வியாழன், 9 ஆகஸ்ட், 2012


ஒரு தந்தை தன்னுடைய மூன்று மகன்களையும் அழைத்து ஒவ்வொருவருக்கும் ரூபாய் 100 வீதம் வழங்கி இந்த பணத்திற்கு உங்களுக்கு விருப்பமான பொருளை கொள்முதல் செய்து இந்த வீட்டின் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கபட்ட அறைமுழுவதும் நிரப்பிவிடுங்கள் என்று கூறினார்

உடன் முதல் மகன் தனக்கு வழங்கபட்ட ரூபாய் 100 க்கு வண்டி நிறையுமாறு நெல் அறுவடையின்போது களத்துமேட்டில் கழிவாக வரும் வைக்கோலை வாங்கிவந்து நிரப்பினான் அவனுக்கு ஒதுக்கீடு செய்யபட்ட அறை நிரம்பவில்லை

இரண்டாவது மகன் தனக்கு வழங்கபட்ட ரூபாய் 100 க்கு பருத்தியிருந்து பறிக்கபடும் பஞ்சு மூட்டைகளை வாங்கிவந்து நிரப்பினான் அவனுக்கு ஒதுக்கீடு செய்யபட்ட அறை நிரம்பவில்லை

மூன்றாவது மகன் தனக்கு வழங்கபட்ட ரூபாய் 100 ல் ஒரே ஒருரூபாய்க்கு மட்டும் ஒரு மெழுகு வர்த்தியை கடையில் வாங்கிவந்து விளக்காக ஏற்றி வைத்தான் உடன் அவனுக்கு ஒதுக்கீடு செய்யபட்ட அறைமுழுவதும் அம்மெழுகுவர்த்தியின் ஒளி நிரம்பியது

உடன் அவர்களுடைய தந்தையானவர் பார்த்தீர்களா பிள்ளைகளை அறிவுக்கூர்மையுடன் சிறிய தொகையாகஅல்லது செயலாக இருந்தாலும் அனைவரும் விரும்பும் வண்ணம் நடப்பதுதான் சிறந்த செயலாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...