து ஆய்வுசெய்து அறிக்கைதருமாறு குழுஒன்று அமைக்கப்பட்டுள்ளதுஅந்த குழுவின்அறிக்கை கிடைத்தபின்னர் மட்டுமேஅதற்கானவிடையைஉறுதியாக கூறமுடியும் என கூறினார் தேர்வாளர்கள் கேட்ட அனைத்து கேள்விக்கும் முதல் இளைஞர் கூறியபதிலால் திருப்தியுற்று தம்பி வெளியேகாத்திரு மேலும் இந்த விவாதத்தை மற்றயாருக்கும் வெளியிடாதே என்ற உறுதியளிப்புடன் அனுப்பினர் வெளியவந்த முதல் இளைஞனை இரண்டாவது இளைஞன் தேர்வாளர்கள் எந்தெந்த கேள்விகேட்டனர் அதற்கு முதல்இளைஞன் கூறிய பதிலை கூறுமாறுமிகவம்வற்புறுத்திக தெரிந்து கொண்டார் பின்னர் இரண்டாவது இளைஞரை உள்ளே அழைத்தனர் இரண்டாமவரிடம் நீஎப்போது பிறந்தாய்எனகேட்டனர் உடன் இரண்டாவது இளைஞன் ஐயா அதற்காகமிகவும் கடுமையாக போராடினார்கள் இருந்தபோதிலும்இறுதியாக 1947 இல் நான் பிறந்தேன் எனபதிலிருத்தான் இந்த பதிலாள் தேர்வாளர்கள் குழம்பிவிட்டனர் சரிதம்பி உன்னுடைய தந்தையின் பெயர் என்ன என தேர்வாளர்கள் கேள்விகேட்டனர் உடன்ஐயா அதற்காகபலர்அரும்பாடுபட்டனர்அவர்களுள் ஒருவரின்பெயரை கூறினால் மற்றவர்களுக்கு துரோகம் செய்தவனாவேன்அதனால்பலரும் அரும்பாடுபட்டனர்எனஇரண்டாமவன் பதிலிறுத்தவுடன் தேர்வாளர்கள அனைவரும் மிகஅதிர்ச்சியாக ஒருவர்முகத்தை மற்றொருவர் பார்த்து கொண்டனர் இறுதியாக சரி தம்பி உனக்குபுத்தி தெளிவாகஇல்லையா என கேட்டனர் உடன் ஐயாஇந்த புகார்குறித்து ஆய்வுசெய்து அறிக்கைதருமாறு குழுஒன்று அமைக்கப்பட்டுள்ளதுஅந்த குழுவின்அறிகைகிடைத்தபின்னர் மட்டுமே அதற்கானசரியான விடையைஉறுதியாக கூறமுடியும் எனகூறினார் இதனை கேளவியுற்ற அனைத்து தேர்வாளர்களும் மிகவும் அதிர்ச்சியுடன் அப்படியே சிலைபோன்றஅமர்ந்துவிட்டனர்.

ஞாயிறு, 6 மே, 2018

மற்றவர்களை பற்றி அவர்கள் இல்லாதபோது புறங்கூறுவதை விட்டிடுக


ஒரு பள்ளியில் பயிலும் மாணவன் அம்மாணவனுடைய ஆசிரியரும் சேர்ந்து பள்ளிக்கு அருகிலிருந்த பூங்காவில் வழக்கம்போன்ற விவாதித்துகொண்டு காலாற நடந்து சென்றுகொண்டிருந்தனர் அப்போது அம்மாணவன் தன்னுடைய ஆசிரியரிடம் "ஐயா நான் என்னுடைய நண்பர்களை பற்றி அவர்கள் இல்லாதபோது அவர்களைபற்றிய குறைகளை விவாதிக்கும் மனநிலை எப்போதும் எனக்கு ஏற்படுகின்றது இதனை நான் எவ்வாறு தவிர்ப்பது என எனக்கு அறிவுரை கூறுங்கள்" எனக்கோரினான் ஆசிரியர் ஒரு நிமிடம் அமைதியாக இருந்த பின்னர், 'தம்பி நீ கைபேசி வைத்திருக்கின்றாயா?'எனவினவினார் உடன் அந்த மாணவன் தனது கைபேசியை எடுத்துஆசிரியரிடம் காண்பித்தான். அது சமீபத்தில் வெளியிடப்பட்ட மாதிரிகளில் ஒன்றாகும்.அம்மாணவன் அந்த கைபேசியை அதிகமாக நேசித்தான் பின்னர் ஆசிரியர் மாணவனிடம், அந்த கைபேசியை அருகிலுள்ள சேற்றுப் பகுதியில் தூக்கி வீடிஎறிந்திடுமாறு கூறினார். அவ்வாறான ஆசிரியரின் ஆலோசனையை கேள்வியுற்றதும் அதிர்ச்சி அடைந்த மாணவன், 'அதுஎப்படி ஐயா நான் அதிகம நேசிக்கும் புதியதாக வாங்கிய என்னுடையகைபேசியை சேற்றில் தூக்கி எறிய முடியும்? இதனை நான் அதிக பணம் செலவழித்து வாங்கினேன் ' என அந்த மாணவன் பதிலிறுத்தான் அதனை தொடர்ந்து ஆசிரியர் 'தம்பி உன்னுடைய நண்பர்களின் மரியாதையும் கூட மற்றவர்களுடைய பார்வையில் சிறந்ததாகவும் மதிப்புமிக்கதாகவும் இருக்கிறது. அதனை எவ்வாறு எளிதாகக் குறைக்க முடியும்? ' அதனால் அவ்வாறு மற்றவர்களை பற்றி அவர்கள் இல்லாதபோது புறங்கூறுவதை விட்டிட்டு நல்ல மாணவனாக நடந்து கொள்அப்போதுதான் உன்னைபற்றியும் மற்றவர்கள் மரியாதை குறைவாக நடத்தாமல் இருப்பார்கள் என அறிவுரைகூறினார் அதன்பின்னர் அம்மாணவன் மனந்திருந்தி அவ்வாறு புறங்கூறுவதை அறவே தவிரத்து வந்தான்

திங்கள், 30 ஏப்ரல், 2018

பொய் பேசினாலும் பொருத்தமாக பேசுக


ஒரு இரவு கல்லூரியில் பயிலும் நான்கு கல்லூரி மாணவர்கள் அடுத்தநாள் நடக்கவிருக்கும் மாதாந்திர தேர்விற்கு தயார்செய்திடாமல் இரவு விருந்தில் கலந்து கொண்டு வீணாக கழித்துவிட்டு அடுத்த நாள் காலையில் அழுக்குடன் கூடிய ஆடையைஅணிந்து கொண்டு "நேற்று இரவு எங்களுடைய நண்பனின் திருமணத்திற்கு சென்று தாங்கல் சென்றுதிரும்புவதற்கு பயன்படுத்திய காரின் டயர் வெடித்து விட்டதால் கைகளால் அந்த காரினை இரவு தூங்காமல் தள்ளிக்கொண்டே வந்து காலையில் தான் வந்த சேர்ந்தோம் அதனால் எங்களால் இன்றைய தேர்விற்கு தயாராக முடியவில்லை வேறு நாளிற்கு இந்த தேர்வினை தள்ளிவைத்தால் நல்லது ஐயா!” என கல்லூரி முதல்வரிடம் வேண்டிகேட்டு கொண்டனர் இவர்களுடைய தோற்றத்தை பார்த்த அக்கல்லூரிமுதல்வர் இவர்களிடம்உண்மைநிலையை எவ்வாறு அறிந்து கொள்வது என .யோசித்து பின்னர் சரி தம்பிகளா நீங்கள் கூறுவதை நான் ஏற்றுகொள்வதாக இருந்தால் நான் கூறுமாறு செய்திடுங்கள் என நான்கு கல்லூரிமாணவர்களையும் தனித்தனிய அறையில் உட்கார வைத்து ஒரு வெள்ளைதாளில் அவர்களனைவரும் சென்றுவந்த காரின் டயர் எத்தனைமணிக்கு எந்தஇடத்தில் வரும்போது வெடித்தது அவ்வாறு வெடித்த டயர் முன்பகுதி சக்கரங்களெனில் எந்தபக்கசக்கரத்தினுடையது பின்பகுதி சக்கரங்களினெனில் எந்தபக்கசக்கரத்தினுடையது என தனித்தனியாக பதிலெழுதி வருமாறுகோரினார் உடன் அந்த கல்லூரி மாணவர்கள் நால்ரும் தங்களுடைய குட்டுவெளிப்பட்டுவிட்டதால் தங்களை மன்னிக்குமாறு கோரினர்

திங்கள், 23 ஏப்ரல், 2018

நம் வாழ்நாளின் நோக்கம் என்ன?


50 பேர் கொண்ட ஒரு கருத்தரங்கில் கூட்டத்தில் அந்த கூட்டத்தின் பேச்சாளர் திடீரென்று தன்னுடைய பேச்சினை நிறுத்தி ஒவ்வொருவரிடமும் பலூன் ஒன்றினை கொடுத்தார். தொடர்ந்து ஒவ்வொருவரும் மார்க்கர் பேனாவைப் பயன்படுத்தி அவரவர்களின் பெயரை அவரவர்களுக்கு வழங்கிய பலூன்களில் எழுதும்படி கோரினார். பின்னர் அனைத்து பலூன்களும் ஒன்றாக சேகரிக்கப்பட்டு அருகிலிருந்க மற்றொரு அறையில் வைக்கப்பட்டன.கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் பலூன் வைக்கப்பட்ட அறைக்குள்சென்ற 5 நிமிடங்களுக்குள் அவரவர்களும் தத்தமது பெயர் எழுதப்பட்ட பலூனை கண்டுபிடித்து எடுத்துவருமாறு கோரப்பட்டனர் உடன் எல்லோரும் அந்த அறைக்குள் சென்று ஒருவருக்கொருவர்முட்டி மோதி தங்களுடைய பெயர் எழுதப்பட்ட பலூனை தேடிக்கொண்டேஇருந்தனர் அனுமதிக்கப்பட்ட5 நிமிடங்களின் இறுதியில் யாராலும் தம்முடைய பெயர் எழுதிய பலூனை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதன்பின்னர் அப்பேச்சாளர் பார்வையாளரிடம் அதே அறைக்குள் சென்ற ஏதாவதுவொரு பலூனை எடுத்துவருமாறு கோரினார் இப்போது ஓரிரு நிமிடங்களில் அனைவரும் ஆளுக்கொரு பலூனை எடுத்து கொண்டுவந்தசேர்ந்தனர் இப்போது அவர்கள் அனைவரும் ஆளுக்கொன்றாக எடுத்துவந்த பலூனில் எழுதியுள்ள பெயரை படித்துபார்க்கு மாறு கோரப்பட்டனர் என்ன ஆச்சர்யம் எல்லோருக்கும் அவரவர்களின் சொந்தபெயர்களுடன் கூடிய பலூன் கிடைத்திருந்தது.

பொதுமக்களே இதே போன்றதுதான் நம்முடைய வாழ்க்கையும் எல்லோரும் தாம் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும் எனஎல்லோரும் வெளிப்படையாக மகிழ்ச்சியான வாழ்க்கையை , அது எங்கே என்று தெரியாமல் தேடுகிறார்கள் அவ்வாறு முயல்வதால் நாமனைவரும் மகழ்ச்சியற்று ஒருவருக்கொருவர் அடித்துகொண்டு அல்லல்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அதற்கு பதிலாக மற்றவர்களுக்கு தொந்திரவு வழங்காமல் வெளியே எங்கும் தேடாமல் அவரவர்களும் அவரவர்களின் சொந்த வாழ்க்கையை வாழ்ந்தால் மகிழ்ச்சியை பெறுவீர்கள். இதுதான் மனித வாழ்க்கைக்கான நோக்கம். என பேசிமுடித்தார்

சனி, 14 ஏப்ரல், 2018

நம்முடைய உயிருக்கு ஆபத்து எனஉணரும்போது மட்டுமே நம்முடைய அடிப்படையானசெயலை பயன்படுத்திடும் நம்முடைய மனப்பாண்மையை ஒழித்திட்டால் நாம் வாழ்வில் முன்னேற முடியும்


முன்னொரு காலத்தில், அரசன்ஒருவன் தம்முடைய அண்டைநாட்டின் அரசனை மரியாதை நிமித்தமாக சந்திக்கசென்றார் அதனை தொடர்ந்து அந்த அண்டை நாட்டு அரசனும்அதனை கவுரவிக்கும் பொருட்டு இவருக்கு ஒரு ஜோடி புறாக்களை பரிசாக வழங்கினார் . அவை பார்ப்பதற்கு மிக அழகானதாக இருந்தன தன்னுடைய நாட்டிற்கு திரும்பியவுடன் அந்த பறவைகளை நன்கு பாதுகாத்து பயிற்றுவிப்பதற்காக ஒரு பயிற்சியாளரை நியமித்தார் .அப்பயிற்சியாளரும் அந்த பறவைகள் இரண்டிற்கும் பறப்பதற்காக ஒரேமாதிரியான பயிற்சி வழங்கினார் ஆயினும் அவ்விரண்டில் ஒன்றுமட்டும் மிகஅழகாக பறந்து சென்று திரும்பி வந்தது மற்றொன்று மட்டும் பயிற்சியாளர் எவ்வளவு முயன்றாலும் எவ்வளவுநேரம் முயன்றாலும் பறக்காமல் அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தது அரசரும் வெவ்வேறு பயிற்சியாளர்களை கொண்டு முயன்று பார்த்தார் அப்போதும் அந்த மற்றொரு பறவைமட்டும் பறக்கவேயில்லை ஆனால் அதற்கு வழங்கப்பட்ட உணவுத்தானியங்களை மட்டும் இரண்டும் சமமாக உண்டன தண்ணீரை சமமாக அருந்தின அதனால் தன்னுடைய நாட்டின் கிராமத்திலுள்ள மக்களுள் யாராவது ஒருவர் வந்து அந்த பறவையை பறக்கசெய்யுமாறு கோரினார் அதனைதொடர்ந்து ஒரு கிராமத்து விவசாயிஒருவர் வந்துசேர்ந்தார் என்ன ஆச்சரியம் அந்த கிராமத்து விவசாயியின் பயிற்சி ஆரம்பித்தவுடன் அந்த மற்றொரு பறவை மட்டும் வானத்தில் பறந்து செல்வதை அந்த அரசன் பார்த்தாார் உடன் அந்த விவசாயியிடம் "மற்றவர்கள் அனைவரும் எவ்வளவுதான் முயன்றாலும் அந்த பறவையை பறக்கசெய்ய முடியாத செயலை அந்த விவசாயி வந்தவுடன் மட்டும் எவ்வாறு செய்யமுடிந்தது" என வினவினார் அதற்கு அவ்விவசாயி "மிகஎளிது ஐயா அந்த பறவை அமர்ந்திருந்த கிளையின் அடிப்பகுதியை வெட்ட ஆரம்பித்தேன் உடன் நான் வெட்டிய கிளைமுறிந்துபோனால் தன்னுடைய உயிருக்கே ஆபத்து ஏற்படும் என அந்த மற்றொரு பறவை பறக்க ஆரம்பித்துவிட்டது" என பதில்கூறினார் நம்முடைய உயிருக்கு ஆபத்து எனஉணரும்போது மட்டுமே நம்முடைய அடிப்படையானசெயலை பயன்படுத்திடும் நம்முடைய மனப்பாண்மையை ஒழித்திட்டால் நாம் வாழ்வில் முன்னேற முடியும்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

எதிரில் தெரியும் பலாப்பழத்தைவிட கையிலிருக்கும் சிறிய கலாப்பழமே சிறந்தது


அது ஒரு மிகவும் வெம்மைமிகுந்த கோடைக்காலநாளாகும் காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒன்று மிகவும் பசியோடு உணவு எதுவும் கிடைக்காமல் உணவிற்காக அங்கிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்து ஆனாலும் ஒரு சிறிய முயலைகூட தன்னுடைய உணவிற்காகஅந்த சிங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை அதற்குமேல் அந்த வெயிலில் இரைதேடமுடியாதுஎன சோர்வுற்று ஒருமரத்தின் நிழலில் இளைப்பாறி சிறிதுநேரம் ஓய்வெடுத்த-பின்னர் தன்னுடைய உணவிற்கானவேட்டையை தொடரலாம் என முடிவு-செய்து அந்த மரத்தின் கீழ் வந்தது அப்போது வெயிலிற்காக சிறிதுநேரம் ஓய்வெடுக்கலாம்என சிறியமுயல் ஒன்று அதே மரத்தில்ஓய்வெடுத்து கொண்டிருந்தது உடன் அந்த சிறியமுயலை சிங்கமானது தன்னுடைய வாயால் பற்றி உண்ணலாம் எனமுயலும் போது, மான் ஒன்று வெயிலிற்காக அதே மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுக்கலாம் என வந்து கொண்டி-ருந்ததை கண்டது அதனால் சிங்கமானத தன்னுடைய பிடியில் இருந்த முயல் மிகவும் சிறியது நம்முடைய பசிக்கு சோளப்பொறி போன்று பத்தாது அதனால் இந்த சிறியமுயலை வாயில் வைத் துகொண்டு பெரிய அந்தமானை பிடித்து உண்ண-முடியாது என தன்னுடைய வாயால் கவ்வியிருந்த சிறியமுயலை விட்டிட்டு மானை பிடிப்பதற்காக தாவியது மரத்தின் நிழலில் சிங்கம் இருந்ததை ஏற்கனவே பார்த்து விட்ட மானானது தற்போது உயிர்பிழைத்தால் போதும் நிழலில் ஒதுங்கி ஓய்வெடுப்பதை பின்னர் பார்த்து கொள்ளலாம் என சிட்டாக ஒடியது சிங்கமானது வெகுதொலைவு வரை அந்த மானை தூரத்தி சென்றாலும் சிங்கத்தால் அந்த மானை பிடிக்கமுடியவில்லை அதனால் அந்த சிங்கமானது மானையும் பிடிக்கமுடியாமல் கையிலிருந்த சிறியமுயலையும் விட்டுவிட்டோமே என சோர்வுற்ற அருகிலிருந்த மரத்தின் நிழலில் பசியால் அதற்குமேல் ஓடமுடியாமல் படுத்துவிட்டது எதிரில் தெரியும் பலாப்பழத்தைவிட கையிலிருக்கும் சிறிய கலாப்பழமே சிறந்தது அதிக மதிப்புள்ளதுஎன அறிந்து கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...